Categories
Ayodhya Kandam

கைகேயி பிடிவாதம்

50. தசரதர் மேலும் ராமனின் குணங்களை நினைத்து ‘நன்றாக வாழவேண்டிய வேளையில் காட்டில் என் குழந்தை கஷ்டப் படுவதா? உனக்கு பெரிய அபவாதமும் எனக்கு கேட்ட பெயரும் தான் மிஞ்சும். பரதன் இதை ஒரு நாளும் ஏற்க மாட்டான். உன் காலில் விழுகிறேன். தயவு செய்’ என்று கெஞ்சுகிறார். கைகேயி தன் பிடிவாதத்தை விடாமல் ‘கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றும்’ என்று கடுமையாகச் சொல்கிறாள்.
[கைகேயி பிடிவாதம்]

Categories
Ayodhya Kandam

சுமந்திரர் தசரதரை எழுப்புகிறார்

Categories
Ayodhya Kandam

சுமந்திரர் ராமரை அழைக்கிறார்

52. சுமந்திரர், ராமரை அழைத்து வர அவருடைய அரண்மனைக்குச் செல்கிறார். அங்கு சித்ரா நக்ஷத்ரத்துடன் கூடிய சந்திரனைப் போல, தங்கக் கட்டிலில் சர்வாலங்கார பூஷிதராக சீதா தேவியோடு அமர்ந்திருக்கும் ராமரைக் கண்டு வணங்குகிறார். தசரதர் அழைப்பதாக சொன்னவுடன், ராமர் சீதையிடம் விடைப் பெற்று கைகேயி அரண்மனைக்கு புறப்படுகிறார். சீதை ஆரத்தி எடுத்து வழியனுப்புகிறாள்.
[சுமந்திரர் ராமரை அழைக்கிறார்]

Categories
Ayodhya Kandam

ராமர் கைகேயி அரண்மனைக்கு செல்கிறார்

53. ராமர் லக்ஷ்மணனோடு தேரில் கைகேயி அரண்மனைக்கு செல்கிறார். வழியில் பெண்களும் பெரியவர்களும் அவரை வாழ்த்துகிறார்கள். அவர் அரண்மனைக்குள் நுழைந்தபின் ராமசந்திரனின் வருகையை எதிர்பார்த்து ஜனக்கடல் காத்துக் கொண்டிருக்கிறது.
[ராமர் கைகேயி அரண்மனைக்கு செல்கிறார்]

Categories
Ayodhya Kandam

ராமரின் பித்ரு பக்தி

54. ராமரைக் கண்டவுடன் தசரதர் பேசவும் முடியாமல் அழுது பரிதவிக்கிறார். ராமர் பயந்து கைகேயியிடம் அப்பாவின் கலக்கத்திற்கு காரணம் கேட்கிறார். கைகேயி ‘தசரதர் எனக்கு குடுத்த சத்தியத்தை காப்பாற்ற, நீ அவர் சொல்வது எதுவானாலும் செய்வாயா?’ என்று கேட்கிறாள். ராமர் ‘அப்பா சொன்னால் நான் நெருப்பில் வேண்டுமானாலும் விழுவேன். அப்பா வார்த்தை எதுவானாலும் கேட்பேன். இது சத்தியம். ராமன் வார்த்தை மாறமாட்டான்.’ என்று சொன்னவுடன் கைகேயி தான் கேட்ட இரண்டு வரங்களை சொல்கிறாள். ராமர் வருத்தம் அடையவில்லை. அவர் முகம் இரவில் நிலவு போல் ஒளியுடனே விளங்கியது.
[ராமரின் பித்ரு பக்தி]

Categories
Ayodhya Kandam

ராமரின் வனவாசத்திற்கு ஒப்புதல்

55. ராமர் கைகேயி சொன்ன வரங்களைக் கேட்டு ‘அவ்வாறே செய்கிறேன். என் தந்தையும், வயதில் மூத்தவரும், ராஜாவுமான தசரதர் குடுத்த வரத்திற்காக நான் ஜடை பூண்டு மரவுரி உடுத்தி காடு செல்கிறேன்’ என்று வாக்களிக்கிறார். ‘இன்றே நீ கிளம்பு’ என்று கைகேயி அவசரப்படுத்த ‘நான் ரிஷிகளைப் போல தர்மத்தில் உறுதி கொண்டவன். பணத்தில் பேராசை கொண்டவன் அல்ல’ என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி கௌசல்யா தேவியின் அரண்மனைக்கு செல்கிறார்.
[ராமரின் வனவாசத்திற்கு ஒப்புதல்]

Categories
Ayodhya Kandam

ராமர் கௌசல்யா தேவியிடம் வனவாசத்தைப்பற்றி கூறுதல்



56. ராமர் கௌசல்யா தேவியின் அரண்மனைக்கு வந்து அம்மாவை வணங்குகிறார். கௌசல்யை மகனை ஆசிர்வதித்து அமர்ந்து சாப்பிடச் சொல்கிறாரள். ராமர், தசரதர் தனக்கிட்ட உத்தரவைச் சொல்கிறார். கௌசல்யை அதைக்கேட்டு வெட்டுண்ட மரம் போல் மயங்கி விழுந்து விடுகிறாள். தெளிந்த பின், தாங்க முடியாத அந்த கஷ்டத்தை நினைத்து பலவாறு புலம்புகிறாள்.
[ராமர் கௌசல்யா தேவியிடம் வனவாசத்தைப்பற்றி கூறுதல்]

Categories
Ayodhya Kandam

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

57.லக்ஷ்மணன் ‘ஒரு தவறு செய்யாத ராமனைக் காட்டிற்கு அனுப்புவது என்ன நியாயம்? நான் தந்தையை மீறி ராமனுக்கு முடி சூட்டுகிறேன். யார் தடுப்பார் பார்க்கலாம்’ என்று சொல்கிறான். கௌசல்யா ‘நீ கைகேயி விருப்பத்திற்காக காட்டுக்கு போக நான் அனுமதி தர மாட்டேன்’ என்கிறாள். ராமர் ‘தந்தை சொல்லை நான் மீற முடியுமா? நாம் மூவரும் அவர் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். இது தான் தர்மம். அப்பா பேச்சைக் கேட்டு யாரும் குறைவு அடைந்ததில்லை’ என்று கூறி உத்தரவு கேட்கிறார்.
[தந்தை சொல்மிக்க மந்திரமில்லை]

Categories
Ayodhya Kandam

விதியின் வலிமை

58.ராமர் தன்னோடு வனத்திற்கு வர விரும்பும் கௌசல்யா தேவியிடம் ‘தர்மரஜாவான என் தந்தை, உன் கணவர் உயிருடன் இருக்கும்போது நீ அவரை விட்டு என்னோடு எப்படி காட்டிற்கு வரமுடியும்? அவருக்கு துணையாக இருப்பதே உன் கடமை’ என்று சொல்கிறார். லக்ஷ்மணனிடம் ‘நடப்பது விதியின் செயல். கைகேயி கார்யம் இல்லை. நான் வனவாசம் கிளம்ப ஏற்பாடுகளை செய்’ என்று கூறுகிறார்.
[விதியின் வலிமை]

Categories
Ayodhya Kandam

கணவனே கண்கண்ட தெய்வம்

59.லக்ஷ்மணன் ராமரிடம்’விதியை என் வீரத்தால் மாற்றிக் காண்பிக்கிறேன். உன்னை அரசனாக்குகிறேன். உத்தரவு கொடு’ என்று கேட்கிறான். ராமர் ‘தந்தை சொல்படி நடப்பேதே நல்வழி. அதுவே என் வழி’ என்று கூறி மறுத்து விடுகிறார். அம்மாவிடம் ‘கணவனை தெய்வமாக வழிபடுவளே நல்லுலகம் அடைவாள் என்று வேதங்கள் கூறுகின்றன. கைகேயி அப்பாவை கைவிட்டு விட்டாள். நீ அவருக்கு இப்போது துணையாக இருக்க வேண்டும்’ என்று எடுத்துக் கூறியதும் உத்தமியான கௌசல்யை அதை ஒப்புக் கொள்கிறாள்.
[கணவனே கண்கண்ட தெய்வம்]