Categories
Ayodhya Kandam

ராமர் பிதுர்தர்ப்பணம் செய்தார்

kousalya lakshmana107. பரதன் சொன்ன சோகச் செய்தியைக் கேட்டு ராமர் மயக்கம் அடைகிறார். பின் தெளிந்து ‘என் பிரிவால் இறந்த என் தந்தையின் ஈமக் கடன்களைக் கூட நான் செய்ய முடியவில்லையே. தசரதர் இல்லாத அயோத்திக்கு நான் திரும்ப வரப்போவதில்லை. அனாதைகள் ஆகி விட்டோமே லக்ஷ்மணா’ என்று பலவாறு புலம்புகிறார்.
[ராமர் பித்ருசோகம்

Categories
Ayodhya Kandam

பரதனுக்கு ராமர் உபதேசம்

rama-bharat106. ராமர் பரதனுக்கு மேலும் பல ராஜ தர்மங்களை உபதேசிக்கிறார். முடிவாக ‘நம் முன்னோர்கள் சென்ற வழியில் தர்மத்தை முன்னிறுத்தி ஆட்சி செய். நல்ல அரசனுக்கு இவ்வுலகில் கீர்த்தியும் மேலுலகில் சுவர்க்கமும் கிடைக்கும்’ என்று சொல்லி முடிக்கிறார். பரதன் ‘மூத்தவன் நீ இருக்க இளையவனான எனக்கு எப்படி பட்டம் சூட்ட முடியும்? எங்களோடு அயோத்தி திரும்பி வந்து நீ தான் அரசனாக பட்டம் சூட்டிக் கொள்ள வேண்டும். நீ காட்டிற்கு வந்த பின் உன் பிரிவினால் வருந்தி நம் தந்தையார் காலகதி அடைந்து விட்டார்’ என்று கூறுகிறான்.

[ராமாயணத்தில் அரசாட்சி]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/106%20ramar%20pithrushokam.mp3]

Categories
Ayodhya Kandam

அதோ சித்ரகூடம் இதோ மந்தாகினி

bharatha in forest
101. பரதன் தன் அண்ணா ராமனிடம் கொண்டுள்ள பக்தியை கண்டு மகிழ்ந்த பரத்வாஜர், அவனுக்கு சித்ரகூடம் செல்லும் வழியை கூறுகிறார். கௌசல்யா தேவி, சுமித்ரா தேவி மற்றும் கைகேயி தேவியும் வந்து வணங்கும் போது பரதன் அவர்களை அறிமுகம் செய்து வைத்து தன் அம்மாவை குறைத்து பேசுகிறான். பரதவாஜர் அவனிடம் ‘கைகேயியை இனி திட்டாதே. ராமர் வனவாசத்தால் ஒரு பெரும் நன்மை ஏற்படப் போகிறது’ என்று கூறுகிறார். பரதன் உத்தரவு பெற்று கிளம்புகிறான். சித்ரகூட மலையை பார்த்தவுடன் ‘அதோ சித்ரகூடம் இதோ மந்தாகினி’ என்று பூரிப்பு அடைகிறான்.

[மந்தாகினி தீரத்தில் பரதன்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/101%20chitrakootam%20mandaakini.mp3]

Categories
Ayodhya Kandam

பரத்வாஜர் அளித்த விருந்து

bharadwaja feast
100. பரத்வாஜர் பரதனுடைய சேனைக்கு தெய்வங்களின் உதவியால் ஒரு அற்புதமான விருந்து படைக்கிறார். எல்லோரும் விருந்தில் மயங்கி ‘நாம் அயோத்திக்கும் போக வேண்டாம். சித்ரகூடத்திற்கும் செல்ல வேண்டாம். இங்கேயே இருந்து விடலாம்.’ என்கிறார்கள். பரதன் மனம் இவற்றில் செல்லவில்லை. ஒரு சிம்மாசனத்தை பார்த்ததும் ராமர் அங்கு அமர்ந்து இருப்பதாக பாவித்து அதை வணங்குகிறான். பொழுது விடிந்ததும் முனிவரிடம் ‘எனக்கு என் அண்ணா ராமர் இருக்கும் இடத்தை தெரிவிக்க வேண்டும்’ என்று வேண்டுகிறான்.

[பரத்வாஜர் அளித்த விருந்து]

Categories
Ayodhya Kandam

பரதனும் பரத்வாஜரும்

bharadwaja 99. பரதன், குகனுடைய படகோட்டிகள் உதவியோடு கங்கையை கடந்து, கங்கையும் யமுனையும் கூடும் பிரயாகையில், பரத்வாஜர் ஆஸ்ரமத்தை அடைந்து அவரை வணங்குகிறான். பரத்வாஜர், வசிஷ்டர் பரதன் முதலான அனைவரையும் வரவேற்று உபசரிக்கிறார். பரதனிடம் முதலில் சந்தேஹம் கொண்டவர் போலப் பேசி, பின் அவனுடைய உறுதியான ராம பக்தியை அறிந்து அவனை ஆசிர்வதிக்கிறார்.

[பரதனும் பரத்வாஜரும்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/99%20bharathanum%20bharadwajarum.mp3]

Categories
Ayodhya Kandam

பரதனும் குஹனும்

bharatha goes to forest
97. பரதன் சேனையோடு காட்டிற்கு கிளம்பி கங்கைக் கரையை அடைந்து அங்கு தங்குகிறான். படையைக் கண்ட குஹன் தன் வேடர்களிடம் ‘இந்த பரதன் ராமனின் எதிரியாய் இருந்தால், கங்கையை கடக்க நாம் விடக்கூடாது’ என்று சொல்கிறான். பிறகு பரதனை சந்தித்து அவனிடமே ‘ஏன் சேனையோடு வந்திருக்கிறாய்?’ என்று கேட்கிறான். பரதன் ‘ராமனுடைய தோழனான நீயே அவனுக்காக உயிரையும் தரத் துணியும் போது அவன் தம்பியான நான் அவனுக்கு கேடு நினைப்பேனா? என் மீது சந்தேஹம் வேண்டாம். ராமரை திரும்ப அழைத்துச் செல்லவே வந்துள்ளேன்.’ என்று சொல்கிறான். குஹன் மிக மகிழ்ந்து  ‘எளிதில் கிடைத்த அரச பதவியை விரும்பாமல் ராமன் படும் கஷ்டத்தை எண்ணி, அவனை திரும்ப அழைத்துச் செல்ல வந்திருக்கிறாயே! என்னே உன் மஹிமை! இந்த உலகம் உள்ளவரை உன் புகழ் விளங்கும்’ என்று வாழ்த்துகிறான்.

[குஹன் பரதனை புகழ்தல்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/97%20bharathanum%20guhanum.mp3]

Categories
Ayodhya Kandam

பரதனின் உயர்ந்த ராமபக்தி

bharatha vasishta
96. வசிஷ்டர் பரதனை விமரிசையாக சபைக்கு வரவேற்று அவனை முடி சூட்டிக் கொள்ளும்படி வேண்டுகிறார். பரதன் அவரைக் கண்டித்து ‘அயோத்தியும் நானுமே ராமனின் சொத்து. தசரதருக்கு பிறந்த நான் எப்படி ராமனின் சொத்தை அபகரிப்பேன்? என் மனம் மாறாமல் இருக்க இங்கிருந்தே வனத்தில் இருக்கும் தர்ம வடிவான ராமரை வணங்குகிறேன். சுமந்திரரே! படை கிளம்பட்டும். நாமும் புறப்படுவோம்.  ராமனை காட்டிலிருந்து அழைத்து வருவோம்’ என்று உத்தரவு இடுகிறான்.

[இங்கிருந்தே ராமரை வணங்குகிறேன்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/96%20bharathan%20rama%20bhakthi.mp3]

Categories
Ayodhya Kandam

ராமனே ராஜா

Tirta Ganga Palace
95. பரதனிடம் மந்திரிகள் முடி சூடிக்கொள்ளும்படி சொல்கிறார்கள். பரதன் அதை மறுத்து ‘அனைவரும் சென்று ராமனுக்கு காட்டிலேயே முடி சூட்டி அவனை அழைத்து வருவோம். சில்பிகளைக் கொண்டு அயோத்தியிலிருந்து கங்கை கரைக்கு ஒரு பாதை அமையுங்கள்’ என்று உத்தரவு இடுகிறான். அந்த ஆணைப்படி சில்பிகள் கிணறுகளும், குளங்களும், அணைகளும், நிழல் தரும் மரங்களும், தங்குமிடங்களும், கொண்ட ஒரு பாதையை வடிவமைக்கிறார்கள்.
[அயோத்தியிலிருந்து கங்கைக்கரைக்கு பாதை]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/95%20raman%20thaan%20rajaa.mp3]

Categories
Ayodhya Kandam

தசரதர் ஈமக்கடன்

bharatha_dasaratha
94. வசிஷ்டர் பரதனிடம், தசரதரின் ஈமக்கடன்களை செய்யும்படி சொல்கிறார். பரதனும் சத்ருக்ணனும் முறைப்படி தசாதரின் உடலை தகனம் செய்துவிட்டு, பன்னிரெண்டாம் நாள் ஸ்ராத்தம் செய்து, பதிமூன்றாம் நாள் அஸ்தியை எடுக்கும் போது தரையில் விழுந்து புரண்டு அழுகிறார்கள். வசிஷ்டரும் சுமந்திரரும்  ‘பிறக்கும் எவர்க்கும் இறப்பு உண்டு. மனத்தை தேற்றிக் கொள்ளுங்கள்’ என்று கூறி அவர்களை சமாதானம் செய்கிறார்கள். மறுநாள் சத்ருக்ணன் கூனியை பார்த்த போது அவளை கிழே தள்ளி அடிக்க முற்படுகிறான். அப்போது பரதன், ‘நாம் இவளைக் கொன்றால் ராமர் நம்மோடு பேசவும் மாட்டார். விட்டுவிடு’ என்று கூறி அழைத்து செல்கிறான்.
[தசரதர் ஈமக்கடன்]

[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/94%20dasarathar%20iimakkadan.mp3]
Categories
Ayodhya Kandam

பரதன் தன்னிலை விளக்கம்

bharathan kousalya
93. பரதன் மேலும் கைகேயியிடம் ‘நீ கௌசல்யா தேவி தன் ஒரே மகனைப் பிரிந்து எவ்வளவு துன்பம் அடைவாள் என்பதைக் கூட நினைத்து பார்க்கவில்லையே’ என்று வருந்துகிறான். கௌசல்யா தேவி வந்து பரதனிடம் ‘உனக்கு திருப்தி தானே! என்னையும் காட்டிற்கு அழைத்துச் சென்று என் மகனிடம் விட்டுவிடு’ என்கிறாள். பரதன் பல கடுமையான பாபங்களைக் குறிப்பிட்டு ‘எவன் விருப்பத்தின் பேரில் ராமர் காட்டிற்கு போனாரோ அவன் இந்த பாபங்களை அடையட்டும்’ என்று கூறி ராமர் காட்டிற்கு போனதுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விளக்குகிறான். கௌசல்யா தேவி மனம் மாறி அவனை சமாதானம் செய்கிறாள்.
[பரதன் கௌசல்யா தேவியை சமாதானம் செய்தல்]

[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/93%20bharathan%20kousalya.mp3]