
सर्वान् लोकान् सुसंहृत्य सभूतान् सचराचरान्।
पुनरेव तथा स्रष्टुं शक्तो रामो महायशाः।।
ஸர்வான் லோகான் ஸுஸம்ஹ்ருத்ய ஸபூதான் ஸசராசரான் |
புனரேவ ததா ஸ்ரஷ்டும் ஷக்தோ ராமோ மஹாயஷா: ||

सर्वान् लोकान् सुसंहृत्य सभूतान् सचराचरान्।
पुनरेव तथा स्रष्टुं शक्तो रामो महायशाः।।
ஸர்வான் லோகான் ஸுஸம்ஹ்ருத்ய ஸபூதான் ஸசராசரான் |
புனரேவ ததா ஸ்ரஷ்டும் ஷக்தோ ராமோ மஹாயஷா: ||

முதல் முதல்ல நான் ஸ்வாமிகள் கிட்ட போயிருந்த போது, அவர் எனக்கு மூகபஞ்ச சதி சொல்லித் தர ஆரமிச்சார். அந்த பாடம் regularஆ போயிண்டு இருந்தது. ஒரு நாள் கார்த்தால அவர் பாராயணம் பண்ணும் போது போனேன். அப்போ அவர் சுந்தரகாண்டம் பாராயணம் பண்ணிண்டு இருந்தார். எனக்கு அது தெரியல. நான் உள்ள போன போது ஒரு ஸ்லோகம், முப்பத்தியேழாவது சர்க்கத்துல கடைசி ஸ்லோகம். இதை அவர் கொஞ்சம் உரக்க சொன்னார்.

யஸ்ய ஸ்ரீ ஹனுமான் அனுக்ரஹ பலாத் (16 min audio in tamil. same as the script below)
சுந்தரகாண்டத்தோட முதல் ஸர்கத்துல ஹனுமான் ஆகாசத்துல பறக்க போறார். அப்போ ஒரு ஸ்லோகம் சொல்றார்.

ஸ்வாமிகள், வால்மீகி ராமாயண பிரவசனம் பண்ணும்போது, சீதாதேவி, அப்படீன்னு குறிப்பிட மாட்டார். எப்பவும், ஜகன்மாதா, அம்பாள், தாயார் அப்படீனுதான் குறிப்பிடுவார். அப்படி ராமர்கிட்ட இருந்த அளவு, சீதாதேவி கிட்டயும் அவருக்கு பக்தி. ராமர் எப்படி சத்தியத்தையும், தர்மத்தையும் கடைபிடிச்சு, தெய்வத் தன்மை அடைஞ்சு