Categories
Ayodhya Kandam

பரத்வாஜர் தர்சனம்


82. கங்கையும் யமுனையும் சேரும் பிரயாகை என்ற இடத்தில் தவஸ்ரேஷ்டரான பரத்வாஜ முனிவரை ராமர் தரிசிக்கிறார். பரத்வாஜர் அவர்களை வரவேற்று உபசரித்து, அன்றிரவு புண்ய கதைகளை பேசியபடி கழிக்கிறார்கள். மறுநாள் காலை, முனிவர், ‘உங்கள் வனவாசத்தை ரம்யமான சித்ரகூட மலை அடிவாரத்தில் மந்தாகினி நதி தீரத்தில் கழிக்கலாம்’ என்று சொல்லி அங்கு செல்லும் வழியைக் கூறுகிறார். ராமரும் லக்ஷ்மணரும் சீதையும் அவர் சொன்ன வழியில் சென்று யமுனை நதியைக் கடந்து ஒரு பெரிய ஆலமரத்தை வணங்கி பின் மந்தாகினி தீரத்தை அடைந்தார்கள்.
[பரத்வாஜர் தர்சனம்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/82%20bharadwajar%20darshanam.mp3]

Categories
Ayodhya Kandam

சுமந்திரர் தசரதரை எழுப்புகிறார்

Categories
Ayodhya Kandam

கைகேயி பிடிவாதம்

50. தசரதர் மேலும் ராமனின் குணங்களை நினைத்து ‘நன்றாக வாழவேண்டிய வேளையில் காட்டில் என் குழந்தை கஷ்டப் படுவதா? உனக்கு பெரிய அபவாதமும் எனக்கு கேட்ட பெயரும் தான் மிஞ்சும். பரதன் இதை ஒரு நாளும் ஏற்க மாட்டான். உன் காலில் விழுகிறேன். தயவு செய்’ என்று கெஞ்சுகிறார். கைகேயி தன் பிடிவாதத்தை விடாமல் ‘கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றும்’ என்று கடுமையாகச் சொல்கிறாள்.
[கைகேயி பிடிவாதம்]

Categories
Ayodhya Kandam

தசரதர் புலம்பல்

49. கைகேயி ‘ராமனைக் பதினான்கு வருடங்கள் காட்டிற்கு அனுப்பவேண்டும்’ என்று வரம் கேட்டதும் தசரதர் மயங்கி விழுந்து விடுகிறார். பின்னர் தெளிந்து ‘ஒரு குற்றமும் அறியாத ராமனை எப்படி காட்டிற்கு அனுப்புவேன்? ஐயோ! இவ்வளவு கொடியவளான உன்னிடம் அன்பு வைத்தேனே! ராமன் என் வார்த்தையை மறுத்து பேசவும் மாட்டானே! அவனை பிரிந்து நான் எப்படி உயிர் வாழ்வேன்?’ என்று பலவாறு புலம்புகிறார்.
[தசரதர் புலம்பல்]

Categories
Ayodhya Kandam

தசரதர் மகத்துவம்

48. தசரதருக்கு விஷ்ணு பகவானே பிள்ளையாக ராமனாக பிறந்து, கைகேயி மேல் அவர் வைத்திருந்த மோகத்திலிருந்து மீட்டு, அவரை ஆட்கொண்டார். அது போல பட்டினத்தாரை, பரமேஸ்வரனே பிள்ளையாக வந்து பணத்தசையிலிருந்து மீட்டு அவரை ஆட்கொண்டார்.
[தசரதர் மகத்துவம் 11 min audio about the greatness of Dasaratha Maharaja]

Categories
Bala Kandam

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி


32. ரம்பை தன் தவத்தை கலைக்க வந்தவுடன், விச்வாமித்ரர் கோபத்தால் அவளை சபிக்கிறார். பின்னர் மனம் வருந்தி தன் மூச்சையும் பேச்சையும் அடக்கி, ஆயிரம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே உணவு உண்டு தவம் செய்கிறார். பிரம்மா தேவர்களுடன் வந்து அவருக்கு பிரம்மரிஷி என்ற நிலையை அருளுகிறார். விஸ்வாமித்ரர், வசிஷ்ட பகவான் தன்னை பிரம்மரிஷி என்று ஆசீர்வதிக்க வேண்டும் என்று வேண்ட, வசிஷ்டரும் அங்கு வந்து அவ்வாறே அனுக்ரஹம் செய்கிறார். [வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி]

Categories
Bala Kandam

சுனஸ்சேபன் உயிர் பிழைத்தான்


31. சுனச்சேபன் என்ற ரிஷிகுமாரனை அவன் பெற்றோர்கள் ஒரு யாகத்தில் பலியிட விற்று விடுகிறார்கள். அவன் விஸ்வாமித்ரரை வந்து சரணடைந்த போது, அவர் அவனுக்கு இரண்டு ஸ்துதிகளை சொல்லிக் கொடுத்து அதன் மூலம் அவன் உயிரைக் காப்பாற்றுகிறார். தவத்தால் ரிஷி என்ற நிலையை அடைகிறார். சிறிது காலம் மேனகையிடம் மயங்குகிறார். பிறகு தெளிந்து தவம் செய்து மகரிஷி என்ற நிலையை அடைகிறார். [சுனஸ்சேபன் உயிர் பிழைத்தான்]

Categories
Bala Kandam

விஸ்வாமித்ரர் திரிசங்குவை சொர்க்கம் அனுப்புதல்


30. விஸ்வாமித்ரர் தெற்கு திக்கில் சென்று தவம் செய்து ராஜரிஷி ஆகிறார். தன்னை வந்து சரணடைந்த திரிசங்கு மகாராஜாவை பூத உடலோடு சொர்க்கம் அனுப்ப ஒரு யாகம் செய்கிறார். தேவர்கள் அந்த யாகத்தை ஏற்காததால், விஸ்வாமித்ரர் தன் தபோ பலத்தால் திரிசங்குவிற்காக ஒரு புதிய சொர்கத்தையே ஸ்ருஷ்டி செய்கிறார். [விஸ்வாமித்ரர் திரிசங்குவை சொர்க்கம் அனுப்புதல்]

Categories
Bala Kandam

பிரம்ம தேஜசின் பலமே எல்லாவற்றிலும் மேலானது


29. விஸ்வாமித்ரர் காமதேனுவை பலவந்தமாக இழுத்துச் செல்ல முயன்றபோது, அப்பசு வசிஷ்டரின் அனுமதியோடு ஒரு படையை ஸ்ருஷ்டி செய்து விஸ்வமித்ரரின் பெரும் படையை அழித்து விடுகிறது. விஸ்வாமித்ரர் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து அஸ்திர வித்தைகள் அனைத்தையும் அறிந்து கொண்டு மீண்டும் வந்து வசிஷ்டரை எதிர்க்கிறார். வசிஷ்டர் தன் பிரம்ம தண்டத்தால் எல்லா அஸ்திரங்களையும் அடக்கி விட, விஸ்வாமித்ரர் கர்வம் ஒழிந்து, ‘க்ஷத்ரியனின் அஸ்திர பலம் கீழானது. முனிவரின் தபோ பலமே உயர்ந்தது. நானும் தவம் செய்து பிரம்மரிஷி ஆவேன்’ என்று தீர்மானிக்கிறார். [பிரம்ம தேஜசின் பலமே எல்லாவற்றிலும் மேலானது]

Categories
Bala Kandam

விஸ்வாமித்ரர் வசிஷ்டரை தரிசித்தார்


28. விஸ்வாமித்ரர் அரசராக இருந்தபோது, தன் பெரிய படையுடன் உலகைச் சுற்றி வருகிறார். அப்போது அவர் வசிஷ்ட முனிவரின் ஆச்ரமத்தைப் பார்க்கிறார். முனிவரை தரிசித்து வணங்குகிறார். வசிஷ்டர், அரசரை வரவேற்று தன்னிடமிருந்த சபலா என்ற காமதேனு பசுவின் உதவியினால், அரசருக்கும் அவர் படையில் இருந்த அனைவருக்கும் ஒரு அற்புதமான விருந்தளிக்கிறார். விருந்து உண்ட பின் விஸ்வாமித்ரர் வசிஷ்டரிடம் அந்த பசுவை தனக்கு தந்து விடுமாறு கூற வசிஷ்டர் தரமுடியாது என்று மறுக்கிறார். [விஸ்வாமித்ரர் வசிஷ்டரை தரிசித்தார்]]