36. முனிவர்கள் குறித்த மங்கள நன்னாளில், ஜனகர் தன் நான்கு பெண்களை அலங்கரித்து அழைத்து வர, தசரதரும் தன் நான்கு புதல்வர்களையும் அழைத்து வருகிறார். ஸீதா தேவியின் கரங்களை ஜனகர் ஸ்ரீ ராமரின் கரங்களில் கொடுத்து ‘இந்த என் பெண் சீதையை உன் மனைவியாக ஏற்றுக் கொள். உனக்கு மங்களம் உண்டாகட்டும். இவள் கைகளைப் பற்றிக்கொள். இவள் கணவனையே தெய்வமாக கொண்டு உனக்கு தர்மங்களை பின்பற்றுவதில் துணை நிற்பாள். உன்னை எங்கும் நிழலெனப் பின்தொடர்வாள்.’ என்று கூறி மந்திரங்களால் தூய்மை செய்யப்பட்ட ஜலத்தை கைகளில் விட்டு கன்யகாகாதானம் செய்து கொடுக்கிறார். அவ்வாறே மற்ற மூன்று பெண்களான ஊர்மிளை மாண்டவி மற்றும் ஸ்ருதகீர்தியை முறையே லக்ஷ்மண பரத சத்ருக்னருக்கு கன்யகாகாதானம் செய்து தருகிறார்.
[ஸீதா கல்யாணம்]
Tag: seetha kalyanam
35. ஜனகர் சபையில் வசிஷ்ட பகவான், தசரதரின் பூர்வ வம்சத்தைக் கூறி ராமனுக்கு சீதையை பெண் கேட்கிறார். ஜனகர் தன் பூர்வ வம்சத்தைகச் சொல்லி ராமருக்கு சீதையையும் லக்ஷ்மணனுக்கு ஊர்மிளையையும் மணம் செய்து தர சம்மதிக்கிறார். விஸ்வாமித்ரர், பரதனுக்கும் சத்ருக்னனுக்கும் ஜனகரின் தம்பியின் பெண்களான மாண்டவியையும் சுருதகீர்த்தியையையும் மணமுடிக்கலாம் என்று கூற, ஜனகர் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொள்கிறார்.[வசிஷ்டர் சீதையை ராமருக்கு பெண் கேட்கிறார்]
தசரதர் மிதிலை வந்து சேர்ந்தார்
34. ஜனகர், விஸ்வாமித்ரர் அனுமதி பெற்று, தசரதரை அழைத்து வர தூதர்களை அனுப்புகிறார். தசரதர் கல்யாண சேதி கேட்டு சந்தோஷத்துடன் அனைவரையும் அழைத்துக் கொண்டு மிதிலை வந்து சேர்கிறார். ஜனகர் அவர்களை வரவேற்று உபசரித்து கல்யாணத்திற்கு நாள் குறிக்கிறார்.[தசரதர் மிதிலை வந்து சேர்ந்தார்]
சிவ தனுசை ராமர் நாண் ஏற்றினார்
33. விஸ்வாமித்ரரின் உத்தரவின் பேரில் ஜனக மஹாராஜா தன்னிடமிருந்த சிவ தனுசை ராம லக்ஷ்மணர்களுக்கு காண்பிக்கிறார். இந்த வில்லை ராமன் எடுத்து நாண் ஏற்றினால் என் மகள் ஸீதையை அவனுக்கு மணமுடித்து தருவேன் என்று கூறுகிறார். ராமர், முனிவரிடம் உத்தரவு பெற்று அந்த வில்லை எடுத்து நாண் பூட்டும் போது அந்த வில் அவருடைய அபார பலத்தினால் இரண்டாக முறிந்து விழுகிறது. ஜனக மஹாராஜா தன் மகளுக்கேற்ற மணாளன் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறார். [சிவ தனுசை ராமர் நாண் ஏற்றினார்]