Categories
mooka pancha shathi one slokam

குருரேவ கதி: குருமேவ பஜே


பாதாரவிந்த சதகம் 38வது ஸ்லோகம் – குருரேவ கதி: குருமேவ பஜே

दिनारम्भः सम्पन्नलिनविपिनानामभिनवो
विकासो वासन्तः सुकविपिकलोकस्य नियतः ।
प्रदोषः कामाक्षि प्रकटपरमज्ञानशशिनः
चकास्ति त्वत्पादस्मरणमहिमा शैलतनये ॥

गुरुरेव गतिः गुरुमेव भजे गुरुणैव सहास्मि नमो गुरवे ।
न गुरोः परमं शिशुरस्मि गुरोः मतिरस्ति गुरौ मम पाहि गुरो ॥

2 replies on “குருரேவ கதி: குருமேவ பஜே”

அம்பாளின் திருவடி ஸ்மரணம் செல்வங்கள்தாமரைக் காடுகள் மலர உதவும் சூரிய ஒளியயாகவும், நல்ல கவிகளாகிற குயில் கூட்டத்துக்கு வசந்தத்தை போன்றும், பரம ஞானம் எனக்கருதப்படும்
நிலவு உதயமாகும் முன்னிரவு கருதப் படுகிறது!!

சந்த்ரமண்டல மத்யஸ்த்தா என அமுதைப் பொழியும் நிலவாகக் காட்சி கொடுக்கிறாள்.! மனதால் நினைத்த மாத்திரத்தில் அவள் திருவடிகள்கண் முன் தோன்றும்!!

அம்பாள் பாத த்யானம் என்னதான் செய்யாது?
தெளிவான ஞானம் கிடைக்கும், ! ஆரம்பத்தில் சில வாழ்வுக்கு
ஆதாரமான சுகங்களையும், மேல ஒவ்வொரு படியாக உயர்ந்து,
கடைசி பட்சமான தெளிவு உயர்ந்த ஞானம் கிடைக்கும் என்பதில்
சந்தேகம் சிறிதும் இல்லை!!
அதுவும் குரு கடாக்ஷம் இருந்தால் வாழ்வின் எந்த நிலையிலும் அம்பாள் தன் அருள் கடாக்ஷத்தை அள்ளி வழங்குவாள் என்பதில்
ஐயம் சிறிதும் இல்லை!!

ஆசார்யாள் ஸௌந்தர்யலஹரியில் ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா
விதிஹரிஸபத்னோ விஹரதே என்பதாக பலஸ்துதிக்கு
முன்னதாக உள்ள ஸ்லோகம் வருகிறது.
அம்பாள் பக்தர்களுக்கு அவர்களுக்கு என்னென்ன வெல்லாம்
தேவையோ அவை அனைத்தும் கிடைக்கும் என்ற அர்த்ததில்
வருகிறது
ஸஹஸ்ர நாமத்தில் ஸசாமர ரமா வாணி ஸவ்ய தக்ஷிண
ஸேவிதா என்பதகா.
அம்பாளுக்கு ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் இரு புறமும் சாமரம்
வீசுகிறார்களாம்!!
கிம்கரோமி என்று கேட்டு அம்பாளுக்கு சேவைசெய்கிறார்கள்!
அப்படிப்பட்ட தேவியின் பாதங்களை சரணடைந்தால்
நாம் வேண்டிய அனைத்தும் கிடைக்கும் என்று பெரியவா சொல்கிறார்!

பசு பாசத் தொடர்பு அற்றுப்போவதற்கும் அவள் த்யானம் தான் எல்லை!

படிப்படியாக இவற்றை அடைய அவள் திருப்பாதத்தை பிடித்து
கறையேற குரு பக்தியும் உடன் வேண்டும்!
இவற்றைத் தெளிவாக அழகாக உரைத்த கணபதிக்கு என் நன்றி!

ஜய ஜய சங்கரா…

ஜய ஜய ஜகதம்ப சிவே….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.