41. தசரதர், ராஜசபையை கூட்டி, பெரியோர்களிடம், தன் மகன் ராமனை யுவராஜாவாக பட்டாபிஷேகம் செய்து வைத்து, தான் ஓய்வெடுக்க விரும்புவதாக கூறி உத்தரவு கேட்கிறார். அனைவரும் பெருமகிழ்ச்சியோடு அதை வரவேற்கிறார்கள். தசரதர் ‘இவ்வளவு சந்தோஷப் படுகிறீர்களே, என் ஆட்சியில் ஏதும் குறை இருக்கிறதா?’ என்று வேடிக்கையாக கேட்கிறார். ஜனங்கள் ராமருடைய பெருமைகளை விரிவாக எடுத்துக் கூறி ‘இப்பேர்பட்ட ராமனை நாங்கள் ராஜாவாக அடையும்படி நீங்கள் வரம் தர வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறார்கள்.
[ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்திற்கு பெரியோர்கள் அனுமதி]
Tag: ராமாயணம் கதை
ஸ்ரீராமரின் கல்யாண குணங்கள்
40. பரதன், சத்ருக்னனோடு கேகய ராஜ்யத்திற்கு செல்கிறான். தசரதர், ராமரின் உயர்ந்த குணங்களையும், மக்கள் அவனிடம் கொண்டிருந்த அன்பையும் நினைத்து, தனக்கு முதுமை வந்ததுவிட்டது என்பதையும் எண்ணி, ராமனை யுவராஜாவாக பட்டாபிஷேகம் செய்ய தீர்மானித்தார்.
[ஸ்ரீராமரின் கல்யாண குணங்கள்]
அயோத்தியில் சீதையோடு ராமர்
39. ராம லக்ஷ்மண பரத சத்ருக்னர்கள் தம்தம் மனைவிகளோடு அயோத்தி வந்தவுடன், அயோத்தி மக்களும் தசரதர் மனைவிகளும் அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். சீதையோடு கூடிய ராமர், லட்சுமி தேவியுடன் கூடிய விஷ்ணு பகவானைப் போல் ஆனந்தமாய் விளங்கினார்.
[அயோத்தியில் சீதையோடு ராமர்][audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/39%20ramar%20sitai%20anyonyam.mp3]
பரசுராமர் கர்வ பங்கம்
38. ஸ்ரீராமர் பரசுராமரிடமிருந்து அந்த விஷ்ணு தனுசை வாங்கி நாணேற்றி அம்பு தொடுத்தவுடன் பரசுராமர் ராமரை விஷ்ணு பகவானே என்று அறிந்து கொள்கிறார். தன் நாராயண தேஜஸை ராமரிடம் ஒப்படைத்துவிட்டு, ராமரின் அம்பிற்கு இலக்காக தான் தவத்தால் வென்ற உலகங்களையும் அளித்து விடை பெறுகிறார்.
[பரசுராமர் கர்வ பங்கம்]
பரசுராமர் வருகை
37. சீதா கல்யாணம் முடிந்தபின் விஸ்வாமித்ரர் அரசர்களிடம் விடை பெற்று ஹிமயமலைக்கு செல்கிறார். தசரதர் ஜனகரிடம் விடை பெற்று புது மணத்தம்பதிகளோடு அயோத்திக்கு திரும்பும் வழியில் பரசுராமர் எதிரில் வருகிறார். ராமரிடம் தான் கொண்டு வந்த விஷ்ணு தனுசை வளைத்து நாணேற்றி அம்பு தொடுத்தால் யுத்தம் புரிவோம் என்று அறைகூவல் விடுக்கிறார்.
[பரசுராமர் வருகை][audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/37%20parasuramar%20varugai.mp3]
ஸீதா கல்யாண வைபோகமே
36. முனிவர்கள் குறித்த மங்கள நன்னாளில், ஜனகர் தன் நான்கு பெண்களை அலங்கரித்து அழைத்து வர, தசரதரும் தன் நான்கு புதல்வர்களையும் அழைத்து வருகிறார். ஸீதா தேவியின் கரங்களை ஜனகர் ஸ்ரீ ராமரின் கரங்களில் கொடுத்து ‘இந்த என் பெண் சீதையை உன் மனைவியாக ஏற்றுக் கொள். உனக்கு மங்களம் உண்டாகட்டும். இவள் கைகளைப் பற்றிக்கொள். இவள் கணவனையே தெய்வமாக கொண்டு உனக்கு தர்மங்களை பின்பற்றுவதில் துணை நிற்பாள். உன்னை எங்கும் நிழலெனப் பின்தொடர்வாள்.’ என்று கூறி மந்திரங்களால் தூய்மை செய்யப்பட்ட ஜலத்தை கைகளில் விட்டு கன்யகாகாதானம் செய்து கொடுக்கிறார். அவ்வாறே மற்ற மூன்று பெண்களான ஊர்மிளை மாண்டவி மற்றும் ஸ்ருதகீர்தியை முறையே லக்ஷ்மண பரத சத்ருக்னருக்கு கன்யகாகாதானம் செய்து தருகிறார்.
[ஸீதா கல்யாணம்]
35. ஜனகர் சபையில் வசிஷ்ட பகவான், தசரதரின் பூர்வ வம்சத்தைக் கூறி ராமனுக்கு சீதையை பெண் கேட்கிறார். ஜனகர் தன் பூர்வ வம்சத்தைகச் சொல்லி ராமருக்கு சீதையையும் லக்ஷ்மணனுக்கு ஊர்மிளையையும் மணம் செய்து தர சம்மதிக்கிறார். விஸ்வாமித்ரர், பரதனுக்கும் சத்ருக்னனுக்கும் ஜனகரின் தம்பியின் பெண்களான மாண்டவியையும் சுருதகீர்த்தியையையும் மணமுடிக்கலாம் என்று கூற, ஜனகர் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொள்கிறார்.[வசிஷ்டர் சீதையை ராமருக்கு பெண் கேட்கிறார்]
தசரதர் மிதிலை வந்து சேர்ந்தார்
34. ஜனகர், விஸ்வாமித்ரர் அனுமதி பெற்று, தசரதரை அழைத்து வர தூதர்களை அனுப்புகிறார். தசரதர் கல்யாண சேதி கேட்டு சந்தோஷத்துடன் அனைவரையும் அழைத்துக் கொண்டு மிதிலை வந்து சேர்கிறார். ஜனகர் அவர்களை வரவேற்று உபசரித்து கல்யாணத்திற்கு நாள் குறிக்கிறார்.[தசரதர் மிதிலை வந்து சேர்ந்தார்]
சிவ தனுசை ராமர் நாண் ஏற்றினார்
33. விஸ்வாமித்ரரின் உத்தரவின் பேரில் ஜனக மஹாராஜா தன்னிடமிருந்த சிவ தனுசை ராம லக்ஷ்மணர்களுக்கு காண்பிக்கிறார். இந்த வில்லை ராமன் எடுத்து நாண் ஏற்றினால் என் மகள் ஸீதையை அவனுக்கு மணமுடித்து தருவேன் என்று கூறுகிறார். ராமர், முனிவரிடம் உத்தரவு பெற்று அந்த வில்லை எடுத்து நாண் பூட்டும் போது அந்த வில் அவருடைய அபார பலத்தினால் இரண்டாக முறிந்து விழுகிறது. ஜனக மஹாராஜா தன் மகளுக்கேற்ற மணாளன் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறார். [சிவ தனுசை ராமர் நாண் ஏற்றினார்]