Categories
Govinda Damodara Swamigal

ராம கிருஷ்ண கோவிந்தேதி நாம ஸம்ப்ரயோகே – நாராயண தீர்த்தர் தரங்கம்

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ராமாயண பாகவதத்துக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணம் பண்ணினார். எப்போதும் ராமாயண பாகவதம் படிக்கறது, ப்ரவசனம் பண்றது அப்படின்னு இருந்தார். அதுக்கு நடுவுல நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவர் ஆச்சார்யாளோட ஸ்லோகங்கள் எல்லாம் விரும்பி படிப்பார். மேலும் முகுந்த மாலை, ஆனந்த ஸகாரஸ்தவம், மூகபஞ்ச சதி போன்ற ஸ்தோத்திரங்கள், இந்த பக்தி மார்கத்துல போகறதுக்கு எதெல்லாம் ஹேதுவா இருக்குமோ, அதெல்லாம் விரும்பி பாராயணம் பண்ணுவார்.