Categories
Ayodhya Kandam

பரதனின் உயர்ந்த ராமபக்தி

bharatha vasishta
96. வசிஷ்டர் பரதனை விமரிசையாக சபைக்கு வரவேற்று அவனை முடி சூட்டிக் கொள்ளும்படி வேண்டுகிறார். பரதன் அவரைக் கண்டித்து ‘அயோத்தியும் நானுமே ராமனின் சொத்து. தசரதருக்கு பிறந்த நான் எப்படி ராமனின் சொத்தை அபகரிப்பேன்? என் மனம் மாறாமல் இருக்க இங்கிருந்தே வனத்தில் இருக்கும் தர்ம வடிவான ராமரை வணங்குகிறேன். சுமந்திரரே! படை கிளம்பட்டும். நாமும் புறப்படுவோம்.  ராமனை காட்டிலிருந்து அழைத்து வருவோம்’ என்று உத்தரவு இடுகிறான்.

[இங்கிருந்தே ராமரை வணங்குகிறேன்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/96%20bharathan%20rama%20bhakthi.mp3]

Categories
Ayodhya Kandam

ராமனே ராஜா

Tirta Ganga Palace
95. பரதனிடம் மந்திரிகள் முடி சூடிக்கொள்ளும்படி சொல்கிறார்கள். பரதன் அதை மறுத்து ‘அனைவரும் சென்று ராமனுக்கு காட்டிலேயே முடி சூட்டி அவனை அழைத்து வருவோம். சில்பிகளைக் கொண்டு அயோத்தியிலிருந்து கங்கை கரைக்கு ஒரு பாதை அமையுங்கள்’ என்று உத்தரவு இடுகிறான். அந்த ஆணைப்படி சில்பிகள் கிணறுகளும், குளங்களும், அணைகளும், நிழல் தரும் மரங்களும், தங்குமிடங்களும், கொண்ட ஒரு பாதையை வடிவமைக்கிறார்கள்.
[அயோத்தியிலிருந்து கங்கைக்கரைக்கு பாதை]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/95%20raman%20thaan%20rajaa.mp3]

Categories
Ayodhya Kandam

தசரதர் ஈமக்கடன்

bharatha_dasaratha
94. வசிஷ்டர் பரதனிடம், தசரதரின் ஈமக்கடன்களை செய்யும்படி சொல்கிறார். பரதனும் சத்ருக்ணனும் முறைப்படி தசாதரின் உடலை தகனம் செய்துவிட்டு, பன்னிரெண்டாம் நாள் ஸ்ராத்தம் செய்து, பதிமூன்றாம் நாள் அஸ்தியை எடுக்கும் போது தரையில் விழுந்து புரண்டு அழுகிறார்கள். வசிஷ்டரும் சுமந்திரரும்  ‘பிறக்கும் எவர்க்கும் இறப்பு உண்டு. மனத்தை தேற்றிக் கொள்ளுங்கள்’ என்று கூறி அவர்களை சமாதானம் செய்கிறார்கள். மறுநாள் சத்ருக்ணன் கூனியை பார்த்த போது அவளை கிழே தள்ளி அடிக்க முற்படுகிறான். அப்போது பரதன், ‘நாம் இவளைக் கொன்றால் ராமர் நம்மோடு பேசவும் மாட்டார். விட்டுவிடு’ என்று கூறி அழைத்து செல்கிறான்.
[தசரதர் ஈமக்கடன்]

[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/94%20dasarathar%20iimakkadan.mp3]
Categories
Ayodhya Kandam

பரதன் தன்னிலை விளக்கம்

bharathan kousalya
93. பரதன் மேலும் கைகேயியிடம் ‘நீ கௌசல்யா தேவி தன் ஒரே மகனைப் பிரிந்து எவ்வளவு துன்பம் அடைவாள் என்பதைக் கூட நினைத்து பார்க்கவில்லையே’ என்று வருந்துகிறான். கௌசல்யா தேவி வந்து பரதனிடம் ‘உனக்கு திருப்தி தானே! என்னையும் காட்டிற்கு அழைத்துச் சென்று என் மகனிடம் விட்டுவிடு’ என்கிறாள். பரதன் பல கடுமையான பாபங்களைக் குறிப்பிட்டு ‘எவன் விருப்பத்தின் பேரில் ராமர் காட்டிற்கு போனாரோ அவன் இந்த பாபங்களை அடையட்டும்’ என்று கூறி ராமர் காட்டிற்கு போனதுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விளக்குகிறான். கௌசல்யா தேவி மனம் மாறி அவனை சமாதானம் செய்கிறாள்.
[பரதன் கௌசல்யா தேவியை சமாதானம் செய்தல்]

[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/93%20bharathan%20kousalya.mp3]
Categories
Ayodhya Kandam

பரதன் கோபம்

bharatha kaikeyi
92. பரதன், ராமர் எங்கே என்று கேட்கும் போது, கைகேயி, தான் ராமரை காட்டிற்கு அனுப்பியதைக் கூறுகிறாள்.  ‘இப்போது நீயே அரசன். பட்டம் சூட்டிக் கொண்டு ஆட்சி செய்’ என்று கூறுகிறாள். பரதன் கடும் கோபம் அடைந்து கைகேயியை நிந்திகிறான். ‘ஒழுக்கத்தில் சிறந்த இந்த குலத்திற்கு பெரும் கேடு விளைவித்து விட்டாயே! உன் பாபத்திற்கு நீ நரகத்திற்கு தான் போவாய். ராமன் உனக்கு என்ன தவறிழைத்தான்? எனக்கு அழியாத பழியை தேடித் தந்து விட்டாய். நான் உன்னோடு இனி பேச மாட்டேன். ராமரை காட்டிலிருந்து அழைத்து வந்து அவனுக்கு முடி சூட்டி நான் அவனுக்கு அடிமையாக இருப்பேன்.’ என்று கூறுகிறான்.
[பரதன் கோபம்]

[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/92%20bharathan%20kaikeyi.mp3]
Categories
Ayodhya Kandam

பரதன் அயோத்தி திரும்பினான்

bharatha
91. பரதன் வசிஷ்டர் அனுப்பிய தூதர்களோடு அயோத்தி திரும்புகிறான். அயோத்தி நகரம் களை இழந்து காணப் படுவதைக் கொண்டு அரசரின் உயிருக்கு ஆபத்தாய் இருக்கும் என்று அனுமானம் செய்கிறான். தசரதர் அரண்மனையில் அவர் இல்லாததால் கைகேயி அரண்மனைக்கு சென்று அவளைக் காண்கிறான். கைகேயி, தசரதர் காலகதி அடைந்து விட்டதை தெரிவித்ததும் வருந்தி அழுகிறான்.
[பரதன் அயோத்தி திரும்பினான்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/91%20bharathan%20ayodhi%20thirumbinaan.mp3]

Categories
Ayodhya Kandam

பரதனை அழைத்து வாருங்கள்

bharathan
90. வசிஷ்டர் முக்கிய மந்த்ரிகளை கேகேய தேசத்திற்கு அனுப்பி, தசரதர் காலமானதையோ ராமன் காட்டிற்கு போனதையோ சொல்லாமல் பரதனை அழைத்து வரும்படி உத்தரவு செய்கிறார். பரதன் அன்றிரவு கெட்ட கனவுகள் கண்டு வருத்தத்தில் இருக்கிறான். மந்த்ரிகள் அவசரப் படுத்தி அழைத்தவுடன் தாத்தா அஸ்வபதி மஹாராஜாவிடமும் மாமா யுதாஜித் இடமும் உத்தரவு பெற்று, சத்ருக்னனோடு அயோத்தி கிளம்புகிறான்.
[பரதனை அழைத்து வாருங்கள்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/90%20bharathan%20dusswapnam.mp3]

Categories
Ayodhya Kandam

அராஜகத்தால் வரும் ஆபத்துக்கள்

dasharatha_death_bed
89. தசரதர் காலகதி அடைந்ததை அறிந்து கௌசல்யா தேவியியும் மற்ற மனைவிகளும் புலம்பி அழுகிறார்கள். அயோத்தி நகரமே சோகத்தில் மூழ்குகிறது. எல்லோரும் கைகேயியை திட்டுகிறார்கள். மந்த்ரிகளும் பெரியோர்களும் தசரதரின் உடலை எண்ணெய் குடத்தில் பத்திரப் படுத்திவிட்டு சபையைக் கூட்டுகிறார்கள். ‘அரசன் இல்லாதிருந்தால் நாட்டிற்கு பல கேடுகள் விளையும். அதனால் உடனடியாக அதற்கு தீர்வு காண வேண்டும்’ என்று அவர்கள் வசிஷ்டரிடம் வேண்டுகிறார்கள்.
[அரசனில்லாத நாடு]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/89%20dasarathar%20deha%20rakshanam.mp3]

Categories
Ayodhya Kandam

தசரதர் வியோகம்

dasaratha dies
88. தசரதர் சொன்ன செய்தியைக் கேட்டு அந்த முனிகுமாரனின் கண்ணிழந்த பெற்றோர்கள், தங்கள் பிள்ளையை மடியில் கிடத்திக்கொண்டு வேதனையில் புலம்புகிறார்கள். பின்னர் அவனுக்கு அந்திம கார்யங்கள் செய்து விட்டு, அந்த முனிவர் தசரதரிடம் ‘நான் என் கடைசிக் காலத்தில் எப்படி என் மகனை பிரிந்து தவிக்கிறேனோ அப்படி நீயும் உன் கடைசி காலத்தில் உன் மகனைப் பிரிந்து தவிப்பாய்’ என்று சாபம் இடுகிறார். தசரதர் இவற்றை எல்லாம் கௌசல்யையிடம் சொல்லி வருந்துகிறார். அன்றிரவு ராமரின் பிரிவு தாங்காமல் அவனையே நினைத்தபடி தசரதர் உயிர் துறக்கிறார்.
[தசரதர் வியோகம்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/88%20dasarathar%20viyogam.mp3]

Categories
Ayodhya Kandam

முனி குமாரன் வதம்

shravankumar
87. தசரதர் கௌசல்யா தேவியிடம் தான் இளமையில் அறியாமல் செய்த ஒரு தவற்றைப் பற்றி கூறுகிறார். காட்டில் வேட்டையாட சென்றபோது ‘யானை நீர் அருந்துகிறது’ என்றெண்ணி தசரதர் ஒரு முனிகுமாரனின் மீது அம்பு எய்து விடுகிறார். அந்த முனி குமாரன் ‘ஒரு அம்பினால் என்னையும் என் கண்ணில்லாத பெற்றோரையும் கொன்று விட்டீர். என் தந்தை உங்களை சபிக்காமல்  என்று கூறி உயிர் விடுகிறான். தசரதர் நடந்த விஷயத்தை அவன் பெற்றோரிடம் சென்று தெரிவிக்கிறார்.
[முனி குமாரன் வதம்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/87%20muni%20kumaran%20maranam.mp3]