ஸங்க்ஷேப ராமாயணம் ஒலிப்பதிவு (Audio of the first 100 slokams of Balakandam in Valmiki Ramayana)
ஸங்க்ஷேப ராமாயணம் என்பது வால்மீகி ராமாயணத்தின் முதல் காண்டமான பால காண்டத்தின் முதல் ஸர்கம். வால்மீகி முனிவர் நாரத பகவானிடம் ‘இந்த உலகில், சத்யம், தர்மம், அழகு, படிப்பு, வீரம், ஒழுக்கம் என்று எல்லா நல்ல குணங்களும் கொண்ட மனிதன் யாரேனும் உண்டா?’ என்று கேட்க, நாரத பகவான் ‘உண்டு. அவர் தான் இக்ஷ்வாகு வம்சத்தில் அவதரித்த தசரத குமாரர் ஸ்ரீராமர்’ என்று கூறி நாரதர் ராம சரித்திரத்தை சுருக்கமாக நூறு சுலோகங்களில் உபதேசித்தார். இதுவே ஸங்க்ஷேப ராமாயணம்.
ஸங்க்ஷேப ராமாயணம் சம்ஸ்க்ருத எழுத்தில்(Link to sankshepa ramayana samskritha lyrics PDF)
இந்த உபதேசத்தைக் கொண்டே வால்மீகி முனிவர் ராமாயணத்தை எழுதுகிறார். “இந்த ஸர்கத்தைக் கொண்டே ராம கதையை மனனம் செய்யலாம். இதைப் படித்தால் வால்மீகி ராமாயணத்தை முழுவதும் படிக்க வேண்டும் என்ற ஆசை வரும்” என்று ஸ்வாமிகள் சொல்வார்.
ஸங்க்ஷேப ராமாயணம் எல்லா ஸ்லோகங்கள் 1-101 பொருளுரை; Sankshepa Ramayanam all slokams 1 to 101 meaning