Categories
Ayodhya Kandam

ராமரின் பித்ரு பக்தி

54. ராமரைக் கண்டவுடன் தசரதர் பேசவும் முடியாமல் அழுது பரிதவிக்கிறார். ராமர் பயந்து கைகேயியிடம் அப்பாவின் கலக்கத்திற்கு காரணம் கேட்கிறார். கைகேயி ‘தசரதர் எனக்கு குடுத்த சத்தியத்தை காப்பாற்ற, நீ அவர் சொல்வது எதுவானாலும் செய்வாயா?’ என்று கேட்கிறாள். ராமர் ‘அப்பா சொன்னால் நான் நெருப்பில் வேண்டுமானாலும் விழுவேன். அப்பா வார்த்தை எதுவானாலும் கேட்பேன். இது சத்தியம். ராமன் வார்த்தை மாறமாட்டான்.’ என்று சொன்னவுடன் கைகேயி தான் கேட்ட இரண்டு வரங்களை சொல்கிறாள். ராமர் வருத்தம் அடையவில்லை. அவர் முகம் இரவில் நிலவு போல் ஒளியுடனே விளங்கியது.
[ராமரின் பித்ரு பக்தி]

Categories
Ayodhya Kandam

ராமர் கைகேயி அரண்மனைக்கு செல்கிறார்

53. ராமர் லக்ஷ்மணனோடு தேரில் கைகேயி அரண்மனைக்கு செல்கிறார். வழியில் பெண்களும் பெரியவர்களும் அவரை வாழ்த்துகிறார்கள். அவர் அரண்மனைக்குள் நுழைந்தபின் ராமசந்திரனின் வருகையை எதிர்பார்த்து ஜனக்கடல் காத்துக் கொண்டிருக்கிறது.
[ராமர் கைகேயி அரண்மனைக்கு செல்கிறார்]

Categories
Ayodhya Kandam

சுமந்திரர் ராமரை அழைக்கிறார்

52. சுமந்திரர், ராமரை அழைத்து வர அவருடைய அரண்மனைக்குச் செல்கிறார். அங்கு சித்ரா நக்ஷத்ரத்துடன் கூடிய சந்திரனைப் போல, தங்கக் கட்டிலில் சர்வாலங்கார பூஷிதராக சீதா தேவியோடு அமர்ந்திருக்கும் ராமரைக் கண்டு வணங்குகிறார். தசரதர் அழைப்பதாக சொன்னவுடன், ராமர் சீதையிடம் விடைப் பெற்று கைகேயி அரண்மனைக்கு புறப்படுகிறார். சீதை ஆரத்தி எடுத்து வழியனுப்புகிறாள்.
[சுமந்திரர் ராமரை அழைக்கிறார்]

Categories
Ayodhya Kandam

சுமந்திரர் தசரதரை எழுப்புகிறார்

Categories
Ayodhya Kandam

கைகேயி பிடிவாதம்

50. தசரதர் மேலும் ராமனின் குணங்களை நினைத்து ‘நன்றாக வாழவேண்டிய வேளையில் காட்டில் என் குழந்தை கஷ்டப் படுவதா? உனக்கு பெரிய அபவாதமும் எனக்கு கேட்ட பெயரும் தான் மிஞ்சும். பரதன் இதை ஒரு நாளும் ஏற்க மாட்டான். உன் காலில் விழுகிறேன். தயவு செய்’ என்று கெஞ்சுகிறார். கைகேயி தன் பிடிவாதத்தை விடாமல் ‘கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றும்’ என்று கடுமையாகச் சொல்கிறாள்.
[கைகேயி பிடிவாதம்]

Categories
Ayodhya Kandam

தசரதர் புலம்பல்

49. கைகேயி ‘ராமனைக் பதினான்கு வருடங்கள் காட்டிற்கு அனுப்பவேண்டும்’ என்று வரம் கேட்டதும் தசரதர் மயங்கி விழுந்து விடுகிறார். பின்னர் தெளிந்து ‘ஒரு குற்றமும் அறியாத ராமனை எப்படி காட்டிற்கு அனுப்புவேன்? ஐயோ! இவ்வளவு கொடியவளான உன்னிடம் அன்பு வைத்தேனே! ராமன் என் வார்த்தையை மறுத்து பேசவும் மாட்டானே! அவனை பிரிந்து நான் எப்படி உயிர் வாழ்வேன்?’ என்று பலவாறு புலம்புகிறார்.
[தசரதர் புலம்பல்]

Categories
Ayodhya Kandam

தசரதர் மகத்துவம்

48. தசரதருக்கு விஷ்ணு பகவானே பிள்ளையாக ராமனாக பிறந்து, கைகேயி மேல் அவர் வைத்திருந்த மோகத்திலிருந்து மீட்டு, அவரை ஆட்கொண்டார். அது போல பட்டினத்தாரை, பரமேஸ்வரனே பிள்ளையாக வந்து பணத்தசையிலிருந்து மீட்டு அவரை ஆட்கொண்டார்.
[தசரதர் மகத்துவம் 11 min audio about the greatness of Dasaratha Maharaja]

Categories
Ayodhya Kandam

கைகேயி கேட்ட இரண்டு வரங்கள்

47. தசரதர் கைகேயியின் அரண்மனைக்கு நல்ல செய்தியைச் சொல்ல வருகிறார். கைகேயி கோபத்தோடு இருப்பதை பார்த்து அவளை சமாதானம் செய்ய, ‘ராமன் பேரில் ஆணையாக நீ எது கேட்டாலும் தருகிறேன்’ என்று வாக்களிக்கிறார். கைகேயி, தேவாசுர யுத்தத்தில் அவர் உயிரைக் காப்பாற்றிய போது, தனக்கு அவர் அளித்த இரண்டு வரங்களை நினைவூட்டி, ஒரு வரத்திற்கு ‘ராமனுக்கு பதிலாக பரதனுக்கு பட்டம் சூட்ட வேண்டும். இரண்டாவது வரத்திற்கு ராமன் பதினான்கு வருடங்கள் காட்டிற்கு போக வேண்டும்’ என்று கேட்கிறாள்.
[கைகேயி கேட்ட இரண்டு வரங்கள்]

Categories
Ayodhya Kandam

கூனி சொன்ன யோசனை

46. கூனி ‘ராமன் ராஜாவானால் நீ கௌசல்யைக்கு வேலைக்காரியாக தான் இருக்க வேண்டும். பரதனை ராமன் மேலுலகம் அனுப்பிவிடுவான்’ என்று பலது கூறி கைகேயியின் மனத்தில் பொறாமையை வளர்கிறாள். கைகேயி மனம் மாறி, பரதனை அரசனாக்க உபாயம் கேட்கிறாள். முன்பு தசரதர் உயிரைக் காப்பாற்றிய போது அவர் தந்த இரண்டு வரங்களைக் கொண்டு பரதனை அரசனாக்கி ராமனை காட்டுக்கு அனுப்பும்படி கூனி யோசனை கூறுகிறாள்.
[கூனி சொன்ன யோசனை]

Categories
Ayodhya Kandam

கூனி வருகை

45. மந்தரை என்ற கைகேயியின் பணிப்பெண் ஒருத்தி, ராமருக்கு பட்டாபிஷேகம் என்று கேட்டவுடன் பொறாமை அடைகிறாள். கைகேயியிடம் வந்து செய்தியை தெரிவித்து ‘இதனால் உனக்கும் பரதனுக்கும் ஆபத்து’ என்கிறாள். கைகேயி அதை காதில் வாங்காமல் ‘ஆஹா! என் ராமனுக்கு பட்டபிஷேகமா’ என்று மிக மகிழ்ந்து கூனிக்கு முத்து மாலை ஒன்றை பரிசளிக்கிறாள்.
[கூனி வருகை]