Categories
Bala Kandam

வால்மீகி ராமாயணம் மங்கள ஸ்லோகங்கள்

வால்மீகி ராமாயண பாராயணத்தின் முடிவில் சொல்லப்படும் மங்கள ச்லோகங்கள் (மங்கள ஸ்லோகங்களைக் கேட்க கீழே உள்ள இணைப்பில் க்ளிக் செய்யவும்).

Categories
Sundarakandam moolam Bala Kandam

வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்

1.வால்மீகி ராமாயண பாராயணத்துக்கு முன்பாக சொல்லப்படும் த்யான ச்லோகங்கள். இதில் பிள்ளையார், சரஸ்வதி தேவி, வால்மீகி முனிவர், ஹனுமார், ராமாயணம், சீதா சமேத ஸ்ரீ ராமர் பற்றிய ச்லோகங்கள் உள்ளன. (த்யான ஸ்லோகங்களைக் கேட்க கீழே உள்ள இணைப்பில் க்ளிக் செய்யவும்).

Categories
Bala Kandam

ராமாயணத்தை ஏன் அடிக்கடி கேட்க வேண்டும்?

Swamigal reading Srimad Valmiki Ramayana

2. வால்மீகி ராமாயணத்தை ஏன் அடிக்கடி கேட்க வேண்டும்? காதுகள் என்கிற மடல்களில், வால்மீகி முனிவரின் முகம் என்கிற தாமரையில் இருந்து வெளிப்பட்ட ராமாயணம் என்னும் தேனை அடிக்கடி வாங்கி, விருப்பத்தோடு குடிப்பவர்கள், உபத்ரவம் மிகுந்த ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு சாஸ்வதமான விஷ்ணு பகவானின் பதத்தை அடைவார்கள்.

Categories
Bala Kandam

வழிப்பறிக் கொள்ளைக்காரன் வால்மீகி முனிவராக ஆனதெப்படி?

3. வழிப்பறிக் கொள்ளைக்காரன் வால்மீகி முனிவராக ஆனதெப்படி?

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்றிரண்டு எழுத்தினால்.

Categories
Bala Kandam

ஸங்க்ஷேப ராமாயணம்

4. இந்த உலகில் ‘சத்யம், தர்மம், அழகு, படிப்பு, வீரம், ஒழுக்கம் என்று எல்லாநல்ல குணங்கள் கொண்ட மனிதன் யாரேனும் உண்டா?’ என்று வால்மீகிமுனிவர் கேட்க, நாரத பகவான் ‘உண்டு. அவர் தான் இக்ஷ்வாகு வம்சத்தில்வந்த தசரத குமாரர் ஸ்ரீராமர்’ என்று கூறி வால்மீகி முனிவருக்கு ராமசரித்திரத்தை சுருக்கமாக நூறு சுலோகங்களில் உபதேசித்தார். இது ஸங்க்ஷேப ராமாயணம் எனப்படும் வால்மீகி ராமாயணத்தின் முதல் ஸர்கம்.

Categories
Bala Kandam

வால்மீகி ராமாயணம் பிறந்த கதை

5. வால்மீகி முனிவர் தமஸா நதியில் ஸ்நானத்திற்கு செல்கிறார். வழியில் வேடன்ஒருவன் அம்பால் ஒரு பக்ஷியை அடித்ததைப் பார்த்து சோகத்தால் அவர்சொன்ன வார்த்தைகள் அனுஷ்டுப் சந்தத்தில் ஒரு ஸ்லோகமாக வெளிப்படுகிறது. வியப்படைந்த முனிவருக்கு பிரம்மதேவர் தர்சனம் தந்து, நாரதர் சொன்ன ராம சரிதத்தை, அனுஷ்டுப் சந்தத்தில் ஸ்லோகங்களாகஇயற்றி விஸ்தாரமாக, ஒரு காவியமாக பாடும்படி அநுக்ரகம் செய்தார்.

Categories
Bala Kandam

வால்மீகி முனிவர் ராமாயணத்தை லவ குசர்களுக்கு கற்றுத் தந்தார்

6. வால்மீகி முனிவர் தாம் படைத்த ராமாயண காவியத்தை லவ குசர்களுக்கு உபதேசித்தார். அவர்கள் அதை முதலில் காட்டில் முனிவர்களுக்கு பாடி காண்பிக்கிறார்கள். பின்னர் அவர்கள் ராமர் அழைப்பை ஏற்று, அஸ்வமேத மஹா மண்டபத்தில் ராமர் முன்னிலையிலேயே அந்த காவ்யத்தை பாடுகிறார்கள்.

Categories
Bala Kandam

அயோத்யா நகர மாந்தர்கள் பெருமை

7. அயோத்யா நகர வர்ணனை, அயோத்யா மாந்தர்கள் குணநலம், தசரதரின் மந்த்ரிகள் சிறப்பு, அவர் சபையை அலங்கரித்த ரிஷிகளின் மேன்மை.

[அயோத்தியில் தசரதர் ஆக்ஷி] (audio file. transcript given below)

Categories
Bala Kandam

தசரதர் அஸ்வமேத யாகம் செய்ய முடிவு

8. தசரதர் பிள்ளை வரம் வேண்டி, ஒரு அஸ்வமேத யாகம் செய்ய முடிவெடுத்து, அதை தன் புரோஹிதர்களிடம் சொல்லுகிறார். அவர்களும் அதை ஆமோதித்து யாகம் நடத்த உத்தரவு அளிக்கிறார்கள்.

தசரதர் அஸ்வமேத யாகம் செய்ய முடிவு (audio file. Transcript given below)

Categories
Bala Kandam

ரிஷ்யசிருங்கர் மஹிமை

9. ரிஷ்யஸ்ருங்கரின் மஹிமையை சுமந்திரர் தசரத மன்னருக்கு எடுத்துக் கூறுகிறார். அதைக் கேட்டவுடன் தசரதர், தன்னுடைய அஸ்வமேத யாகத்தை நடத்தி தரும் பொருட்டு ரிஷ்யஸ்ருங்கரை,  ரோமபாதரிடம்  கேட்டுக்கொண்டு, அங்க தேசத்தில்  இருந்து அயோத்திக்கு அழைத்து வருகிறார்.