97. பரதன் சேனையோடு காட்டிற்கு கிளம்பி கங்கைக் கரையை அடைந்து அங்கு தங்குகிறான். படையைக் கண்ட குஹன் தன் வேடர்களிடம் ‘இந்த பரதன் ராமனின் எதிரியாய் இருந்தால், கங்கையை கடக்க நாம் விடக்கூடாது’ என்று சொல்கிறான். பிறகு பரதனை சந்தித்து அவனிடமே ‘ஏன் சேனையோடு வந்திருக்கிறாய்?’ என்று கேட்கிறான். பரதன் ‘ராமனுடைய தோழனான நீயே அவனுக்காக உயிரையும் தரத் துணியும் போது அவன் தம்பியான நான் அவனுக்கு கேடு நினைப்பேனா? என் மீது சந்தேஹம் வேண்டாம். ராமரை திரும்ப அழைத்துச் செல்லவே வந்துள்ளேன்.’ என்று சொல்கிறான். குஹன் மிக மகிழ்ந்து ‘எளிதில் கிடைத்த அரச பதவியை விரும்பாமல் ராமன் படும் கஷ்டத்தை எண்ணி, அவனை திரும்ப அழைத்துச் செல்ல வந்திருக்கிறாயே! என்னே உன் மஹிமை! இந்த உலகம் உள்ளவரை உன் புகழ் விளங்கும்’ என்று வாழ்த்துகிறான்.
[குஹன் பரதனை புகழ்தல்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/97%20bharathanum%20guhanum.mp3]
Categories