இன்னிக்கு அறுபத்துமூவர் உத்சவம், நாயன்மார்கள் பக்தியை பத்தியே யோசிச்சிண்டு இருந்தேன், அந்த பக்தின்னா என்ன, அப்படின்னா? நாம நம்மளுக்கு வேண்டியதை சாப்படறோம், துணி வாங்கிக்கறோம், நம்முடைய சந்தோஷத்தை தேடிண்டே இருக்கோம். அது சில சமயம் கிடைக்கறது, unsullied pleasure அப்படின்னு ஒண்ணுமில்லை. சுகம்னு ஒண்ணு பின்னாடி போனா, அதுக்கு இடைஞ்சல் ஒண்ணு வரது, அந்த சுகத்தை கெடுக்க. ஒரு cinema பார்க்க போனோம்னா கூட இங்கேயிருந்து theater வரைக்கும் போக வேண்டியிருக்கு, car parking கிடைக்க மாட்டேங்கிறது. என்னவோ அந்த படம் நன்னா இருக்க மாட்டேங்கிறது, ஏதோ, அந்த மாதிரி, சுகம் எங்கிறது நாம நினைக்கறா மாதிரி எப்பவும் அமையறதில்லை. ரொம்ப சுகமாவே இருந்தா கூட, அது முடிஞ்சு போய்டறது, சுகம்ங்கிறது முடிஞ்சு, ஒரு வெறுமை வரது.