Categories
mooka pancha shathi one slokam

காமாக்ஷி ஷீதலதராணி தவேக்ஷிதானி

கடாக்ஷ சதகம் 77வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி ஷீதலதராணி தவேக்ஷிதானி

7 replies on “காமாக்ஷி ஷீதலதராணி தவேக்ஷிதானி”

ரொம்ப அழகான ஸ்லோகம். மிகவும் அற்புதமான விளக்கம். ஸ்வாமிகளுடைய ஆராதனை அனுபவங்கள், சுவாமிகளைப் பற்றி மஹாபெரியவா சொன்னது ஸ்வாமிகளின் பக்தர்களுடைய அனுபவங்கள் கேட்க கேட்க ஆனந்தம். மூககவி காமாக்ஷியின் கடாக்ஷத்தை சொல்வதுபோல் குளிர்ந்த அனுபவமாக இருந்தது 👌🙏🌸

“ஸம்ஸார தாபத்தில் கொதித்திருக்கிற நான் உன் மகா குளிர்ச்சியான திருவடி நிழலைத்தான் தேடுகிறேன் அம்மா” என்று ‘ஜனோயம் ஸந்தப்தோ’ என்ற பாதாரவிந்த சதகம் ஸ்லோகத்தில் வேண்டும் மூககவி, இந்த ஸ்லோகத்தில் அம்பாளின் கடாக்ஷம் ஜனங்களின் தாபத்தை நீக்கி குளிர்ச்சியை தருகிறது என்கிறார். தனக்காக வேண்டியவர் அம்பாளுடைய கடாக்ஷத்தினால் தாபம் நீங்கி, ஜனங்களின் தாபசாந்திக்காக வேண்டுகிறார்.🙏🌸

மூககவி நிறைய ஸ்தோத்திரங்களில் அம்பாளுடைய கடாக்ஷத்தை நீலோத்பல மலருக்கு உவமித்திருப்பார். ஆசார்யாளும் ஸௌந்தர்யலஹரியில், “த்ருசா த்ராகீயஸ்யா தரதளித நீலோத்பலருசா” என்ற சுலோகத்தில் காமாக்ஷியின் கடாக்ஷ வீக்ஷண்யத்தின் பெருமையை சொல்கிறார். “அவளுடைய கண் பார்வை எத்தனை தூரமும் தாண்டி விழுமாம் – ‘த்ருசா த்ரா கீயஸ்வா’.  அந்தக் கண்கள் பாதி மூடி, பாதி விரிந்திருக்கிற “நீலோத்பல புஷ்பம்” மாதிரி இருக்கின்றனவாம். ‘நீலோத்பலம்’ என்பது ‘கருங்குவளை’. பார்த்தாலே கண்ணுக்கு ‘ஜில்’லென்றிருக்கும். ஜலத்தில் நனைந்த நீலோத்பலம் மாதிரி பரம சீதளமாக இருக்கிறது, அவளுடைய திருஷ்டி. லோகம் பூராவையும் கடாக்ஷிப்பதற்காக ஜகத்தின் ஒரு கோடிக்கு மறுகோடி ஆடியபடி இருக்கின்றன.” என்கிறார்.🙏🌸

முத்துஸ்வாமி தீக்ஷிதர் ‘ஸ்ரீஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே’ க்ருதியில், “தாப-த்ரய ஹரணநிபுண தத்வோபதேச கர்த்ரே” என்கிறார். மஹாபெரியவா இதற்கு விளக்கும்போது, “தாபத்ரயம் என்பதாக ஜீவாத்மாவுக்கு மூன்று தினுஸு தாபம்.  ஆத்யாத்மிகம், ஆதி பௌதிகம், ஆதி தைவிகம் என்ற மூன்று. இவை மநுஷ்யரைத் தபிக்க வைக்கின்றன. ஆத்யாத்மிகம் என்பது தன் ஆத்மாவாலேயே அதாவது நம்முடைய மனஸின் பலவிதமான சஞ்சலிப்பு, கொந்தளிப்பினாலேயே நம்மை வறுத்தெடுத்துக் கொள்வது. ஆதிபௌதிகம் என்பது பூதர்களால் அதாவது உயிர்களால், நம்மைத் தவிர பிற மநுஷ்யர்களாலும் மற்ற ஜீவராசிகளாலும் உண்டாகிறது. ஆதிதைவிகம் என்ற இடத்தில் தைவம் என்றால் விதி. நம்முடைய வினையே விதியாக வந்து வருத்துவது ஒரு தாபம். அல்லது மநுஷ்ய சக்திக்கு அப்பாற்பட்டதாக ‘இயற்கை உற்பாதம்’ புயல், பூகம்பம் முதலியவற்றால் ஏற்படுவது ஆதிதைவிகமான தாபம். ஆதிபௌதிகத்தாலும், ஆதிதைவிகத்தாலும் விபத்து, வியாதி இத்யாதி ஏற்படலாம். தாபத்ரயங்களைப் போக்குவதில் மிகவும் வல்லமை வாய்ந்த தத்வ உபதேசத்தைச் செய்பவர் ஸுப்ரஹ்மண்யர்.” என்கிறார். 🙏🌸

அப்படிப்பட்ட தத்வ உபதேசத்தின் மூலமும் அவர்களுடைய ஸந்நிதி விசேஷத்தாலும் மஹாபெரியவா, ஸ்வாமிகள் போன்ற குரு நம் தாபங்களை போக்கி குளிர்ந்த கடாக்ஷத்தைப் பொழிகிறார்கள்.🙏🙏🙏🙏

Namaskaram,

I’m not listening to the Audios but I do ready your comments which, I believe, gives the essence of the voice message of Ganapathy Anna. Thank you so much for patiently doing this kainkaryam. I also like it very much the way you bring Soundaryalahari Slokams into your descriptions. Really beautiful. Your recent drawing of Sri Swamigal is divine. Please continue your kainkaryams_/\_

Hara Hara Sankara Jaya Jaya Sankara!!!

Thank you 🙏🌸

I feel you should listen to the audio as I am not writing even 1/10th of Ganapathy Anna’s views towards the slokam.

I think you like to read a lot than hearing. But believe me, Anna’s audios are more addictive as you keep hearing. He brings out such deep insights to the Slokams. The way he connects the slokams to MahaPeriyava, Swamigal, Sivan Sir is just amazing. I admire and enjoy each and every bit.🙏🌸

Rama Rama

Completely agree with you🙏 Yes I like to read than listen. Because of Ganapathy Anna’s writings only I developed a little bit of devotion towards Swamigal🙏 I pray to Mahaperiyava that I manage my time properly so that I do listen to the audios. Thanks for your kind words🙏

என்ன ஒர் அழகான விளக்கம் !! எனக்கு comment பண்ற யோக்யதையே இல்லை !

ஸ்வாமிகள் எளிமையும் காருண்யமும் ஆசாரமும் பண ஆசையே இல்லாத சுவாமி சிந்தனையும் கேட்க த் தெவிட்டாத இன்னமுது !! மாசில் வீணையும் மாலை மருதமும் எப்படிப்பட்ட உவமை !!
ஈசனின் இணையடி நீழல் அடைந்த குளுமை !!
பெரியவா தக்க இடம் இல்லாவிட்டால் பிரவசனம் செய்ய வேண்டாம் என்ற கருத்து ஸ்வாமிகளிடம் இயற்கையாகவே அமைந்திருந்தது தெய்வ பிரசாதம் !! அமைதியான பண ஆசை ஆடம்பரம் ஏதும் இல்லாமல் தெய்வத்தை இடையறாது பஜித்து
வாழ எத்தனை ஜன்ம சுகிrதம் வேண்டும் !
காமாக்ஷியின் இணையடி நீழல் பற்றி விளக்கம் அற்புதம்!
காமாக்ஷியின் பார்வையாணது குளிர்ந்த பணி போன்றது, பாதங்களில் தஞ்சம் அடைந்தோரின் கோடை வெயில் போன்ற தாபத்தைப் போக்கி, நிலவைப் போல் அமுதைப் பொழுவதுடன் செழும் சந்தனக் குழம்பை வாரிப் பூசிக்கொண்டது போல் குளிர்ச்சியும் மகிழ்ச்சியும் தருவதுடன் கடும்கோடையில் பணி நீரை வாரி இறைத்தார் போல் உஷ்ணத்தைத் தனிப்பதாக உள்ளது என்று மூக கவியின் வர்ணனை இங்கு சாலைப் பொருந்தும் !
மொத்தத்தில் சிறந்த உரையைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி!
ஜய ஜய ஜகதம்ப சிவே…

Leave a Reply to PrabhuCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.