Categories
Sri Shankara Charitham Shankara Stothrani Meaning

தோடகாஷ்டகம் தமிழில் பொருள்; Meaning of thotakashtakam in tamil

தோடகாஷ்டகம் தமிழில் பொருள்; Meaning of thotakashtakam in tamil இன்னிக்கு சங்கர ஜயந்தி புண்யகாலம். உலகம் முழுக்க ஆசார்யாளோட ஜயந்தியை ரொம்ப ஆனந்தமா கொண்டாடிண்டிருக்கா. சங்கர ஜயந்தி அன்னிக்கு தோடகாச்சாரியாள் பண்ண “தோடகாஷ்டம்”ங்கற அந்த ஸ்தோத்திரத்தை சொல்லி ஆசார்யாளை நமஸ்காரம் பண்ணுவோம்.  மகாபெரியவா பண்ணி காண்பிச்சிருக்கா. இன்னிக்கு உலகம் முழுக்க ஆசார்யாளை கொண்டாடறான்னா, பெரியவா காண்பிச்ச குரு பக்திதான். பெரியவா அவ்வளவு ஆசையா சங்கர ஜயந்தியை கொண்டாடி, எல்லாரும் கொண்டாடணும்னு உத்ஸாகப்படுத்தி, எந்த ஊருல இருந்தாலும் […]

Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் புத்தக வடிவில் (Sri Shankara Charitham as a PDF book)

கடந்த பதினாறு நாட்களில் இந்த வலைதளத்தில் பகிர்ந்த ஸ்ரீ சங்கர சரிதம் உபன்யாசங்களை தொகுத்து, திருத்தங்கள் செய்து, ஒரு புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, படிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இதைச் செய்துள்ளேன். இணைப்பு இங்கே ஸ்ரீ சங்கர சரிதம் Have created a Tamizh book from the 16 recent posts on Sri Shankara charitham, so that readers can download, print and read comfortably. Link here https://valmikiramayanam.in/sri%20shankara%20charitham.pdf

Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் – பதினாறாம் பகுதி – சங்கர ஜயந்தி ஸர்வ உத்கிருஷ்டமான புண்ய காலம்

நேற்று வரையில் பதினைந்து நாட்களில் ஆதி சங்கரருடைய சரித்ரத்தை ஸ்மரித்தோம். இன்னிக்கு சங்கர ஜயந்தி புண்ய காலம். ஆதி சங்கரருடைய மகிமையைப் பற்றியும் இந்த சங்கர ஜயந்தி எப்படி சர்வோத்க்ருஷ்டமான புண்ய காலம் என்பதைப் பற்றியும், மஹா பெரியவா தெய்வத்தின் குரலில் சொல்லி இருப்பதை இப்போது வாசிக்கிறேன். ஸ்ரீ ஆதி சங்கரரின் மகிமை, அவருக்கு முன்னிருந்த எழுபத்திரண்டு மதங்களில் எதுவுமே அவருக்குப் பின்பு பாரத தேசத்தில் இல்லாமற் போனது தான். அவர் கண்டனம் செய்த சாங்கியம், வைசேஷிகம் […]

Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் – பதினைந்தாம் பகுதி – காஞ்சியில் சங்கரர் விதேஹ முக்தி

நேற்றைய கதையில் ஆதி சங்கரர் தன்னோட ஆறாயிரம் சிஷ்யர்களோட பாரத தேசம் முழுக்க மூணு முறை பாத யாத்திரையாக திக்விஜயம் பண்ணினதை ஸ்தோத்திரங்கள் மூலமா சொல்லிண்டு இருந்தேன். மஹா பெரியவா சொல்றா “ஆச்சார்யாள் பண்ணின இந்த திக்விஜயம் national integration-ஆ  முடிஞ்சுடுத்து. எல்லாரையும் ஒரே வேத மதத்துக்கு கீழ கொண்டு வந்து, நாம எல்லாரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் அப்படிங்கற உணர்ச்சியை ஏற்படுத்தினார். பக்தியினால தான் எல்லாருக்குள்ள ஒருமைப்பாடு ஏற்படும். அப்படி  national integration பண்ணினா” […]

Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் – பதினான்காம் பகுதி – ஸ்தோத்ரங்கள் மூலமாக சங்கர திக்விஜயம்

நேற்றைய கதையில் ஹஸ்தாமலகாச்சார்யாளும், தோடகாச்சார்யாளும் நம்முடைய சங்கர பகவத்பாதாள் கிட்ட வந்து சேர்ந்தது, பக்தி பண்ணிணது எல்லாம் சொல்லிண்டிருந்தேன். நேத்திக்கு சொல்லும் போது நமக்கெல்லாம், ஞானப்பாதை ரொம்ப கடினமானது. பாமரர்களா இருக்க கூடிய நாம், பக்தியினால் தான் பகவானை அடைய முடியும், அப்படீன்னு சொல்லிண்டு இருந்தேன். ஆனா அந்த பக்தியையே, கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் போன்ற மஹான்கள், ஞான மார்கம் போல கடைப்பிடிச்சா. பக்தியை ஒரு bed of roses மாதிரி நினைச்சு தன்னையே ஏமாத்திக்காம, பக்தி […]

Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் – பதிமூன்றாம் பகுதி – ஞானப் பாதை யாருக்கு? தோடகாஷ்டகம் தான் நமக்கு

நேற்றைய கதையில் பத்மபாதாச்சார்யாள் ஆதி சங்கரருக்கு காசியிலே முதல் சிஷ்யராக வந்து சேர்ந்தது, அவர் குரு பக்தியினால் தாமரை தாங்கிய தாளராக, பத்மபாதராக ஆனது, காபாலிகன் கிட்டேயிருந்து  நரசிம்ம மூர்த்தியோட அனுக்ரஹத்துனால ஆச்சார்யாளை காப்பாத்தினது, அவர் எழுதிய பஞ்சபாதிகா இதெல்லாம் பார்த்தோம். இன்னிக்கு இன்னும் இரண்டு உத்தம சிஷ்யர்களைப் பத்தி பார்ப்போம். ஆச்சார்யாள் அப்படின்னாலே எல்லா படத்துலயும் நாலு சிஷ்யர்களோட இருப்பார். அந்த பாக்கி ரெண்டு பேர் ஹஸ்தாமலகர், தோடகாச்சார்யாள் ன்னு ரெண்டு பேர். இந்த ஹஸ்தாமலகர்-ங்கிறது, […]

Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் – பன்னிரண்டாம் பகுதி – பத்மபாதர் கதை

நேற்றைய கதையில், ஆதி சங்கரர் மண்டனமிஸ்ரரை வாதத்துல ஜெயிச்சு, அப்பறம் மண்டனமிஸ்ரர் ஸுரேஸ்வராச்சார்யாள் அப்படீங்கற பேர்ல ஸன்யாசம் எடுத்துண்டு ஆதி சங்கரரோடு கிளம்பினதும், மண்டனமிஸ்ரருடைய பூர்வாஸ்ரம மனைவி ஸரஸவாணி, ஆச்சார்யாள் வேண்டுதல்படி ச்ருங்கேரில சாரதாம்பாளாக குடி கொண்டு உலகத்துக்கு அருள் பண்ணிண்டு இருக்கற விவரமெல்லாம் சொன்னேன். இன்னிக்கு, பத்மபாதரோட கதையை பார்ப்போம். பத்மபாதர் ஆதி சங்கரர் கிட்ட முதல்ல வந்து சேர்ந்த சிஷ்யர். காசியில ஆதி சங்கரர்க்கு பதினாறு வயசு இருக்கும் போது, அவர் பாஷ்யங்கள் எல்லாம் […]

Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் – பதினொன்றாம் பகுதி – மண்டனமிஸ்ரரை சங்கரர் வாதத்தில் வென்றது

நேற்றைய கதையில், சுப்ரமண்ய ஸ்வாமியோட அவதாரமாகவே பூமியில வந்து, கர்ம மீமாம்சையை, வேதத்தை, வேதத்துல சொல்லி இருக்கிற கர்மாக்களை, எல்லாரும் புஷ்களமாக பண்ணும் படியாக அனுக்கிரஹம் பண்ணின குமாரில பட்டருடைய கதையைப் பார்த்தோம். அவர் அக்னி ஸ்வரூபமா இருக்கிறதுனால கடைசியில அக்னியிலேயே மறைஞ்சுட்டார். குமாரிலபட்டர் சங்கரர் கிட்ட “நீங்க மாஹிஷ்மதியில இருக்கக் கூடிய மண்டனமிஸ்ரரை போய் பார்க்கணும்” அப்படின்னு வேண்டிக்கறார். அப்போ ஆதி சங்கரர் சரின்னு அங்கே இருந்து மாஹிஷ்மதி வர்றார். இந்த மண்டனமிஸ்ரர் ரொம்ப தீவிர […]

Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் – பத்தாம் பகுதி – குமாரில பட்டர் கதை

நேற்றைய கதையில், ஆதி சங்கரர் கீதா பாஷ்யத்தில் கூட, பக்தி மார்கத்தை பத்தி விஷேஸமாக சொல்லிருக்கார், அப்படிங்கறதை பார்த்தோம். இன்னிக்கு ஆதி சங்கரர், குமாரிலபட்டர் அப்படிங்கறவரை, பிரயாகைல போய் பார்க்கிறார். முன்னாடி பார்த்தோம், ஆதி சங்கரருடைய அவதாரம், இந்த எழுபத்திரெண்டு துர்மதங்களை கண்டனம் பண்ணி, ஷண்மதங்களை ஸ்தாபனம் பண்ணி, அத்வைத தத்துவத்தை பிரகாசிக்க பண்ணறதுக்கு தான்னு. அதுக்கு “பிரம்மசூத்திர பாஷ்யம் எழுதி, நான் பூமியில தர்மத்தை நிலை நாட்டுகிறேன்”, அப்படின்னு தக்ஷிணாமூர்த்தி வாக்கு குடுக்கறார். அப்போ, தேவர்கள் […]

Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் – ஒன்பதாம் பகுதி – சங்கர பாஷ்யத்தில் பக்தியின் ஏற்றம்

நேற்றைய கதையில் ஆசார்யாள் சொன்ன வழியில், பஜ கோவிந்தத்தில் இருக்கிற மாதிரி, உலக விஷயங்கள்ல பற்று வைக்காமல், உலக சுகங்களை துச்சமா நினைச்சு, அவற்றை துறந்து, பகவானுடைய பக்தி பண்ணி, வழிபாடு பண்ணி, பஜ கோவிந்தம் அப்படீன்னு சொன்னார். மகாபெரியவா அதையே வாழ்ந்து காண்பிச்சு, அதையே உலகத்துக்கு உபதேசமாவும் சொல்லிண்டு இருந்தா, தன்னோட வாழ்நாள் முழுக்க அதை பண்ணிண்டு இருந்தா, அப்படீன்னும் சொன்னேன். ஒண்ணு ஞாபகம் வரது, மஹாபெரியவா சித்தி (siddhi) ஆகறத்துக்கு முன்னாடி கொஞ்சம் ஒரு […]