Categories
Aranya Kandam

சரபங்கர் தர்சனம்

images~02

119. ராமர் சரபங்கர் ஆஸ்ரமத்தை தேடி வருகிறார். அருகில் செல்லும் போது, ராம லக்ஷ்மணர்கள், அங்கு இந்திரன் முனிவர்களுடன் வந்திருப்பதை பார்த்து வியக்கிறார்கள். சரபங்கர், ராமரை வரவேற்று உபசரித்து ‘ராம! இந்திரன் என்னை பிரம்ம லோகத்திற்கு அழைத்து செல்ல வந்திருந்தான். பிரியமான அதிதியான நீ வருவதை அறிந்து, உன்னை பார்க்க காத்திருக்கிறேன். என் புண்யங்களை உனக்கு அர்பணிக்கிறேன்.’ என்று கூறி விடை பெறுகிறார். தானே ஒரு அக்னி குண்டத்தை அமைத்து அதில் இறங்குகிறார். பூத உடலை உகுத்துவிட்டு, ஒரு தெய்வீக ஒளி உருவம் அடைந்து, பிரம்ம லோகத்தை அடைகிறார். பிரம்மா அங்கு அவரை அன்புடன் வரவேற்கிறார்.
[சரபங்கர் தர்சனம்]

[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/119%20sharabhangar%20darshanam.mp3]
Series Navigation<< விராத வதம்முனிவர்களுக்கு அபயம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.