83. ராமர் சித்ரகூடத்தின் இயற்கை அழகை வியந்து ‘இங்கு நாம் ரிஷிகளுடன் சுகமாக வசிப்போம்’ என்று சொல்கிறார். பிறகு அவர்கள் வால்மீகி முனிவரை தரிசித்து வணங்குகிறார்கள். பின்னர் மந்தாகினி நதி தீரத்தில் ராமர் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து, லக்ஷ்மணர் அங்கு ஒரு பர்ணசாலை கட்டுகிறார். ராமர் உரிய மந்திரங்களை ஜபித்து, எல்லா தேவதைகளுக்கும் பலி கொடுத்து வாஸ்து சாந்தி செய்து, அந்த பர்ணசாலையில் அவர்களோடு இந்திரனைப் போல சுகமாக வசிக்க ஆரம்பிக்கிறார்.
[ராமர் சித்ரகூடம் அடைந்தார்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/83%20chithrakoota%20vaasam.mp3]
Tag: valmiki ramayanam mp3 in tamil
ஜனகர் விச்வாமித்ரரை தரிசித்தல்
27. ராம லக்ஷ்மணர்களுடன் விஸ்வாமித்ரர் மிதிலையை அடைகிறார். ஜனக மகாராஜா தன் குலகுருவான சதாநந்தரோடு விரைந்து வந்து முனிவரை வரவேற்கிறார். அனைவரும் ஜனகர் சபையை அடைந்தபின், சதாநந்தர் ராம லக்ஷ்மணர்களுக்கு விஸ்வாமித்ரர் கடும் தவம்செய்து பிரம்மரிஷி ஆன கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.
[ஜனகர் விச்வாமித்ரரை தரிசித்தல்]
அஹல்யா சாப விமோசனம்
26.விஷால தேசத்தில் சுமதி மகாராஜாவின் உபசரிப்பை ஏற்ற பின், மிதிலைக்கு செல்லும் வழியில் கௌதம மகரிஷியின் ஆஸ்ரமத்தை பார்க்கிறார்கள். விஸ்வாமித்ரர் ராமரிடம், லோப மோஹத்தால் இந்த்ரனும் அகலிகையும் தவறிழைத்து, கௌதமரின் சாபத்துக்கு ஆளானதைக் கூறி, ராமரை அந்த ஆஸ்ரமத்திற்கு அழைத்துக் செல்கிறார். ராம த்யானத்தால் தூய்மை அடைந்த அகலிகை, ராம தர்சனத்தால் சுயரூபம் பெற்று தன் கணவரான கௌதமரை அடைகிறாள்.
[அஹல்யா சாப விமோசனம்]
மருத்துகள் பிறப்பு
25. ராம லக்ஷ்மணர்களுக்கு விஸ்வாமித்ரர், பாற்கடலைக் கடைந்து தேவர்கள் அமிர்தம் பெற்ற கதையையும், மருத்துகள் பிறந்த கதையையும் கூறுகிறார்.
[மருத்துகள் பிறப்பு]