20. விஸ்வாமித்ரர் இரவின் அழகை வர்ணித்து பின் குழந்தைகளை தூங்கச் சொல்கிறார். மறுநாள் கிளம்பி புண்ய நதியான கங்கைக் கரையை அடைகிறார்கள். ராமர் ‘கங்கை எப்படி மூவுலகிலும் ஓடுகிறது?’ என்று கேட்க முனிவர் ‘விரிவாக சொல்கிறேன் கேள். ஹிமவானின் மூத்த பெண் கங்கா தேவி. இளைய பெண் பார்வதி தேவி’ என்று சொல்லி பார்வதி தேவியின் கதையை ஆரம்பிக்கிறார். [உலகமெல்லாம் வணங்கும் உமா தேவி]
Category: Bala Kandam
விஸ்வாமித்ரர் முன்னோர்கள் கதை
19. முனிவர்கள் விஸ்வமித்ரரிடம் ‘ராம லக்ஷ்மணர்களை மிதிலைக்கு அழைத்துச் செல்லுவோம்’ என்று சொல்ல விஸ்வாமித்ரரும் ஆமோதிக்கிறார். சித்தாஸ்ரமத்திலிருந்து விடைபெற்று கிளம்பி கிரிவ்ரஜம் என்ற இடத்தை அடைகிறார்கள். அன்றிரவு முனிவர் ராம லக்ஷ்மணர்களுக்கு தம் முன்னோர்களின் கதைகளைக் கூறுகிறார். [விஸ்வாமித்ரர் முன்னோர்கள் கதை]
விஸ்வாமித்ரர் யக்ஞ ரக்ஷணம்
18. ஸித்தாஸ்ரமத்தை அடைந்த பின் முனிவர் தீக்ஷை ஏற்று யாகத்தை துவங்குகிறார். யாகத்தை தடுக்க வந்த மாரீசனை, ராமர், மானவாஸ்த்ரத்தால் கடலில் தள்ளி, சுபாகுவை ஆக்னேய அஸ்த்திரத்தாலும் மற்ற அரக்கர்களை வாயு அஸ்த்ரத்தாலும் வதம் செய்கிறார். விஸ்வாத்மித்ரர் யாகத்தை பூர்த்தி செய்து ராமனை வாழ்த்துகிறார். [விஸ்வாமித்ரர் யக்ஞ ரக்ஷணம் (audio link. transcript will be added soon]
17. விஸ்வாமித்ரர் ராமருக்கு எல்லா அஸ்த்ரங்களையும் உபதேசிக்கிறார். பின்னர் அஸ்த்ரங்களை திரும்ப பெரும் மந்த்ரங்களையும் கற்றுத் தருகிறார். ஸித்தாஸ்ரமத்தை நெருங்கும் போது முனிவர் ராமருக்கு வாமன சரித்திரத்தை சொல்கிறார். [வாமன சரித்ரம் (link to audio file. Transcript given below] விஸ்வாமித்ர மஹரிஷி, தாடகா வதம் ஆன பின்னே, அன்னிக்கு ராத்திரி தூங்கி எழுந்துட்டு, அடுத்த நாள் கார்த்தால ராமன் கிட்ட, “ஹே ராமா நான் உனக்கு, அஸ்த்ரங்களெல்லாம் சொல்லித் தரேன், அஸ்த்ர வித்தைகளெல்லாம் வாங்கிக்கோ”, […]
தாடகா வதம்
16. விஸ்வாமித்ரர் குழந்தைகளுடன் காமாஸ்ரமத்தில் தங்குகிறார். சரயுவும் கங்கையும் சங்கமிக்கும் கூடலில் நதிகளை வணங்கிய பின் தாடகா வனத்துள் நுழைகிறார்கள். ராமர் முனிவரின் உத்தரவின் பேரில் தாடகையுடன் போரிட்டு அவளைக் கொல்கிறார். [தாடகா வதம் (link to audi file. Transcript given below] விஸ்வாமித்ரர் பலை அதிபலை மந்த்ரங்களை குழ்ந்தைகளுக்கு உபதேசம் பண்ணின பின்னே, சரயு நதிக் கரையா கூட்டிண்டு போறார். சரயுவும் கங்கையும் கலக்கற இடத்தில ஒரு ஆஷ்ரமம் இருக்கு, ராமர் கேக்கறார், “இது […]
15. விஸ்வாமித்ரர் ராம லக்ஷ்மணர்களுக்கு பலை அதிபலை என்ற மந்திரங்களை உபதேசிக்கிறார். மறுநாள் காலை ‘கௌசல்யா ஸுப்ரஜா ராம’ என்று சுப்ரபாதம் பாடி எழுப்புகிறார். [பலை அதிபலை மந்திரோபதேசம் (link to audio file. Transcript given below] தசரதர், ராமனை விஸ்வாமித்ரர்ட்ட ஒப்படைகணும்னு முடிவு பண்ணவுடனே, கௌசல்யைட்ட சொல்றார், கௌசல்யா தேவியும் ராமருக்கு, ஸ்வஸ்தி வாக்யங்களெல்லாம் சொல்லி, ஆரத்தி எடுத்து, ரெண்டு பேருமா குழந்தைய விஸ்வாமித்ரர்ட்ட ஒப்படைக்கறா. விஸ்வாமித்ரர்ட்ட ராமலக்ஷ்மணா வந்து சேர்ந்தபோது, தேவதுந்துபி முழங்கித்து, […]
14. விஸ்வாமித்ரர் தசரதரிடம் தன் யாகத்தை காக்கும் பொருட்டு ராமனை தன்னோடு அனுப்பும்படி கேட்க, தசரதர் மனம் கலங்குகிறார். ராமனைத் தர மறுக்கிறார்.வசிஷ்டர் விஸ்வாமித்ரரின் மகிமையை எடுத்துச் சொன்ன பின் ராம லக்ஷ்மணர்களை முனிவரோடு அனுப்புகிறார். [தசரதர் சபையில் விஸ்வாமித்ரர் . Link to audi file. Transcript given below] தசரத மஹாராஜா, விஸ்வாமித்ர மஹரிஷியை வரவேற்று பூஜை செய்து, தங்களுக்கு கைங்கரியம் செய்ய காத்திருக்கிறேன் என்று கூறியவுடன், விஸ்வாமித்ர மஹரிஷி மகிழ்ந்து புளங்காகிதமடைந்து தான் […]
விஸ்வாமித்ரர் வருகை
13. ராம லக்ஷ்மண பரத சத்ருகனர்கள் வசிஷ்டரிடம் சதுர்தச வேத வித்யைகளையும் கற்றனர். தசரதர், சபையில் அரசகுமரர்களின் திருமணத்தை குறித்து பேசிக் கொண்டு இருக்கும் போது விச்வாமித்ர முனிவர் வருகிறார். [விஸ்வாமித்ரர் வருகை. (audio file. Transcript given below] வால்மீகி பகவான் ராம ஜனனத்தை பற்றி சொல்லும்பொழுது சைத்ரே நாவமிகே திதெள || நக்ஷத்ரேSதிதிதைவத்யே ஸ்வோச்ச ஸம்ஸ்தேஷு பஞ்சஸு | க்ரகேஷு கர்கடே லக்னே வாக்பதாவிந்துனா ஸஹ | என்று, ஒரு ஒன்றரை ஸ்லோகதினுள் ராமருடைய […]
ஸ்ரீ ராம ஜனனம்
12. பரம மங்களமான ஸ்ரீ ராமர், லக்ஷ்மணர், பரதர், சத்ருக்னர் ஆகிய நால்வரின் ஜனன உத்சவம் ஸ்ரீ ராம ஜனனம் (audio file. Transcript given below) ரிஷ்ய ஸ்ருங்க முனிவர் புத்திர காமேஷ்டி பண்ணி முடித்த உடனே, அந்த அக்னில இருந்து, தேஜோ மயமா, ஒரு பெரிய, மஹானுபாவர் வந்தார், அவர் கையில ஒரு தங்க பாத்திரம், வெள்ளி மூடி போட்ட ஒரு தங்கப் பாத்திரம் வெச்சிருந்தார். அதை பார்த்த உடனே, எல்லாரும் எழுந்துக்கறா. தசரதரும், […]
வானரோத்பத்தி
11. வாலி, சுக்ரீவன், ஹனுமார், நளன் நீலன் முதலிய வானரர்களின் பிறப்பு வானரோத்பத்தி (audio file. Transcript given below) தசரத மகாராஜ செய்த அஷ்வமேத யாகத்தின் ஹாவிர் பாகத்தை வாங்கிக்க எல்லா தேவர்களும் கூடினார்கள். அப்பொழுது அவர்கள் பிரம்மாவிடம் ஒரு முறையீடு செய்கிறர்கள். “பிரம்மதேவரே, நீங்கள் இராவணன் என்ற அரக்கனுக்கு அபாரமான வரங்களை கொடுத்து உள்ளீர்கள். அவன் இப்பொழுது வலுவடைத்து எல்லோருக்கும், ஹிம்சை கொடுத்து கொண்டு லோக கண்டகனாக இருக்கிறான். நாங்க எல்லாம், நாங்கள் அவனைப் […]