46. கூனி ‘ராமன் ராஜாவானால் நீ கௌசல்யைக்கு வேலைக்காரியாக தான் இருக்க வேண்டும். பரதனை ராமன் மேலுலகம் அனுப்பிவிடுவான்’ என்று பலது கூறி கைகேயியின் மனத்தில் பொறாமையை வளர்கிறாள். கைகேயி மனம் மாறி, பரதனை அரசனாக்க உபாயம் கேட்கிறாள். முன்பு தசரதர் உயிரைக் காப்பாற்றிய போது அவர் தந்த இரண்டு வரங்களைக் கொண்டு பரதனை அரசனாக்கி ராமனை காட்டுக்கு அனுப்பும்படி கூனி யோசனை கூறுகிறாள்.
[கூனி சொன்ன யோசனை]
Tag: valmiki ramayana audio mp3 in tamil
கூனி வருகை
45. மந்தரை என்ற கைகேயியின் பணிப்பெண் ஒருத்தி, ராமருக்கு பட்டாபிஷேகம் என்று கேட்டவுடன் பொறாமை அடைகிறாள். கைகேயியிடம் வந்து செய்தியை தெரிவித்து ‘இதனால் உனக்கும் பரதனுக்கும் ஆபத்து’ என்கிறாள். கைகேயி அதை காதில் வாங்காமல் ‘ஆஹா! என் ராமனுக்கு பட்டபிஷேகமா’ என்று மிக மகிழ்ந்து கூனிக்கு முத்து மாலை ஒன்றை பரிசளிக்கிறாள்.
[கூனி வருகை]
கங்காவதரணம்
24. சகர மன்னரும், அம்சுமானும், திலீபனும் முயற்சி செய்த பின் பகீரதன் நாட்டைத் துறந்து காடு சென்று கடும் தவம் செய்து பிரம்ம தேவரை வேண்ட அவரும் மகிழ்ந்து கங்கையை பூமிக்கு அனுப்ப இசைகிறார். ஆனால் கங்கை விழும் வேகத்தை தாங்க பரமேஸ்வரன் ஒருவரால் தான் முடியும் என்று பிரம்மா சொல்ல பகீரதன் சிவபெருமானை வேண்டுகிறான். சிவபெருமான் கங்கையை தன் ஜடாபாரத்தில் தாங்கி பூமியில் விட, புண்ய கங்கை பூமியிலும், பாதாளத்திலும் ஓடி சகர புத்ரர்களை கரை சேர்க்கிறாள். [கங்காவதரணம் 8 min audio giving meaning of sargams 42, 43, 44 Balakamdam]
ஸகர புத்ரர்கள்
23. சகர மன்னருக்கு ப்ருகு முனிவர் பிள்ளை வரம் அளிக்கிறார். சகர மன்னர் செய்த அஸ்வமேத யாகத்தில் யாகக் குதிரையை இந்திரன் திருடிச் சென்று பாதாளத்தில் கபில முனிவரின் ஆஸ்ரமத்தில் கட்டி விட, சகர புத்ரர்கள் அந்த குதிரையை தேடிச் செல்லும் போது கபில முனிவரின் கோபத்துக்கு ஆளாகி சாம்பலாகி விடுகிறார்கள். அம்சுமான் அக்குதிரையை மீட்டு வந்த பின் சகர மன்னர் யாகத்தை பூர்த்தி செய்கிறார். [சகர புத்ரர்கள்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/23%20sagara%20puthrargal.mp3]
திருமுருகாற்றுப்படை
22. முருகப் பெருமானின் பெருமையை தமிழ்ப் புலவர்களும் பக்தியோடு பாடியுள்ளார்கள். அவற்றுள் நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை மிகத் தொன்மை வாய்ந்தது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலான நூல்கள் முருகனின் மார்பில் தவழும் மதாணியின் நவரத்தினங்கள் . [திருமுருகாற்றுப்படை]
குமார சம்பவம்
21. சிவபெருமானின் தேஜஸை, அக்னி பகவான் கங்கையிடம் அளிக்கிறார். கங்கை அதை சரவணப் பொய்கையில் சேர்க்க, அங்கு முருகப் பெருமான் ஆறு குழந்தைகளாய் அவதரிக்கின்றார். பார்வதி தேவி அள்ளி எடுத்தவுடன் ஆறுமுகராக ஆகிறார். பின் தேவர்களுக்கு சேனாதிபதி ஆகி சூரபத்மனை சம்ஹாரம் செய்கிறார். [குமார சம்பவம்]
உமாம் லோகநமஸ்க்ருதாம்
20. விஸ்வாமித்ரர் இரவின் அழகை வர்ணித்து பின் குழந்தைகளை தூங்கச் சொல்கிறார். மறுநாள் கிளம்பி புண்ய நதியான கங்கைக் கரையை அடைகிறார்கள். ராமர் ‘கங்கை எப்படி மூவுலகிலும் ஓடுகிறது?’ என்று கேட்க முனிவர் ‘விரிவாக சொல்கிறேன் கேள். ஹிமவானின் மூத்த பெண் கங்கா தேவி. இளைய பெண் பார்வதி தேவி’ என்று சொல்லி பார்வதி தேவியின் கதையை ஆரம்பிக்கிறார். [உலகமெல்லாம் வணங்கும் உமா தேவி]
விஸ்வாமித்ரர் முன்னோர்கள் கதை
19. முனிவர்கள் விஸ்வமித்ரரிடம் ‘ராம லக்ஷ்மணர்களை மிதிலைக்கு அழைத்துச் செல்லுவோம்’ என்று சொல்ல விஸ்வாமித்ரரும் ஆமோதிக்கிறார். சித்தாஸ்ரமத்திலிருந்து விடைபெற்று கிளம்பி கிரிவ்ரஜம் என்ற இடத்தை அடைகிறார்கள். அன்றிரவு முனிவர் ராம லக்ஷ்மணர்களுக்கு தம் முன்னோர்களின் கதைகளைக் கூறுகிறார். [விஸ்வாமித்ரர் முன்னோர்கள் கதை]
அயோத்யா நகர மாந்தர்கள் பெருமை
7. அயோத்யா நகர வர்ணனை, அயோத்யா மாந்தர்கள் குணநலம், தசரதரின் மந்த்ரிகள் சிறப்பு, அவர் சபையை அலங்கரித்த ரிஷிகளின் மேன்மை.
[அயோத்தியில் தசரதர் ஆக்ஷி] (audio file. transcript given below)