Categories
Ayodhya Kandam

லக்ஷ்மணரும் அனுமதி பெற்றார்

64.சீதையோடு ராமர் வனம் போக முடிவு செய்துவிட்டதைப் பார்த்து லக்ஷ்மணர் தன்னையும் அழைத்துச் செல்ல வேண்டுகிறார். ராமர் அவரிடம் ‘நீ இங்கிருந்து என் அம்மாவையும் உன் அம்மாவையும் பார்த்துக் கொள்’ என்று சொல்கிறார். லக்ஷ்மணர்’பரதன் அவர்களைப் பார்த்துக் கொள்வான். நான் வனவாசத்தில் இரவும் பகலும் உங்களுக்கு உதவி செய்வேன். என்னை அழைத்துச் செல்லுங்கள்’ என்று வேண்டுகிறார். அந்த வார்த்தைகளைக் கேட்டு ராமர் மகிழ்ந்து லக்ஷ்மணர் தன்னுடன் வர அனுமதி அளிக்கிறார். பிறகுலக்ஷ்மணர், ராமர் உத்தரவின்படி ஆச்சார்யரின் வீட்டிலிருந்து ஆயுதங்களை எடுத்து வருகிறார். 
[லக்ஷ்மணரும் அனுமதி பெற்றார்]

Categories
Ayodhya Kandam

அம்மா அப்பா குரு மகிமை

63.ராமர் அனுமதி தரத் தயங்கவே, சீதை ‘உங்களோடு இருப்பதே எனக்கு சொர்க்கம். நீங்கள் இல்லாத இடம் எனக்கு நரகம். நீங்கள் என்னை இங்கே விட்டுச் சென்றால் நான் உயிரை விட்டு விடுவேன். என்னை அழைத்துச் செல்லுங்கள்’ என்று வேண்டுகிறாள். ராமர் ‘அம்மா அப்பா குரு மூவரும் கண்கண்ட தெய்வம். அப்பா குடுத்த வாக்கை காப்பற்ற நான் வனம் செல்கிறேன். அந்த தர்மத்தில் துணையாக நீயும் என்னோடு வா’ என்று அனுமதி அளிக்கிறார்.
[அம்மா அப்பா குரு மகிமை]

Categories
Ayodhya Kandam

சீதாதேவியின் வேண்டுகோள்

62.சீதை ராமரிடம் ‘உங்களை காட்டிற்கு போகச் சொன்னால் அது என்னையும் சொன்னது போல தான். உங்கள் கஷ்ட நஷ்டத்தில் எனக்கும் பங்கு உண்டு. என்னையும் காட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று வேண்டுகிறாள். ராமர் ‘வனம் என்பது ஆபத்தான இடம். வனவாசம் மிகவும் கஷ்டமானது’ என்று கூறும் போது சீதை, ‘உங்களோடு இருந்தால் எனக்கு எதுவும் கஷ்டமில்லை. எனக்கு உங்கள் அன்பு ஒன்றே போதும்’ என்று கூறுகிறாள்.
[சீதாதேவியின் வேண்டுகோள்]

Categories
Ayodhya Kandam

ராமர் சீதைக்கு சொன்ன அறிவுரை

61. ராமர் சீதையின் பிரிவுத் துன்பத்தை நினைத்து வருத்தத்துடன் வரும்போது சீதை, ‘ஏன் உங்கள் முகத்தில் என்றும் இல்லாத வாட்டம்?’ என்று கேட்கிறாள். ராமர் ‘மதிப்பிற்குரிய தந்தையார் என்னை வனவாசம் போகும்படி ஆணை இட்டுள்ளார். நீ என் பெற்றோரை தினமும் வணங்கி, அவர்களுக்கு பணிவிடை செய்து, பரத சத்ருகனர்களிடம் அன்பு பாராட்டி, விரதங்களை கடைபிடித்து எளிமையாக வாழ்ந்து வா’ என்று அறிவுரை கூறுகிறார்.
[ராமர் சீதைக்கு சொன்ன அறிவுரை]

Categories
Ayodhya Kandam

ராமரின் வனவாசத்திற்கு ஒப்புதல்

55. ராமர் கைகேயி சொன்ன வரங்களைக் கேட்டு ‘அவ்வாறே செய்கிறேன். என் தந்தையும், வயதில் மூத்தவரும், ராஜாவுமான தசரதர் குடுத்த வரத்திற்காக நான் ஜடை பூண்டு மரவுரி உடுத்தி காடு செல்கிறேன்’ என்று வாக்களிக்கிறார். ‘இன்றே நீ கிளம்பு’ என்று கைகேயி அவசரப்படுத்த ‘நான் ரிஷிகளைப் போல தர்மத்தில் உறுதி கொண்டவன். பணத்தில் பேராசை கொண்டவன் அல்ல’ என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி கௌசல்யா தேவியின் அரண்மனைக்கு செல்கிறார்.
[ராமரின் வனவாசத்திற்கு ஒப்புதல்]

Categories
Ayodhya Kandam

ராமரின் பித்ரு பக்தி

54. ராமரைக் கண்டவுடன் தசரதர் பேசவும் முடியாமல் அழுது பரிதவிக்கிறார். ராமர் பயந்து கைகேயியிடம் அப்பாவின் கலக்கத்திற்கு காரணம் கேட்கிறார். கைகேயி ‘தசரதர் எனக்கு குடுத்த சத்தியத்தை காப்பாற்ற, நீ அவர் சொல்வது எதுவானாலும் செய்வாயா?’ என்று கேட்கிறாள். ராமர் ‘அப்பா சொன்னால் நான் நெருப்பில் வேண்டுமானாலும் விழுவேன். அப்பா வார்த்தை எதுவானாலும் கேட்பேன். இது சத்தியம். ராமன் வார்த்தை மாறமாட்டான்.’ என்று சொன்னவுடன் கைகேயி தான் கேட்ட இரண்டு வரங்களை சொல்கிறாள். ராமர் வருத்தம் அடையவில்லை. அவர் முகம் இரவில் நிலவு போல் ஒளியுடனே விளங்கியது.
[ராமரின் பித்ரு பக்தி]

Categories
Ayodhya Kandam

ராமர் கைகேயி அரண்மனைக்கு செல்கிறார்

53. ராமர் லக்ஷ்மணனோடு தேரில் கைகேயி அரண்மனைக்கு செல்கிறார். வழியில் பெண்களும் பெரியவர்களும் அவரை வாழ்த்துகிறார்கள். அவர் அரண்மனைக்குள் நுழைந்தபின் ராமசந்திரனின் வருகையை எதிர்பார்த்து ஜனக்கடல் காத்துக் கொண்டிருக்கிறது.
[ராமர் கைகேயி அரண்மனைக்கு செல்கிறார்]

Categories
Ayodhya Kandam

சுமந்திரர் ராமரை அழைக்கிறார்

52. சுமந்திரர், ராமரை அழைத்து வர அவருடைய அரண்மனைக்குச் செல்கிறார். அங்கு சித்ரா நக்ஷத்ரத்துடன் கூடிய சந்திரனைப் போல, தங்கக் கட்டிலில் சர்வாலங்கார பூஷிதராக சீதா தேவியோடு அமர்ந்திருக்கும் ராமரைக் கண்டு வணங்குகிறார். தசரதர் அழைப்பதாக சொன்னவுடன், ராமர் சீதையிடம் விடைப் பெற்று கைகேயி அரண்மனைக்கு புறப்படுகிறார். சீதை ஆரத்தி எடுத்து வழியனுப்புகிறாள்.
[சுமந்திரர் ராமரை அழைக்கிறார்]

Categories
Ayodhya Kandam

சுமந்திரர் தசரதரை எழுப்புகிறார்

Categories
Ayodhya Kandam

கைகேயி பிடிவாதம்

50. தசரதர் மேலும் ராமனின் குணங்களை நினைத்து ‘நன்றாக வாழவேண்டிய வேளையில் காட்டில் என் குழந்தை கஷ்டப் படுவதா? உனக்கு பெரிய அபவாதமும் எனக்கு கேட்ட பெயரும் தான் மிஞ்சும். பரதன் இதை ஒரு நாளும் ஏற்க மாட்டான். உன் காலில் விழுகிறேன். தயவு செய்’ என்று கெஞ்சுகிறார். கைகேயி தன் பிடிவாதத்தை விடாமல் ‘கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றும்’ என்று கடுமையாகச் சொல்கிறாள்.
[கைகேயி பிடிவாதம்]