Categories
Bala Kandam

விஸ்வமித்ரர் தசரதரிடம் ராமனை தன்னோடு அனுப்ப வேண்டுதல்


14. விஸ்வாமித்ரர் தசரதரிடம் தன் யாகத்தை காக்கும் பொருட்டு ராமனை தன்னோடு அனுப்பும்படி கேட்க, தசரதர் மனம் கலங்குகிறார். ராமனைத் தர மறுக்கிறார்.வசிஷ்டர் விஸ்வாமித்ரரின் மகிமையை எடுத்துச் சொன்ன பின் ராம லக்ஷ்மணர்களை முனிவரோடு அனுப்புகிறார்.

Categories
Bala Kandam

விஸ்வாமித்ரர் வருகை


13. ராம லக்ஷ்மண பரத சத்ருகனர்கள் வசிஷ்டரிடம் சதுர்தச வேத வித்யைகளையும் கற்றனர். தசரதர், சபையில் அரசகுமரர்களின் திருமணத்தை குறித்து பேசிக் கொண்டு இருக்கும் போது விச்வாமித்ர முனிவர் வருகிறார்.

[விஸ்வாமித்ரர் வருகை. (audio file. Transcript given below]

Categories
Bala Kandam

ஸ்ரீ ராம ஜனனம்

12. பரம மங்களமான ஸ்ரீ ராமர், லக்ஷ்மணர், பரதர், சத்ருக்னர் ஆகிய நால்வரின் ஜனன உத்சவம்

ஸ்ரீ ராம ஜனனம் (audio file. Transcript given below)

Categories
Bala Kandam

வானரோத்பத்தி


11. வாலி, சுக்ரீவன், ஹனுமார், நளன் நீலன் முதலிய வானரர்களின் பிறப்பு

வானரோத்பத்தி (audio file. Transcript given below)

Categories
Bala Kandam

அஸ்வமேத பூர்த்தி

10. தசரதர் செய்த அஸ்வமேத யாகம் ரிஷிகளின் உதவியால் முறைப்படி நடந்து முடிகிறது.

அஸ்வமேத பூர்த்தி (audio file. Transcript given below)

Categories
Bala Kandam

ரிஷ்யசிருங்கர் மஹிமை

9. ரிஷ்யஸ்ருங்கரின் மஹிமையை சுமந்திரர் தசரத மன்னருக்கு எடுத்துக் கூறுகிறார். அதைக் கேட்டவுடன் தசரதர், தன்னுடைய அஸ்வமேத யாகத்தை நடத்தி தரும் பொருட்டு ரிஷ்யஸ்ருங்கரை,  ரோமபாதரிடம்  கேட்டுக்கொண்டு, அங்க தேசத்தில்  இருந்து அயோத்திக்கு அழைத்து வருகிறார்.

Categories
Bala Kandam

தசரதர் அஸ்வமேத யாகம் செய்ய முடிவு

8. தசரதர் பிள்ளை வரம் வேண்டி, ஒரு அஸ்வமேத யாகம் செய்ய முடிவெடுத்து, அதை தன் புரோஹிதர்களிடம் சொல்லுகிறார். அவர்களும் அதை ஆமோதித்து யாகம் நடத்த உத்தரவு அளிக்கிறார்கள்.

தசரதர் அஸ்வமேத யாகம் செய்ய முடிவு (audio file. Transcript given below)

Categories
Bala Kandam

அயோத்யா நகர மாந்தர்கள் பெருமை

7. அயோத்யா நகர வர்ணனை, அயோத்யா மாந்தர்கள் குணநலம், தசரதரின் மந்த்ரிகள் சிறப்பு, அவர் சபையை அலங்கரித்த ரிஷிகளின் மேன்மை.

[அயோத்தியில் தசரதர் ஆக்ஷி] (audio file. transcript given below)

Categories
Bala Kandam

வால்மீகி முனிவர் ராமாயணத்தை லவ குசர்களுக்கு கற்றுத் தந்தார்

6. வால்மீகி முனிவர் தாம் படைத்த ராமாயண காவியத்தை லவ குசர்களுக்கு உபதேசித்தார். அவர்கள் அதை முதலில் காட்டில் முனிவர்களுக்கு பாடி காண்பிக்கிறார்கள். பின்னர் அவர்கள் ராமர் அழைப்பை ஏற்று, அஸ்வமேத மஹா மண்டபத்தில் ராமர் முன்னிலையிலேயே அந்த காவ்யத்தை பாடுகிறார்கள்.

Categories
Bala Kandam

வால்மீகி ராமாயணம் பிறந்த கதை

5. வால்மீகி முனிவர் தமஸா நதியில் ஸ்நானத்திற்கு செல்கிறார். வழியில் வேடன்ஒருவன் அம்பால் ஒரு பக்ஷியை அடித்ததைப் பார்த்து சோகத்தால் அவர்சொன்ன வார்த்தைகள் அனுஷ்டுப் சந்தத்தில் ஒரு ஸ்லோகமாக வெளிப்படுகிறது. வியப்படைந்த முனிவருக்கு பிரம்மதேவர் தர்சனம் தந்து, நாரதர் சொன்ன ராம சரிதத்தை, அனுஷ்டுப் சந்தத்தில் ஸ்லோகங்களாகஇயற்றி விஸ்தாரமாக, ஒரு காவியமாக பாடும்படி அநுக்ரகம் செய்தார்.