Categories
Ayodhya Kandam

ராமர் நாஸ்திகத்தை கண்டித்தார்

ram_japali111. ராமர் பரதனிடம் மேலும் ‘நான் காட்டில் ஒரு குறையும் இல்லாமல் இருப்பேன். நீ வருந்தாதே. அயோத்திக்கு திரும்பிச் செல்.’ என்று கூறுகிறார். ஜாபாலி என்ற முனிவர் ‘ராம! கையில் கிடைத்ததை அனுபவி. அப்பா அம்மா சத்யம், சாஸ்திரம் என்று மற்றதை நினைத்து ஏன் கவலைப் படுகிறாய்?’ என்று நாஸ்திகமாக பேசியதும் ராமர் ‘சத்தியமே எல்லாவற்றிலும் மேலானது. அதுவே பதவிக்கும், பணத்துக்கும், பக்திக்கும், முக்திக்கும் மூலம். சத்யத்தை கைவிட மாட்டேன். நாஸ்திகம் பேசும் உங்களை என் தந்தை அருகில் வைத்திருந்ததே தவறு என்று நினைக்கிறேன்.’ என்று கடிந்து கூறியதும், ஜாபாலி ‘உன்னை திரும்ப அழைத்து போகும் எண்ணத்தில் சிலது பேசி விட்டேன். இனி நாஸ்திகம் பேச மாட்டேன்’ என்று மன்னிப்பு கேட்கிறார்.

[ஜாபாலி மத நிரஸனம்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/111%20jabali%20kandanam.mp3]

Series Navigation<< சத்யமே நித்யம்தந்தை சொல்மிக்க மந்திரமில்லை >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.