98. வருத்தத்தில் தவிக்கும் பரதனுக்கு குகன், ராம லக்ஷ்மணர்கள் அங்கு வந்திருந்த போது தம்மிடம் பேசிய விவரங்களையும், அவர்கள் ஜடை தரித்து கங்கையை தாண்டி சென்றதையும் கூறுகிறான். ராமரும் சீதையும் கங்கை நீரை மட்டும் அருந்தி, புல் தரையில் படுத்து உறங்கினார்கள் என்று அறிந்த பரதன் ‘ராமரை அயோத்திக்கு அரசராக்கி நான் ஜடை தரித்து காட்டில் தபஸ்வியாக வாழ்வேன்’ என்று சபதம் செய்கிறான்.
[பரதன் சபதம்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/98%20bharathan%20shabadam.mp3]
Tag: ramayana lectures in tamil
பரதனும் குஹனும்
97. பரதன் சேனையோடு காட்டிற்கு கிளம்பி கங்கைக் கரையை அடைந்து அங்கு தங்குகிறான். படையைக் கண்ட குஹன் தன் வேடர்களிடம் ‘இந்த பரதன் ராமனின் எதிரியாய் இருந்தால், கங்கையை கடக்க நாம் விடக்கூடாது’ என்று சொல்கிறான். பிறகு பரதனை சந்தித்து அவனிடமே ‘ஏன் சேனையோடு வந்திருக்கிறாய்?’ என்று கேட்கிறான். பரதன் ‘ராமனுடைய தோழனான நீயே அவனுக்காக உயிரையும் தரத் துணியும் போது அவன் தம்பியான நான் அவனுக்கு கேடு நினைப்பேனா? என் மீது சந்தேஹம் வேண்டாம். ராமரை திரும்ப அழைத்துச் செல்லவே வந்துள்ளேன்.’ என்று சொல்கிறான். குஹன் மிக மகிழ்ந்து ‘எளிதில் கிடைத்த அரச பதவியை விரும்பாமல் ராமன் படும் கஷ்டத்தை எண்ணி, அவனை திரும்ப அழைத்துச் செல்ல வந்திருக்கிறாயே! என்னே உன் மஹிமை! இந்த உலகம் உள்ளவரை உன் புகழ் விளங்கும்’ என்று வாழ்த்துகிறான்.
[குஹன் பரதனை புகழ்தல்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/97%20bharathanum%20guhanum.mp3]
பரதனின் உயர்ந்த ராமபக்தி
96. வசிஷ்டர் பரதனை விமரிசையாக சபைக்கு வரவேற்று அவனை முடி சூட்டிக் கொள்ளும்படி வேண்டுகிறார். பரதன் அவரைக் கண்டித்து ‘அயோத்தியும் நானுமே ராமனின் சொத்து. தசரதருக்கு பிறந்த நான் எப்படி ராமனின் சொத்தை அபகரிப்பேன்? என் மனம் மாறாமல் இருக்க இங்கிருந்தே வனத்தில் இருக்கும் தர்ம வடிவான ராமரை வணங்குகிறேன். சுமந்திரரே! படை கிளம்பட்டும். நாமும் புறப்படுவோம். ராமனை காட்டிலிருந்து அழைத்து வருவோம்’ என்று உத்தரவு இடுகிறான்.
[இங்கிருந்தே ராமரை வணங்குகிறேன்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/96%20bharathan%20rama%20bhakthi.mp3]
அராஜகத்தால் வரும் ஆபத்துக்கள்
89. தசரதர் காலகதி அடைந்ததை அறிந்து கௌசல்யா தேவியியும் மற்ற மனைவிகளும் புலம்பி அழுகிறார்கள். அயோத்தி நகரமே சோகத்தில் மூழ்குகிறது. எல்லோரும் கைகேயியை திட்டுகிறார்கள். மந்த்ரிகளும் பெரியோர்களும் தசரதரின் உடலை எண்ணெய் குடத்தில் பத்திரப் படுத்திவிட்டு சபையைக் கூட்டுகிறார்கள். ‘அரசன் இல்லாதிருந்தால் நாட்டிற்கு பல கேடுகள் விளையும். அதனால் உடனடியாக அதற்கு தீர்வு காண வேண்டும்’ என்று அவர்கள் வசிஷ்டரிடம் வேண்டுகிறார்கள்.
[அரசனில்லாத நாடு]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/89%20dasarathar%20deha%20rakshanam.mp3]
சுமந்த்ரர் அயோத்தி திரும்பினார்
84. சுமந்திரர் குஹனுக்கு விடை கொடுத்து அயோத்தி திரும்புகிறார். ராமர் இல்லாத தேரைக் கண்டு ஜனங்கள் வருந்துகிறார்கள். சுமந்திரர் தசரதரைப் பார்த்து ராமரை கங்கைக் கரையில் விட்டு வந்ததை சொன்னவுடன், தசரதர் ‘ராமன் என்ன சாப்பிட்டான்? எங்கு தூங்கினான்? என்ன சொன்னான்? எல்லாவற்றையும் சொல். அது தான் எனக்கு மருந்து’ என்று கேட்கிறார். ராமர் கௌசல்யா தேவிக்கும் பரதனுக்கும் சொன்ன செய்திகளையும் லக்ஷ்மணர் சொன்ன விஷயங்களையும் சுமந்திரர் எடுத்துச் சொல்கிறார்.
[சுமந்த்ரர் அயோத்தி திரும்பினார்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/84%20sumanthirar%20seythi.mp3]
குஹனும் லக்ஷ்மணரும்
79. ராமரும் சீதையும் தூங்கியபின் குஹன் லக்ஷ்மணரிடம் ‘ராமனைக் காட்டிலும் ப்ரியமான ஒருவர் எனக்கில்லை. நான் முழித்து காவல் காக்கிறேன். நீங்களும் ஓய்வெடுங்கள்’ என்று வேண்டுகிறான். ஆனால் லக்ஷ்மணர் ‘இப்படி ராமரும் சீதையும் புல் தரையில் படுக்கும் நிலைமையில் எனக்கு எப்படித் தூக்கம் வரும்?’ என்று இப்படி இருவரும் ராமனின் குணங்களைப் பேசிக் கொண்டே அன்றிரவுப் பொழுதைக் கழிக்கிறார்கள். மறுநாள் அவர்கள் கங்கையை கடக்க குஹன் ஒரு படகை ஏற்பாடு செய்கிறான்.
[குஹனும் லக்ஷ்மணனும் சம்பாஷணை]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/79%20guhanum%20lakshmananum.mp3]
ராமர் கங்கைக் கரையை அடைந்தார்
78. ராமரும் சீதையும் லக்ஷ்மணரும் பல நதிகளையும் கிராமங்களையும் கடந்து புனித கங்கைக் கரையை அடைந்தார்கள். அங்கு படகோட்டிகளின் ராஜாவும் ராமரின் உயிர் தோழனுமான குகன் வந்து ராமரை சந்திக்கிறான். குகன் அளித்த உணவை மறுத்து, ராமர் அன்றும் நீரையே உணவாகப் பருகி, சீதையோடு புல் தரையில் படுத்து உறங்குகிறார்.
[ராமர் குஹனை சந்தித்தார்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/78%20ramanum%20guhanum.mp3]
77. ராமர் நள்ளிரவில் எழுந்து ‘நம்மால் இந்த ஜனங்களுக்கு கஷ்டம் வரக்கூடாது. இப்போதே கிளம்பி போய் விடுவோம்’ என்று சொல்லி தேரில் ஏறி தமஸா நதியைக் கடந்து போய் விடுகிறார்கள். ஜனங்கள் எழுந்து, ராமர் இல்லாததைக் கண்டு மிக வருந்தி உயிரை விடவும் துணிகிறார்கள். ராமருடைய தேர் தடத்தை தொடர்ந்து அயோத்தி வந்து சேர்கிறார்கள். அங்கு பெண்கள் அவர்களிடம் ‘ராமரை விட்டு ஏன் வந்தீர்கள்? ராமன் எங்கு உள்ளானோ அங்கு பயமோ அவமனமோ கிடையாது. அவனிடமே போய் விடுவோம்’ என்று சொல்கிறார்கள்.
[ராமர் நள்ளிரவில் தமஸா நதியை கடந்து செல்கிறார்]
ராமரிடம் பிராம்மணர்கள் பிரார்த்தனை
76. அயோத்தி மக்கள் ராமருடைய தேரின் பின்னே செல்கிறார்கள். வயதான பிராம்மணர்கள் ‘ராமா, நாங்களும் உன்னோடு வருகிறோம். எங்கள் ஹ்ருதயத்தில் உள்ள வேதம் எங்களைக் காப்பாற்றும். எல்லா உயிர்களிடத்தும் கருணை கொண்ட உன்னிடம் பறவைகள் கூட வேண்டுகின்றன. எங்களை விட்டுப் போகாதே’ என்று கெஞ்சுகிறார்கள். தமஸா நதிக்கரை வந்தவுடன் ராமர் அன்றிரவு அங்கே தங்க முடிவு செய்கிறார். ஜனங்களும் அவரோடு தூங்குகிறார்கள்.
[ராமரிடம் பிராம்மணர்கள் பிரார்த்தனை]
சுமித்ரை சமாதானம் செய்தல்
75. பிள்ளையை பிரிந்து வருந்தும் கௌசல்யா தேவியை சுமித்ரா தேவி ‘சத்தியத்தையும் தர்மத்தையும் விரதமாகவும் செல்வமாகவும் கொண்ட ராமன் எதை இழந்தான்? லக்ஷ்மி தேவியே ஆன சீதையும் லக்ஷ்மணனும் அவனோடு போகும் போது அவனுக்கு என்ன குறை? அவன் தெய்வங்களுக்கு மேலான தெய்வம்’ என்று கூறி சமாதானம் செய்கிறாள்.
[சுமித்ரை சமாதானம் செய்தல்]