ஸ்வாமிகள் எப்போதும் ராமாயண, பாகவத, பாராயணம், பிரவசனம் செய்து கொண்டிருப்பார். அதனால் அவருடைய ராம பக்தி, கிருஷ்ண பக்தி எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் பரம சாம்பவரும் கூட. அதை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். (விஷ்ணு பக்தர்களை வைஷ்ணவர்கள் என்று சொல்வார்கள். அது போல சிவ பக்தர்களை சாம்பவர்கள் என்று சொல்வார்கள்)