Categories
Ayodhya Kandam

சத்யமே நித்யம்

Ram meet bharat 2110. ராமர் பரதனிடம் மேலும் ‘நான், நீ, உறவு, பிரிவு, ராஜ்யம், வனவாசம் எல்லாம் அநித்தியம். சத்யமே நித்யம். சத்யத்தை காப்பாற்றியதால் நம் தந்தையார் சுவர்க்கம் அடைந்துள்ளார். அவரைப் பற்றி வருந்த வேண்டாம். அவர் வார்த்தைப்படி நாம் நடக்க வேண்டும்’ என்கிறார். பரதன் ‘இப்படி ஒரு ஞானவானகிய நீ எங்களை நல்வழிப்படுத்த வேண்டாமா? இங்கு காட்டில் கஷ்டப் படுவதை விட ராஜ்யத்தை வகித்து அந்த கஷ்டப்படலாமே? உன்னை தலை வணங்கி கேட்கிறேன். பரமேஸ்வரன் உயிர்களிடத்தில் கருணை செய்வது போல, என்னிடத்திலும் உன் பந்துக்களிடதிலும் கருணை செய்யவேண்டும்’ என்று வேண்டுகிறான்.

[தர்மத்தை காக்க வேண்டும்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/110%20sathyame%20nithyam.mp3]

Series Navigation<< ராம கீதைராமர் நாஸ்திகத்தை கண்டித்தார் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.