Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 47வது ஸ்லோகம் பொருளுரை


சிவானந்தலஹரி ஸ்லோகம் 47 தமிழில் பொருள் (10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 47)

Series Navigation<< சிவானந்தலஹரி 46வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 48வது ஸ்லோகம் பொருளுரை >>

2 replies on “சிவானந்தலஹரி 47வது ஸ்லோகம் பொருளுரை”

மனமென்னும் ராஜஹம்ஸம் பக்தியோடு வஸிக்க ஆரம்பித்தபின், “வறண்டு கிடந்த ஹ்ருதயக் காட்டில், ‘சம்பு த்யானம்’ என்கிற இளவேனிற்காலம் ஆரம்பிக்கிறது. பாப இலைகள் உதிர்ந்து, “மனஸில் இருக்கிற பக்தி, இவனுடைய ஹ்ருதயத்தில் கொடியா படர ஆரம்பிக்கிறது!” புண்ணியங்கள், நற்குணங்கள், நற்கர்மங்கள், ஜப மந்த்ரங்கள் எல்லாம் ப்ரகாசிக்கிறதா சொல்லி, கடைசியாக “ஞானானந்த அம்ருதமும், ப்ரம்மஞானமும் ஒளிவிடுகிறது” என்று இந்த ஸ்லோகத்தில் மிக அருமையாக சொல்கிறார் பகவத்பாதாள்.🙏🌸

இங்க பரமேஸ்வரனை ‘சம்பு’ என்று குறிப்பிடுகிறார் பகவத்பாதாள். மஹாபெரியவா ‘சம்பு’வுக்கு அர்த்தம் சொல்லும் போது, “நித்திய சுகம் உற்பத்தியாகிற இடம்” என்றும், “பரமேஸ்வரன் அத்வைத ப்ரஹ்மமாக தக்ஷிணாமூர்த்தி ரூபத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது மோக்ஷானந்த உற்பத்தி ஸ்தானமாக இருப்பதால் அவருக்கு சம்பு என்று பெயர்.” என்று சொல்லியிருப்பார். இந்த ஸ்லோகத்தில் ஞானானந்த அம்ருதமும், பிரம்மஞானமும் பிரகாசிக்க ஆரம்பிக்கிறது. அது ‘சம்பு’ தானே கொடுக்க முடியும்?! அதனால் ‘சம்பு’ என்று பரமசிவனை குறிப்பிடுகிறார் போலும்!🙏🌸

‘ஈசன் எந்தை இணையடி நீழலே’ என்று சரண த்யானம் தான் ரொம்ப முக்கியம் என்று தெரிகிறது. மூகபஞ்சசதியில், ‘கவிதை என்கிற பிருந்தாவனத்தில் அம்பாள் உல்லாசமா இருக்கா’ என்று சொன்ன மேற்கோள் மிக அருமை! ஸ்வாமிகள் ரஸிகரா இருந்து அனுபவிச்சதை, நீங்களும் ரஸிச்சு, எங்களையும் அந்த ஆனந்த ரஸத்தில் மூழ்க வைக்கிறேள். அற்புதம்!👌🙏🌸

மனம் என்பது இங்கு உதியாவணமாகவும், ஈஸ்வர த்யானம் வசந்த காலமாகவும் இங்கு கற்பித்துக் கூறப்பட்டுள்ளது ! உதியாவணங்களில் இலை உதிர் காலத்தில் பழைய இகள் காய்ந்து விழுந்து வசந்த காலத்தில் புதிய இலை, , தளிர் திலிர் விட்டு, மோக்கு புஷ்பம யாவும். தோன்றி அவற்றின் வாசனையும், பழங்களின் நறு மனத்துடன் விளங்குகிறது அல்லவா?
அதே போல் பரமேஸ்வர் தியானமாகிய வசந்த காலம் சம்பவித்ததும் பாபண்கள் எல்லாம் உதிர்ந்து, புண்யம் என்ற துளிற்கள், நற்குணம் என்ற மோட்டுகள், மந்திரம் என்ற புஷ்பங்கள் ஸத் கார்யங்களில் ஈடுபடுவதாக வாசனை இவை எல்லாவற்றுடன் பக்தி என்றகொடிகள், பின் ஞானம் என்ற அமுதம், ஆனந்தாமகிய தேன் இவை எல்லாம் பெருக்கெடுத்து, ஓடுகிறதாக ஆசார்யாள் சொல்கிறார் !
சிவ பக்தி என்னதான் செய்யாது?
இதே பொருள்படும் மூக பஞ்ச சதி யை விளக்கியது எத்தகைய பொருத்தம் !
சும்பாசுரர்களின் எதிரியான இந்திரன் முதலிய தேவர்களின் மணிமுடிகள்களைத் தாங்கும் அம்பாளின் பீடமாகவல்லவா விளங்குகிறது?
சௌந்தர்யலஹரியிலும் இதே பொருள் பட ஆசார்யாள் சொல்லியிருக்கிறார் ! த்ராயானாம்
தேவாநாம் என்று தொடங்கும் ஸ்லோகத்தில் .
கவிகள் வாக்குகளால் இயற்றப்படும் கவிதைகளை தான் நடமாடும் சோலைகளாக்கி , மரங்களின் மீது தன் ரத்நாபரண ஒளியைப் பாய்ச்சி , சிறந்த பாக்யமாக்குகிராள் , கம்பர் , காளிதாசர், மூக கவி இவர்கள் கவிதைகள் அம்பாள் நடமாடும் அரங்காகும் !
வேதம் எனும் சோலையில் நடை பயிலும் மயில் என ஆசார்யாள் நவரத்ன மாலிகாவில் சொன்னது இங்கு நினைவு கொள்ளத் தக்கது !

மிக அழகான உவமானங்களுடன் சொல்லியிருப்பது இவர் குரு பக்தியையும், அவரிடம் உள்ள ஈடுபாட்டையும் காண்பிக்கிறது !!
ஜய ஜய சங்கரா…
கிருத்திகா சோமவார காலத்தில் ஒர் நல்ல விருந்து ,!!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.