Categories
Ayodhya Kandam

ராமரின் வனவாசத்திற்கு ஒப்புதல்

55. ராமர் கைகேயி சொன்ன வரங்களைக் கேட்டு ‘அவ்வாறே செய்கிறேன். என் தந்தையும், வயதில் மூத்தவரும், ராஜாவுமான தசரதர் குடுத்த வரத்திற்காக நான் ஜடை பூண்டு மரவுரி உடுத்தி காடு செல்கிறேன்’ என்று வாக்களிக்கிறார். ‘இன்றே நீ கிளம்பு’ என்று கைகேயி அவசரப்படுத்த ‘நான் ரிஷிகளைப் போல தர்மத்தில் உறுதி கொண்டவன். பணத்தில் பேராசை கொண்டவன் அல்ல’ என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி கௌசல்யா தேவியின் அரண்மனைக்கு செல்கிறார்.
[ராமரின் வனவாசத்திற்கு ஒப்புதல்]

Categories
Ayodhya Kandam

ராமரின் பித்ரு பக்தி

54. ராமரைக் கண்டவுடன் தசரதர் பேசவும் முடியாமல் அழுது பரிதவிக்கிறார். ராமர் பயந்து கைகேயியிடம் அப்பாவின் கலக்கத்திற்கு காரணம் கேட்கிறார். கைகேயி ‘தசரதர் எனக்கு குடுத்த சத்தியத்தை காப்பாற்ற, நீ அவர் சொல்வது எதுவானாலும் செய்வாயா?’ என்று கேட்கிறாள். ராமர் ‘அப்பா சொன்னால் நான் நெருப்பில் வேண்டுமானாலும் விழுவேன். அப்பா வார்த்தை எதுவானாலும் கேட்பேன். இது சத்தியம். ராமன் வார்த்தை மாறமாட்டான்.’ என்று சொன்னவுடன் கைகேயி தான் கேட்ட இரண்டு வரங்களை சொல்கிறாள். ராமர் வருத்தம் அடையவில்லை. அவர் முகம் இரவில் நிலவு போல் ஒளியுடனே விளங்கியது.
[ராமரின் பித்ரு பக்தி]

Categories
Ayodhya Kandam

ராமர் கைகேயி அரண்மனைக்கு செல்கிறார்

53. ராமர் லக்ஷ்மணனோடு தேரில் கைகேயி அரண்மனைக்கு செல்கிறார். வழியில் பெண்களும் பெரியவர்களும் அவரை வாழ்த்துகிறார்கள். அவர் அரண்மனைக்குள் நுழைந்தபின் ராமசந்திரனின் வருகையை எதிர்பார்த்து ஜனக்கடல் காத்துக் கொண்டிருக்கிறது.
[ராமர் கைகேயி அரண்மனைக்கு செல்கிறார்]

Categories
Ayodhya Kandam

சுமந்திரர் ராமரை அழைக்கிறார்

52. சுமந்திரர், ராமரை அழைத்து வர அவருடைய அரண்மனைக்குச் செல்கிறார். அங்கு சித்ரா நக்ஷத்ரத்துடன் கூடிய சந்திரனைப் போல, தங்கக் கட்டிலில் சர்வாலங்கார பூஷிதராக சீதா தேவியோடு அமர்ந்திருக்கும் ராமரைக் கண்டு வணங்குகிறார். தசரதர் அழைப்பதாக சொன்னவுடன், ராமர் சீதையிடம் விடைப் பெற்று கைகேயி அரண்மனைக்கு புறப்படுகிறார். சீதை ஆரத்தி எடுத்து வழியனுப்புகிறாள்.
[சுமந்திரர் ராமரை அழைக்கிறார்]