
127. லக்ஷ்மணன் மிக அழகாக பனிக்காலத்தை வர்ணிக்கிறான். அப்போது அவன் பரதனின் த்யாகத்தையும் தவத்தையும் மெச்சி பேசியதை ராமர் ரசிக்கிறார். லக்ஷ்மணன் கைகேயியை பழித்து பேச, ராமர் அதைக் கண்டிக்கிறார்.
Categories

128. ராமர் ரிஷிகளோடும் சீதாதேவியோடும் பேசிக் கொண்டு இனிமையாக பொழுதைக் கழிக்கிறார். ஒரு நாள் அங்கே சூர்பனகை என்ற ராக்ஷசி வருகிறாள். அவள் ராமரைக் கண்டவுடன் காமவசப்பட்டு அவரிடம் “என்னை மணந்து கொள்” என்று கேட்கிறாள். ராமர் விளையாட்டாக “என் அருகில் என் பிரியமான மனைவி சீதை இருக்கிறாள். நீ என் தம்பி லக்ஷ்மணனிடம் கேள்” என்கிறார்.