77. ராமர் நள்ளிரவில் எழுந்து ‘நம்மால் இந்த ஜனங்களுக்கு கஷ்டம் வரக்கூடாது. இப்போதே கிளம்பி போய் விடுவோம்’ என்று சொல்லி தேரில் ஏறி தமஸா நதியைக் கடந்து போய் விடுகிறார்கள். ஜனங்கள் எழுந்து, ராமர் இல்லாததைக் கண்டு மிக வருந்தி உயிரை விடவும் துணிகிறார்கள். ராமருடைய தேர் தடத்தை தொடர்ந்து அயோத்தி வந்து சேர்கிறார்கள். அங்கு பெண்கள் அவர்களிடம் ‘ராமரை விட்டு ஏன் வந்தீர்கள்? ராமன் எங்கு உள்ளானோ அங்கு பயமோ அவமனமோ கிடையாது. அவனிடமே போய் விடுவோம்’ என்று சொல்கிறார்கள்.
[ராமர் நள்ளிரவில் தமஸா நதியை கடந்து செல்கிறார்]
Tag: வால்மீகி ராமாயணம் mp3
ராமரிடம் பிராம்மணர்கள் பிரார்த்தனை
76. அயோத்தி மக்கள் ராமருடைய தேரின் பின்னே செல்கிறார்கள். வயதான பிராம்மணர்கள் ‘ராமா, நாங்களும் உன்னோடு வருகிறோம். எங்கள் ஹ்ருதயத்தில் உள்ள வேதம் எங்களைக் காப்பாற்றும். எல்லா உயிர்களிடத்தும் கருணை கொண்ட உன்னிடம் பறவைகள் கூட வேண்டுகின்றன. எங்களை விட்டுப் போகாதே’ என்று கெஞ்சுகிறார்கள். தமஸா நதிக்கரை வந்தவுடன் ராமர் அன்றிரவு அங்கே தங்க முடிவு செய்கிறார். ஜனங்களும் அவரோடு தூங்குகிறார்கள்.
[ராமரிடம் பிராம்மணர்கள் பிரார்த்தனை]
சுமித்ரை சமாதானம் செய்தல்
75. பிள்ளையை பிரிந்து வருந்தும் கௌசல்யா தேவியை சுமித்ரா தேவி ‘சத்தியத்தையும் தர்மத்தையும் விரதமாகவும் செல்வமாகவும் கொண்ட ராமன் எதை இழந்தான்? லக்ஷ்மி தேவியே ஆன சீதையும் லக்ஷ்மணனும் அவனோடு போகும் போது அவனுக்கு என்ன குறை? அவன் தெய்வங்களுக்கு மேலான தெய்வம்’ என்று கூறி சமாதானம் செய்கிறாள்.
[சுமித்ரை சமாதானம் செய்தல்]
தசரதர் சோகம்
74. ராமர் கண்களிலிருந்து மறைந்த பின் தசரதர் கிழே விழுந்து விடுகிறார். தூக்க வந்த கைகேயியை விலக்கி கௌசல்யை அரண்மனைக்கு வந்து படுக்கையில் விழுந்து விடுகிறார். கௌசல்யை ‘இப்படி ஒரு பிள்ளையை பெற்று அவனை இழக்க என்ன பாபம் செய்தேனோ?’ என்று புலம்புகிறாள்.
[தசரதர் சோகம்]
ராமர் வனவாசம் கிளம்பினார்
73. ராமரும் சீதையும் லக்ஷ்மணரும் தேரில் ஏறி அமர சுமந்திரர் தேரை ஓட்டுகிறார். அயோத்தி ஜனங்களும் தசரதரும் கௌசல்யா தேவியும் அழுது கொண்டே பின் தொடர்கிறார்கள். விரைவில் திரும்பி வர விரும்பும் உறவினரை வெகு தூரம் வழி அனுப்பக் கூடாது என்று பெரியோர்கள் சொன்னதும் தசரதர் நின்று விடுகிறார். ராமர் பிரிவினால் பெண்கள் குழந்தைகள் முதல் யானைகள் பசுக்கள் வரை அயோத்தி நகரமே துக்கத்தில் மூழ்கிவிடுகிறது.
[ராமர் வனவாசம் கிளம்பினார்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/73%20ramar%20vanavasam%20kilambinar.mp3]
கௌசல்யாதேவி மங்களாசாசனம்
60.கௌசல்யாதேவி ராமனிடம் ‘எந்த தர்மத்தை நீ இவ்வளவு விருப்பத்துடனும் உறுதியுடனும் கடைபிடிக்கிறாயோ எந்த தர்மமே உன்னை எல்லா விதத்திலும் காப்பாற்றட்டும். நான் பூஜிக்கும் சிவபெருமான் முதலான தெய்வங்கள் உனக்கு வனவாசத்தில் துணையாக இருப்பார்கள். நல்லபடியாகப் போய் சீக்கிரம் திரும்பி வா’ என்று கூறி விடை அளிக்கிறாள். ராமர் அங்கிருந்து சீதையை பார்க்க வருகிறார்.
[கௌசல்யாதேவி மங்களாசாசனம்]
கணவனே கண்கண்ட தெய்வம்
59.லக்ஷ்மணன் ராமரிடம்’விதியை என் வீரத்தால் மாற்றிக் காண்பிக்கிறேன். உன்னை அரசனாக்குகிறேன். உத்தரவு கொடு’ என்று கேட்கிறான். ராமர் ‘தந்தை சொல்படி நடப்பேதே நல்வழி. அதுவே என் வழி’ என்று கூறி மறுத்து விடுகிறார். அம்மாவிடம் ‘கணவனை தெய்வமாக வழிபடுவளே நல்லுலகம் அடைவாள் என்று வேதங்கள் கூறுகின்றன. கைகேயி அப்பாவை கைவிட்டு விட்டாள். நீ அவருக்கு இப்போது துணையாக இருக்க வேண்டும்’ என்று எடுத்துக் கூறியதும் உத்தமியான கௌசல்யை அதை ஒப்புக் கொள்கிறாள்.
[கணவனே கண்கண்ட தெய்வம்]
விதியின் வலிமை
58.ராமர் தன்னோடு வனத்திற்கு வர விரும்பும் கௌசல்யா தேவியிடம் ‘தர்மரஜாவான என் தந்தை, உன் கணவர் உயிருடன் இருக்கும்போது நீ அவரை விட்டு என்னோடு எப்படி காட்டிற்கு வரமுடியும்? அவருக்கு துணையாக இருப்பதே உன் கடமை’ என்று சொல்கிறார். லக்ஷ்மணனிடம் ‘நடப்பது விதியின் செயல். கைகேயி கார்யம் இல்லை. நான் வனவாசம் கிளம்ப ஏற்பாடுகளை செய்’ என்று கூறுகிறார்.
[விதியின் வலிமை]
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
57.லக்ஷ்மணன் ‘ஒரு தவறு செய்யாத ராமனைக் காட்டிற்கு அனுப்புவது என்ன நியாயம்? நான் தந்தையை மீறி ராமனுக்கு முடி சூட்டுகிறேன். யார் தடுப்பார் பார்க்கலாம்’ என்று சொல்கிறான். கௌசல்யா ‘நீ கைகேயி விருப்பத்திற்காக காட்டுக்கு போக நான் அனுமதி தர மாட்டேன்’ என்கிறாள். ராமர் ‘தந்தை சொல்லை நான் மீற முடியுமா? நாம் மூவரும் அவர் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். இது தான் தர்மம். அப்பா பேச்சைக் கேட்டு யாரும் குறைவு அடைந்ததில்லை’ என்று கூறி உத்தரவு கேட்கிறார்.
[தந்தை சொல்மிக்க மந்திரமில்லை]
56. ராமர் கௌசல்யா தேவியின் அரண்மனைக்கு வந்து அம்மாவை வணங்குகிறார். கௌசல்யை மகனை ஆசிர்வதித்து அமர்ந்து சாப்பிடச் சொல்கிறாரள். ராமர், தசரதர் தனக்கிட்ட உத்தரவைச் சொல்கிறார். கௌசல்யை அதைக்கேட்டு வெட்டுண்ட மரம் போல் மயங்கி விழுந்து விடுகிறாள். தெளிந்த பின், தாங்க முடியாத அந்த கஷ்டத்தை நினைத்து பலவாறு புலம்புகிறாள்.
[ராமர் கௌசல்யா தேவியிடம் வனவாசத்தைப்பற்றி கூறுதல்]