ராகா சந்திர சமான காந்தி வதனா (14 min audio in tamizh, same as the transcript below)
மூக பஞ்சசதியில், ஸ்துதி சதகத்தில் ஒரு ஸ்லோகம். அனேகமாக எல்லாரும் அறிந்த சுலோகம், உபன்யாசகர்கள் அதிகமாக சொல்வார்கள், சந்கீத வித்வான்கள் கூட இதை அதிகமாக பாடுவதுண்டு.
ராகா சந்திர சமான காந்தி வதனா (14 min audio in tamizh, same as the transcript below)
மூக பஞ்சசதியில், ஸ்துதி சதகத்தில் ஒரு ஸ்லோகம். அனேகமாக எல்லாரும் அறிந்த சுலோகம், உபன்யாசகர்கள் அதிகமாக சொல்வார்கள், சந்கீத வித்வான்கள் கூட இதை அதிகமாக பாடுவதுண்டு.
शिवे पाशायेतामलघुनि तमःकूपकुहरे दिनाधीशायेतां मम हृदयपाथोजविपिने ।
नभोमासायेतां सरसकवितारीतिसरिति त्वदीयौ कामाक्षि प्रसृतकिरणौ देवि चरणौ ॥
சிவே பாசாயேதாம் அலகுநி தம:கூப குஹரே
தினாதீசாயேதாம் மம ஹிருதய பாதோஜ விபிநே |
ஸ்வாமிகள் எப்போதும் ராமாயண, பாகவத, பாராயணம், பிரவசனம் செய்து கொண்டிருப்பார். அதனால் அவருடைய ராம பக்தி, கிருஷ்ண பக்தி எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் பரம சாம்பவரும் கூட. அதை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். (விஷ்ணு பக்தர்களை வைஷ்ணவர்கள் என்று சொல்வார்கள். அது போல சிவ பக்தர்களை சாம்பவர்கள் என்று சொல்வார்கள்)
இன்னிக்கு மாசி மாதம் பூரட்டாதி நக்ஷத்திரம். (28/2/2017) கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய ஜென்ம நக்ஷத்திரம். இன்னிக்கு இருந்தார்னா அவருக்கு எண்பத்தேழாவது ஜயந்தியா கொண்டாடியிருப்போம். அவர் ஸ்தூல சரீரத்தோட இல்லேனாலும், சூக்ஷ்மமா அவர் இருந்துண்டு பக்தர்களுக்கு, அனுக்ரஹம் பண்ணிண்டு இருக்கார். நம்ம எல்லாரும் அதை உணர்ந்து அனுபவிச்சுண்டு இருக்கோம்.
கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய 12வது ஆராதனை இன்னும் ரெண்டு நாட்களில் 26ம் தேதி (26-01-2017) திருச்சிக்கு பக்கத்தில் பழூர் என்ற அக்ரஹாரத்தில் அவருடைய அதிஷ்டானத்தில் அவருடைய பக்தர்கள் எல்லாரும் விமரிசையாக கொண்டாடப் போறா. ஸ்வாமிகள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ராமாயண பாகவத பாராயண பிரவசனம் பண்ணிண்டு இருந்தார். மஹாபெரியவா ஸ்வாமிகள் கிட்ட நிறைய பாகவத சப்தாஹம் கேட்டிருக்கா.