நேற்றைய கதையில் ஆதி சங்கரர் காசி வாசத்துல, சண்டாளனாக வந்த விஸ்வநாத ஸ்வாமியை தர்சனம் பண்ணினது, காலபைரவாஷ்டகம் பண்ணினது, தன்னுடைய பக்தி கிரந்தகளிலேயே ஞானத்தை கலந்து கொடுத்து இருக்கார், அப்படீங்கிற விஷயம் பேசினேன்.
நேற்றைய கதையில் ஆதி சங்கர பகவத் பாதாளுக்கு முன்னாடி அந்த அத்வைத பரம்பரையில் மஹாவிஷ்ணு, ப்ரம்மா, வசிஷ்டர், சக்தி, பராசரர், வ்யாஸர், சுகர், கௌட பாதர், கோவிந்த பகவத் பாதர், அவரோட சிஷ்யரா சங்கர பகவத் பாதாள் இந்த பரம்பரை, அதுல இருந்த மஹான்களுடைய பெருமையெல்லாம் பார்த்தோம். இந்த கோவிந்த நாமத்துல ஆதி சங்கரருக்கு இருக்கக் கூடிய ப்ரியத்துனால பஜகோவிந்தம், பஜகோவிந்தம் னு பாடினார், அப்படீன்னு சொன்னேன்.
நேற்றைய கதையில், ஆதி சங்கர பகவத் பாதாள் தன்னுடைய குரு கோவிந்த பகவத் பாதாள் கிட்ட ஸந்யாஸ தீக்ஷை வாங்கிண்டு, அவர் உத்தரவு படி காசியிலே போயி, அத்வைத தத்துவத்தை ஜனங்களுக்கு பாஷ்யங்கள் மூலமாகவும், தன்னுடைய ப்ரவசனங்கள் மூலமாகவும், 56 தேசத்திலேருந்து வந்த பண்டிதர்களெல்லாம் சொல்லி, அதன் மூலமா வேத மதத்துக்கே ஒரு புத்துயிர் கொடுத்தார், அப்படீங்கிறதை சொல்லிண்டு இருந்தேன்.
நேற்றைய தினம், ஆதி சங்கர பகவத் பாதாள் பூமியில பிறந்தது, காலடியில சிவகுரு, ஆர்யாம்பாங்கிற தம்பதிக்கு, குழந்தையாக தக்ஷிணாமூர்த்தியே பூமியில அவதாரம் பண்ணியிருந்தார், ரொம்ப மேதாவியா இருந்ததுனால அவருக்கு, அஞ்சு வயசுலயே பூணல் போட்டுட்டா, அப்படீன்னு சொன்னேன். இந்த வசந்த ருதுல பகவத் பாதாளோட அவதாரம். விவேக சூடாமணியில ஒரு ஸ்லோகம் இருக்கு.
शान्ता महान्तो निवसन्ति सन्तो वसन्तवल् लोकहितं चरन्तः |
நேற்றைக்கு, தேவர்கள் தக்ஷிணாமூர்த்தி கிட்ட “பூமியில் கலியினுடைய ஆட்டோபம் ஜாஸ்தி ஆகிவிட்டது. 72 துர்மதங்கள் வந்துடுத்து. நீங்கள் அவதாரம் பண்ணி, ஜனகளுக்கு நல்ல புத்தி குடுக்கணும்” அப்படின்னு பிரார்த்தனை பண்ணிண்டா. அதே நேரத்தில் இங்கே காலடி என்கிற க்ஷேத்ரத்தில் சிவகுரு ஆர்யாம்பா என்ற தம்பதி குழந்தை வரம் வேண்டி திருச்சூர் வடக்குன்நாத க்ஷேத்ரத்துல பஜனம் பண்ணிண்டு இருந்தா. பகவான் அவாளுக்கு கனவுல வந்து அனுக்ரகம் பண்ணினார், என்கிறதெல்லாம் சொல்லிண்டு இருந்தேன்.
शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् । प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ||
ஶூக்லாம்ப3ரத4ரம் விஷ்ணும் ஸஸி வர்ணம் சதுர்பு4ஜம்|
ப்ரஸன்ன வத3நம் த்4யாயேத் ஸர்வ விக்4நோப சாந்தயே|| 1
वागीशाद्या सुमनसः सर्वार्थानामुपक्रमे |
यं नत्वा कृतकृत्यास्यु: तं नमामि गजाननम् ||
வாகீ3ஶாத்3யா: ஸுமநஸ: ஸர்வார்தா2நாமுபக்ரமே|
யம் நத்வா க்ருதக்ருத்யா: ஸ்யு: தம் நமாமி க3ஜாநநம்||