Categories
Aranya Kandam

ரிஷிகளோடு பத்து வருடங்கள்

rama sita lakshmana
123. ராமர் சீதையோடும் லக்ஷ்மணனோடும் பத்து வருடங்கள் தண்டக வனத்தில் பல முனிவர்களின் ஆஸ்ரமங்களில் இனிதே கழிக்கிறார். ஓரிடம் போகும் வழியில் ஒரு ஏரியின் உள்ளிருந்து இனிமையான சங்கீதமும் நாட்டிய சப்தமும் கேட்கிறது. ராமர் அருகிலிருந்த தர்மப்ருத் என்ற முனிவரிடம் என்ன இந்த ஆச்சர்யம் என்று கேட்கிறார். தர்மப்ருத் “மாண்டகர்னி என்ற முனிவர் தவத்தை கலைக்க இந்திரன் ஐந்து அப்சரஸ் ஸ்திரீகளை அனுப்பினான். அந்த முனிவர் தன் தவத்தால் இளமையை வரவழைத்துக் கொண்டு இந்த ஏரியின் உள்ளே ஒரு மாளிகை அமைத்து அங்கு அவர்களோடு சுகித்து வருகிறார்’ என்று சொல்கிறார்.

Categories
Aranya Kandam

ஸீதா ராம ஸம்பாஷணை

sita rama

Categories
Aranya Kandam

சுதீக்ஷ்ணர் ஆஸ்ரமத்தில் ராமர்

Yagnavalkya

Categories
Aranya Kandam

முனிவர்களுக்கு அபயம்

sage-sutikshana-rama-ramayan-desibantu

120. ராமர், சரபங்கர் ஆஸ்ரமத்திலிருந்து கிளம்புகிறார். தண்டக வனத்து முனிவர்கள் ராமரிடம் வந்து ராக்ஷசர்களால் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைக் கூறி தங்களை காப்பாற்றுமாறு வேண்டுகிறார்கள். ரிஷிகள் காமத்தையும் கோபத்தையும் தவத்தினால் கடந்து செல்ல முயன்று வருவதால், சாபம் கொடுக்க விரும்பாமல் க்ஷத்ரியரான ராமரிடம் முறையிடுகிறார்கள்.  ராமர் அவர்கள் பிரார்த்தனையை ஆணையாக ஏற்று, அவர்களுக்கு அரக்கர்களிடமிருந்து அபயம் அளிக்கிறார். பின்னர் ராமர் சுதீக்ஷ்ணர் என்ற முனிவரை சென்று வணங்குகிறார். சுதீக்ஷ்ணர் அவர்களை வரவேற்று உபசரிக்கிறார்.
[தண்டகவனத்து முனிவர்களுக்கு அபயம்]

[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/120-munivarkalukku-abhayam.mp3]
Categories
Aranya Kandam

சரபங்கர் தர்சனம்

images~02

Categories
Aranya Kandam

விராத வதம்

viradha vadham

Categories
Aranya Kandam

ராமர் தண்டக வனம் புகுந்தார்

rishis
117. ராமரும் லக்ஷ்மணரும் சீதாதேவியும் தண்டக வனத்தில் மேலும் உள்ளே சென்று ரம்யமான முனிவர்களின் ஆஸ்ரமங்களை கண்டார்கள். முனிவர்கள் ஞான த்ருஷ்டியால் விஷ்ணு பகவானும் லக்ஷ்மி தேவியுமே இந்த உருவில் வந்திருப்பதை அறிந்து, அவர்களை அன்புடன் வரவேற்று பூஜை செய்தார்கள்.
[ராமர் தண்டகவனம் புகுந்தார்]

Categories
Ayodhya Kandam

சீதா தேவியும் அனசூயா தேவியும்

Sita-Devi-and-Sati-Anusuya
116. சீதை அனசூயா தேவியை வணங்கி அவர் அளித்த தெய்வீகமான அலங்கார பொருட்களை அன்புப் பரிசாக பெற்றுக் கொள்கிறாள். பிறகு அனசூயா தேவி கேட்டவுடன் தன் சுயம்வரம் மூலம் ராமரை அடைந்த விவரங்களை இனிமையாக சொல்கிறாள். மறுநாள் அவர்கள் ரிஷிகளை வணங்கிவிட்டு மேலும் காட்டிற்குள் செல்கிறார்கள்.
[சீதா தேவியும் அனசூயா தேவியும்]

[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/116%20sita%20anasuya.mp3]
Categories
Ayodhya Kandam

பாதுகா பட்டாபிஷேகம்

bharata114. பரதன் ராமருடைய பாதுகைகளை தலையில் வைத்துக் கொண்டு ரதத்தில் ஏறி, வழியில் பரத்வாஜ முனிவரை வணங்கி விவரங்களை சொல்லிவிட்டு, அயோத்தி திரும்புகிறான். ராமர் இல்லாத அயோத்தியில் இருக்க விரும்பாமல் அருகில் நந்திக்ராமம் என்ற இடத்திற்கு வந்து, ராமருடைய பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து பட்டாபிஷேகம் செய்கிறான். ராமரே தன் அருகில் இருப்பதாக நினைத்து அந்த பாதுகைகளின் துணையோடு ஆட்சி செய்கிறான். ஆனால் எந்த ராஜ போகத்தையும் ஏற்காமல் காட்டில் ராமர் இருப்பது போல தானும் மரவுரி, ஜடை அணிந்து தபஸ்வியாக வாழ்கிறான்.
[பாதுகா பட்டாபிஷேகம்]

[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/114%20Paduka%20pattabhishekam.mp3]
Categories
Ayodhya Kandam

பரதன் சரணாகதி

sandal2113. பரதனும் ராமரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மகரிஷிகள் அங்கு தோன்றி பரதனிடம், ராமருடைய பேச்சைக் ஏற்கும்படி கூறுகிறார்கள். பரதன் ராமரிடம் சரணாகதி செய்கிறான். ராமர் அதை ஏற்றுக்கொண்டு, வசிஷ்டர் சொன்னபடி தன் பாதுகைகளை பரதனுக்கு அளிக்கிறார். பரதன் அவற்றை தலையில் ஏற்கிறான். ‘பதினைந்தாவது வருடம் முதல் நாள் நீங்கள் அயோத்தி திரும்பாவிட்டால் நான் நெருப்பில் விழுந்து விடுவேன்’ என்று கூறுகிறான். ராமர் ‘நான் அப்படியே வந்துவிடுகிறேன். நீ கைகேயி அம்மாவை கடிந்து ஏதும் பேசக் கூடாது. இது என் மேலும் சீதை மேலும் ஆணை’ என்று கூறுகிறார்.
[பரதன் ராம பாதுகைகளைப் பெற்றான்]

[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/113%20Bharathan%20Sharanagathi.mp3]