122. சீதை ராமரிடம், “நீங்கள் பொய் பேச மாட்டீர்கள். பிறன் மனைவியை ஏறெடுத்தும் பார்க்க மாட்டீர்கள். ஆனால் ராக்ஷசர்களைக் கொல்வேன் என்று ரிஷிகளிடம் வாக்களித்தீர்கள். நம்மிடம் எந்த தவறும் செய்யாத ராக்ஷசர்களை ஏன் கொல்ல வேண்டும்? காட்டில் தபஸ்விகளாக இருந்து விடலாமே” என்று கேட்கிறாள். ராமர் “ஜனகர் மகளான நீ கேட்பது சரி தான். ஆனால் தபஸ்விகளான இந்த ரிஷிகள் என்னிடம் அபயம் கேட்டார்கள். நான் ரிஷிகளை என்னைச் சேர்ந்தவர்களாக நினைக்கிறேன். அதனால் ராக்ஷசர்களைக் கொன்று அவர்களின் துன்பத்தைப் போக்குவதாக வாக்களித்தேன். எனவே உயிரைக் கொடுத்தாவது அந்த வாக்கை காப்பேன்.” என்று பதில் கூறுகிறார்.
[ஸீதா ராம ஸம்பாஷணை]
Categories