Categories
mooka pancha shathi one slokam

அனுகூலமே புரியும் கருணைத் தெய்வம்


ஆர்யா சதகம் 82வது ஸ்லோகம் பொருளுரை – அனுகூலமே புரியும் கருணைத் தெய்வம்

अधिकाञ्चितमणिकाञ्चनकाञ्चीमधिकाञ्चि काञ्चिदद्राक्षम् ।
अवनतजनानुकम्पामनुकम्पाकूलमस्मदनुकूलाम् ॥

6 replies on “அனுகூலமே புரியும் கருணைத் தெய்வம்”

‘அம்மா’னு சொன்னாலே அங்க கருணையும் அன்பும் தானாவே வந்து ஒட்டிக்கிறது. லலிதா ஸஹஸ்ரநாமத்திலும் ‘ஒரு காரணமும் இல்லாமல் கருணை செய்கிறவள்(அவ்யாஜ கருணாமூர்த்தி)’ னு சொல்றது.🙏🌸

மஹாபெரியவா , ‘எப்படி எதுவும் கேட்கத் தெரியாத குழந்தைக்கு வேண்டியதைத் அம்மா தானே கவனித்துக் கொள்கிறாளோ, அப்படியே ஜகன்மாதாவாகவும் கருணாமூர்த்தியாகவும் உள்ள அம்மா, உண்மையான பக்தி வைத்தவர்கள் தன்னை எதுவும் கேட்காவிட்டாலும்கூட, தானாகவே அவர்களுக்கு இகத்திலும் பரத்திலும் பரமாநுக்கிரஹம் செய்வாள்.’ னு சொல்றார்.🙏🌸

அம்மா நீ கொடுத்த சக்தியால தான் எல்லாம் நடக்கறதுனு சரணாகதி பண்ணாலே நமக்கெல்லாம் அனுகூலம் செய்வா 🙏🙏

ராமாயண மேற்கோள் மிக அருமை 👌🌸 – தனக்கு தீங்கு செய்யற ராக்ஷசிகளுக்கும் நமஸ்காரம் செஞ்சவுடனே அபயம் கொடுத்துடறாளே சீதாதேவி !! இதைவிட கருணை இருக்க முடியுமா? 🙏🌸

‘நாம பகவானை சரணாகதி பண்ணி நல்ல வழில வந்தபின்னையாவாவது தப்பு வழில போகாம இருக்கணும்! ‘னு வேதாந்த தேசிகர் சொன்னதை மேற்கோள் காட்டி ஸ்வாமிகள் எல்லாருக்கும் எடுத்து சொன்னதோட தானும் வாழ்ந்து காட்டியிருக்கார் 🙏🙏🙏🙏

‘கிருஷ்ணன் எனக்கு என்ன நன்மை தான் பண்ணல! ‘னு தர்மபுத்திரர் காமிக்கற அந்த பக்தி நமக்கெல்லாம் வரணும் 🙏🌸

One center theme from this verse is that full devotion and faith in Ambal will save us from all our endevours. Let us pray to her blessing all time

ஸ்ரீ காமாக்ஷி பாதம் சரணம்
மிக உருக்கமான பதிவு. இன்று ஸ்ரீ காமாக்ஷி கடாக்ஷம் கிடைத்த ஓர் பூர்ண நிறைவு.
அனைவருக்கும் லோகமாதாவாக இருக்கக்கூடிய காமாக்ஷி நமக்கெல்லாம் தாயாக இருந்து கருணை ஒன்றை மட்டுமே வர்ஷிக்கிறார்.
சீதா தேவியின் கருணை அந்த ராக்ஷஸ ஸ்தீரீகளுக்கும் கிடைத்ததை இராமாயணம் வாயிலாக மேற்கோள் காட்டிய விளக்கம் அருமை.
எல்லோருக்கும் எல்லாம் வல்ல அந்த காமாக்ஷியின் கருணை மேலும் பொங்கட்டும். 🌷

அழகான சொற் கோர்வை உடைய ஸ்லோகம் !

அதே போல் பொருள் சுவையும் கூடியது!
அகில லோகத்தையும் தன் வயிற்றில் வைத்துக்
காப்பாற்றுவதால் அதாவது லோகத்திற்கே தாயானதால்
அவளுடைய ஒட்டியாணம் எல்லாவர்றையும் தாங்கும்
சக்தியுடையதாய் கனமானதாகத்தானே இருக்க வேண்டும்?
அதானால்தான் கற்களிழைத்து செய்யப்பட்டதோ ஒட்டியாணம்?

சக்திபீடங்களின் நாபி ப்ப்ரதேசம் காஞ்சி என்று சொல்வார்கள்.
அந்த நாபிப்ரதசத்தில் ஒட்யாணம் அதுவும் கற்களிழைத்த
ஒட்யாணம் அணிந்திருப்பதுமிகப் பொருத்தமே!
தன்னை அண்டியவர்களுக்கு அனுகூலத்தையே செய்வதுடன்
ஆனந்தத்தையும் அல்லவா அளிக்கிறாள்!!
காஞ்சி மானகர் ஒட்யாண பீடம் என்று போற்றப்படுகிறது !
அதற்கு ஏற்ற ஸ்லோகமிது !!

உன்னையல்லால் வேறு கதி ஏது அன்னையே உமையே என்ற

பாடல் நினைவுக்கு வரது!
வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நற்றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப்பரமானந்தர் பாரிநுன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் நின் த்ண்ணளியே என்ற
பதிகத்தில் கூறி நாற்போல் அவளை துதித்தால்
அவள் எளிதில் அருள்புரிகிறாள் !! கருணை தெய்வம் !

கணபதி, ஜோஸ்யரை சந்தித்து, :”அவர் உன்னுடன்
காமாக்ஷி இருக்கிறாள்”ஏன்ற ஒரே சொல்லில்” எனக்கு இது
போதுமென்று” சொல்லி வெளிவந்தது அவளது கருணா
கடாக்ஷத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு! அவருக்கு அம்பாளிடம்
உள்ள பக்திக்கும் நம்பிக்கைக்கும் ஓர் எடுத்துக் காட்டு !!
இந்த நம்பிக்கை பிடிப்பு அம்பாளிடம் ஏற்பட்டுவிட்டால்
“நாள் என்ன செய்யும், கோள்தான் என்ன செய்யும்”?
ஒவ்வொருவரும் பகவான் நம்பிக்கை என்று சொல்லிக்கொண்டு
பலரின் கருத்துக் களைக் கேட்டு நடப்பது அவசியமில்லை!
ஸதா பகவத் த்யானம், பஜனம் இருந்தால் வாழ்வில்!
உய்வடையலாம்!!

பகவானை சரணடைந்தால் கோணல் பாதையில் போகும்
எண்ணமே வராது என்ற தேசிகர் கருத்து குறிப்பிடத் தக்கது!
ஆதுதான் சரணாகதம்!
ஆதற்குமனம்னிறைய பக்குவமடைய வேண்டும்!

சீதா பிராட்டி தன்னை துன்புறுத்தியவர்களுக்கும் கருணை
செய்கிறாள் அல்லவா? ஏன்? தாய் என்றால் அன்புமயம்!அதிலும்
லோகமாதா! !
பின் எப்படி இருப்பாள்?

நல்ல உதாரணங்களுடன் சொற் சுவையும் பொருள் சுவையும்
மிக்க அழகான ப்ரவசனம்!
ஸ்வாமியகள் ,பெரியவா அனுக்ரஹம் பரிபூர்ணம்!!

ஜய ஜய ஜகதம்ப சிவே….

Leave a Reply to Ganapathy SubramanianCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.