ஹனுமத் பிரபாவம் – ஏழாம் பகுதி(22 min audio in tamizh on hanumat prabhavam)
Tag: ஹனுமத் பிரபாவம்
Categories
ஹனுமத் பிரபாவம்
இன்னிக்கு மூல நக்ஷத்ரம், ஹனுமாருடைய பிரபாவத்தைப் பற்றி பேசுவோம். ஹனுமார், சீதா தேவியை பார்த்து, அவளுக்கு ஆறுதல் சொல்லி, ஸ்ரீ ராமருடைய அங்குலீயகத்தை (மோதிரம்) காண்பித்து, நம்பிக்கை ஏற்படுத்தி, “ஸ்ரீ ராமர் வந்துவிடுவார், தங்களின் கஷ்டம் தீர்ந்தது, தாங்கள் இனிமேல் அழவேண்டாம்” என்று கூறுகிறார். முதலில் பார்த்தவுடன், “ஏனம்மா அழுகிறாய்?” என்று கேட்டார், இப்போ கிளம்பும்போது “இனி நீங்கள் அழவேண்டாம், தங்களின் கஷ்டங்கள் தீர்ந்தது” என்று கூறிவிட்டு, சீதாவிடம் ஏதாவது அடையாளம் தரச் சொல்லி கேட்டு, அவள் சூடாமணி தர, அதனை பெற்றுக் கொண்டு கிளம்புகிறார்.
அது போல, பகவான் ஒருவர் தான், ஏன் அழுகிறாய் என்று கேட்டு, இனிமேல் அழவேண்டாம், உன் கஷ்டம் தீர்ந்தது என்று கூறுவார். அதனால், நம்முடைய கஷ்டத்தினை பகவான் ஒருவரிடம் தான் கூற வேண்டும், வருவோர்கள் போவோர்கர்ளிடம் கூறினால், ஒரு சிலர் சந்தோஷமும் படுவார்கள், பலர் அதனை பொருட்படுத்த மாட்டார்கள். அவாளால என்ன செய்ய முடியும், உலத்தில் உழலும் மனிதர்களினால் நம்முடைய கஷ்டத்தினை போக்க முடியாது. போக்கு கூடிய பகவானிடம்தான் நாம் கூறவேண்டும், என்று ஸ்வாமிகள் சொல்வார்.