Categories
Ramayana One Slokam ERC

சத்ரம் தாரயத க்ஷிப்ரம் ஆர்ய பாதெள இமெள மதௌ

இன்னிக்கு வால்மீகி  ராமாயண ஸ்லோகம், அயோத்யா காண்டத்துல நூத்தி பதினைந்தாவது  ஸர்க்கம் பாதுகா பட்டாபிஷேகம், அதுல ஒரு ஸ்லோகம்

छत्रं धारयत क्षिप्रमार्यपादाविमौ मतौ ।

आभ्यां राज्ये स्थितो धर्मः पादुकाभ्यां गुरोर्मम।।

Categories
Ayodhya Kandam

சீதா தேவியும் அனசூயா தேவியும்

Sita-Devi-and-Sati-Anusuya
116. சீதை அனசூயா தேவியை வணங்கி அவர் அளித்த தெய்வீகமான அலங்கார பொருட்களை அன்புப் பரிசாக பெற்றுக் கொள்கிறாள். பிறகு அனசூயா தேவி கேட்டவுடன் தன் சுயம்வரம் மூலம் ராமரை அடைந்த விவரங்களை இனிமையாக சொல்கிறாள். மறுநாள் அவர்கள் ரிஷிகளை வணங்கிவிட்டு மேலும் காட்டிற்குள் செல்கிறார்கள்.
[சீதா தேவியும் அனசூயா தேவியும்]

[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/116%20sita%20anasuya.mp3]
Categories
Ayodhya Kandam

பாதுகா பட்டாபிஷேகம்

bharata114. பரதன் ராமருடைய பாதுகைகளை தலையில் வைத்துக் கொண்டு ரதத்தில் ஏறி, வழியில் பரத்வாஜ முனிவரை வணங்கி விவரங்களை சொல்லிவிட்டு, அயோத்தி திரும்புகிறான். ராமர் இல்லாத அயோத்தியில் இருக்க விரும்பாமல் அருகில் நந்திக்ராமம் என்ற இடத்திற்கு வந்து, ராமருடைய பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து பட்டாபிஷேகம் செய்கிறான். ராமரே தன் அருகில் இருப்பதாக நினைத்து அந்த பாதுகைகளின் துணையோடு ஆட்சி செய்கிறான். ஆனால் எந்த ராஜ போகத்தையும் ஏற்காமல் காட்டில் ராமர் இருப்பது போல தானும் மரவுரி, ஜடை அணிந்து தபஸ்வியாக வாழ்கிறான்.
[பாதுகா பட்டாபிஷேகம்]

[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/114%20Paduka%20pattabhishekam.mp3]