குழந்தையிலிருந்தே ராமபக்தி (6 min audio in tamizh same as the script above)
யௌவன வன ஸாரங்கீம்

இந்த வலைதளத்தில் இருபத்து மூன்று பகுதிகளாக வெளியிட்ட முகுந்தமாலா உபன்யாசங்களை தொகுத்து, திருத்தங்கள் செய்து, ஒரு புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, படிக்க வசதியாக இருக்கும் என்று இதைச் செய்துள்ளேன். இணைப்பு இங்கே முகுந்தமாலா

அருணகிரிநாதர் அருளிய பாடல்களில் திருவகுப்புகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. பெண் மையல் போக வேண்டும், மரண பயம் போக வேண்டும் போன்ற பிரார்த்தனைகள் முடிந்த ஒரு அநுபூதி நிலையில், முருகப் பெருமானை, அவனுடைய திருப்பாதங்களை, வேலை, மயிலை, காமாக்ஷி அம்பாளை, வள்ளியம்மை பெற்ற அனுக்ரஹத்தை, போற்றும் தன்னிகரற்ற துதிப் பாடல்களாக இவை அமைந்துள்ளன. இவற்றை அதிகமாக பாராயணம் பண்ண வேண்டும் என்ற ஆவலில், முதலில் விநாயகர் அகவலையும், பின்னர் ஆறு திருவகுப்புப் பாடல்களையும், அடுத்து அறுபடை வீடு பஞ்ச பூத ஸ்தலங்கள் திருப்புகழ், நடுவில் கந்தரனுபூதி, முடிவில் திருவெழுக்கூற்றிருக்கை பாடலையும் அமைத்து, இடையிடையில் திருப்புகழ், அநுபூதி, அலங்காரப் பாடல்களையும் சேர்த்து ஒரு பத்ததி போல இந்த புத்தகம் அமைந்துள்ளது. இதை ஸ்வாமிகளிடம் நிறைய முறை படித்து இருக்கிறேன். அவரும் மீண்டும் மீண்டும் விரும்பி கேட்டு, நிறைய ஞானக் கருத்துகளை பகிர்ந்து கொள்வார். அவற்றில் சிலவற்றை புத்தகத்தின் முடிவில் சேர்த்து இருக்கிறேன். படித்து இன்புறுவோம்.
கர்ம பக்தி ஞானம்

நம்ம ஸ்வாமிகள், தன்னை அண்டி வந்து நமஸ்காரம் பண்ணினவா எல்லாரையும் ஒரு ஸ்தோத்ர பாராயணம், ஒரு நாமஜபம், ராமாயண பாகவதம் படிக்கறது, இதெல்லாம் கூட தனிமையில் பண்ணுங்கோ. நாம வ்யாசர், வால்மீகி கூட ஸத்சங்கம் பண்ணலாம். தற்கால ஸத்சங்கங்கள் எல்லாம் சரியில்லைன்னு சொல்லி, இந்த பஜன மார்க்த்திலேயே செலுத்தினார் அப்படீன்னு சொல்லிண்டே வரேன். அப்போ அவர் மத்த நல்ல கார்யங்களை எல்லாம் ஒத்துக்கலையா?கர்ம மார்க்கமோ, ஞான மார்க்கமோ, அவர் அதைப் பத்தி என்ன சொன்னார்னு ஒரு கேள்வி வரது.
காசித் க்ருபா கந்தலீ (13 min audio, same as the transcript above)
कान्तैः केशरुचां चयैर्भ्रमरितं मन्दस्मितैः पुष्पितं
कान्त्या पल्लवितं पदाम्बुरुहयोर्नेत्रत्विषा पत्रितम् ।
कम्पातीरवनान्तरं विदधती कल्याणजन्मस्थली
काञ्चीमध्यमहामणिर्विजयते काचित्कृपाकन्दली ॥
தேவேந்திர சங்க வகுப்பு

பாகவதத்தில் சொல்லிய பக்தி (8 min audio in tamizh, same as the transcript above)
योगीन्द्राणां त्वदङ्गेष्वधिकसुमधुरं मुक्तिभाजां निवासो
भक्तानां कामवर्षद्युतरुकिसलयं नाथ ते पादमूलम् ।
ஸ்வாமிகள் பண்ணின உபகாரத்தில் எது எல்லாருக்கும் நன்னா ஞாபகம் இருக்கும் என்றால், அவர் கிட்ட வந்து ஏதோ ஒரு கஷ்டம்னு சொன்னால், அவர் ஆறுதல் வார்த்தைகள் சொல்லி, ஒரு உபாயம் சொல்வார். அந்த சுலபமான ஒரு பரிகாரத்தை பண்ணினா, அந்த கஷ்டம் தீர்ந்துடும். இதை எல்லாரும் ஞாபகம் வெச்சிருப்பா. உடம்புக்கு ஏதாவது சரி இல்லைனு சொன்னால்





