இன்று மார்கழி முதல் நாள். எங்கள் தகப்பனார் மஹாபெரியவா திருப்பாவை திருவெம்பாவை மாநாடு நடத்திய வருடத்திலிருந்து மார்கழி மாதம் 30 நாட்களும் விடியற்காலையிலேயே சிவ பூஜையை முடித்துவிட்டு திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி எல்லா பாடல்களையும் படிப்பார். அதனால் எங்களுக்கும் அவற்றை படிக்கும் பாக்யம் கிடைத்தது.