தை மாதம் வளர்பிறை பஞ்சமி திதியை வசந்த பஞ்சமி என்று வடக்கே கொண்டாடுகிறார்கள். அன்று சரஸ்வதி தேவியை வழிபட்டு புது பாடங்கள், கலைகளை கற்க தொடங்கும் வழக்கம் உள்ளது. மகாகவி காளிதாசர் சரஸ்வதி தேவியின் மறு வடிவமான ஶ்யாமளா தேவியைக் குறித்து அருளிய அழகான ஒரு ஸ்லோகம் ஶ்யாமளா நவரத்னமாலிகா. அதன் ஒலிப்பதிவை இந்த வசந்த பஞ்சமியில் பகிர்வதில் மகிழ்கிறேன்.