ஆத்மா த்வம் கிரிஜா மதி: (11 min audio in Tamizh, same as the transcript above) आत्मा त्वं गिरिजा मतिः सहचराः प्राणाः शरीरं गृहं पूजा ते विषयोपभोगरचना निद्रा समाधिस्थितिः । सञ्चारः पदयोः प्रदक्षिणविधिः स्तोत्राणि सर्वा गिरो यद्यत्कर्म करोमि तत्तदखिलं शम्भो तवाराधनम् ॥ “ஆத்மா த்வம் கிரிஜா மதி: சஹசரா: ப்ராணா: சரீரம் க்ருஹம் பூஜா தே விஷயோப போக ரசனா: நித்ரா சமாதி ஸ்திதி: | ஸஞ்சார: பதயோ: பிரதக்ஷிண விதி: ஸ்தோத்ராணி சர்வா கிரா: யத்யத் கர்ம கரோமி தத் தத் அகிலம் சம்போ தவாராதனம் || ஆதி சங்கர பகவத்பாதாள் சிவமானஸ பூஜா ஸ்தோத்ரம் அப்படினு ஒரு ஸ்தோத்ரம் செய்திருக்கார். அதில் வருகிற ஒரு ஸ்லோகம் இது. இதனுடைய அர்த்தம் என்னவென்றால்… “எனக்குள் உறையும் ஆத்மா நீதான். என்னுடைய புத்தி தான் அம்பாள். என் உடலில் இருக்கக் கூடிய […]
Category: Govinda Damodara Swamigal
ராகா சந்திர சமான காந்தி வதனா (14 min audio in tamizh, same as the transcript below) மூக பஞ்சசதியில், ஸ்துதி சதகத்தில் ஒரு ஸ்லோகம். அனேகமாக எல்லாரும் அறிந்த சுலோகம், உபன்யாசகர்கள் அதிகமாக சொல்வார்கள், சந்கீத வித்வான்கள் கூட இதை அதிகமாக பாடுவதுண்டு. राकाचन्द्रसमानकान्तिवदना नाकाधिराजस्तुता मूकानामपि कुर्वती सुरधनीनीकाशवाग्वैभवम् । श्रीकाञ्चीनगरीविहाररसिका शोकापहन्त्री सतां एका पुण्यपरम्परा पशुपतेराकारिणी राजते ॥ ராகா சந்திர ஸமான காந்தி வதனா நாகாதி ராஜஸ்துதா […]
शिवे पाशायेतामलघुनि तमःकूपकुहरे दिनाधीशायेतां मम हृदयपाथोजविपिने । नभोमासायेतां सरसकवितारीतिसरिति त्वदीयौ कामाक्षि प्रसृतकिरणौ देवि चरणौ ॥ சிவே பாசாயேதாம் அலகுநி தம:கூப குஹரே தினாதீசாயேதாம் மம ஹிருதய பாதோஜ விபிநே | நபோமாஸாயேதாம் ஸரஸகவிதா ரீதி ஸரிதி த்வதீயௌ காமாக்ஷி ப்ரஸ்ருத கிரணௌ தேவி சரணௌ || இது மூக பஞ்சசதியில் பாதாரவிந்த சதகத்தில் பத்தொன்பதாவது சுலோகம். இதன் பொருள் – “சிவே” பரம மங்கள வடிவமான காமாக்ஷி தேவியே! “தம கூப […]
காஞ்சி காமாக்ஷி தேவி மேல் மூக பஞ்சசதின்னு ஒரு ஸ்தோத்ரம் இருக்கு. ஐநூறு சுலோகங்கள் கொண்டது. அதில் ஆர்யா சதகம், பாதாரவிந்த சதகம், ஸ்துதி சதகம், கடாக்ஷ சதகம், மந்தஸ்மித சதகம் ஐந்து சதகங்கள். இந்த ஸ்தோத்ரம் மகான்களுக்கு ரொம்ப பிடிச்சதா இருந்திருக்கு. ச்ருங்கேரி ஸ்ரீ சந்திரசேகர பாரதீ ஸ்வாமிகள், சேஷாத்ரி ஸ்வாமிகள், மஹாபெரியவா, நம்ம கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், இப்படி எல்லாரும் இதை விரும்பி பாராயணம் செய்து ரொம்ப அனுபவிச்சு இருக்கா. இந்த ஐநூறு ஸ்லோகமும் […]
ஸ்வாமிகள் எப்போதும் ராமாயண, பாகவத, பாராயணம், பிரவசனம் செய்து கொண்டிருப்பார். அதனால் அவருடைய ராம பக்தி, கிருஷ்ண பக்தி எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் பரம சாம்பவரும் கூட. அதை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். (விஷ்ணு பக்தர்களை வைஷ்ணவர்கள் என்று சொல்வார்கள். அது போல சிவ பக்தர்களை சாம்பவர்கள் என்று சொல்வார்கள்) எப்பவும் நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டிருப்பார். இதைப் பேச ஆரம்பிக்கும் போதே, ஸ்வாமிகள் அதிஷ்டானத்திலேயே லிங்கப் பிரதிஷ்டை செய்திருப்பது ஞாபகம் வருகிறது. அதைச் சொல்லும் […]
கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ராமாயண பாகவதத்துக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணம் பண்ணினார். எப்போதும் ராமாயண பாகவதம் படிக்கறது, ப்ரவசனம் பண்றது அப்படின்னு இருந்தார். அதுக்கு நடுவுல நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவர் ஆச்சார்யாளோட ஸ்லோகங்கள் எல்லாம் விரும்பி படிப்பார். மேலும் முகுந்த மாலை, ஆனந்த ஸகாரஸ்தவம், மூகபஞ்ச சதி போன்ற ஸ்தோத்திரங்கள், இந்த பக்தி மார்கத்துல போகறதுக்கு எதெல்லாம் ஹேதுவா இருக்குமோ, அதெல்லாம் விரும்பி பாராயணம் பண்ணுவார். அதே மாதிரி ஸம்ப்ரதாய ஹரி பஜனையில அவருக்கு ரொம்ப […]
இன்னிக்கு மாசி மாதம் பூரட்டாதி நக்ஷத்திரம். (28/2/2017) கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய ஜென்ம நக்ஷத்திரம். இன்னிக்கு இருந்தார்னா அவருக்கு எண்பத்தேழாவது ஜயந்தியா கொண்டாடியிருப்போம். அவர் ஸ்தூல சரீரத்தோட இல்லேனாலும், சூக்ஷ்மமா அவர் இருந்துண்டு பக்தர்களுக்கு, அனுக்ரஹம் பண்ணிண்டு இருக்கார். நம்ம எல்லாரும் அதை உணர்ந்து அனுபவிச்சுண்டு இருக்கோம். ஒவ்வொரு க்ஷேத்ரத்துல பகவானை, ஒவ்வொரு விதமா பஜனம் பண்றது, வழிபாடு பண்றது, அப்டீன்னு இருக்கு. திருப்பதில, உண்டியல்ல பணம் போடறோம். இதரா எல்லாம் முடி இறக்கரா. குருவாயூர்ல, ஸ்ரீமத் […]
கடந்த சில மாதங்களில் ஸ்ரீ மஹாபெரியவா, ஸ்ரீ சிவன் ஸார், ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளைப் பற்றி இந்த வலைதளத்தில் பகிர்ந்த கருத்துகளை தொகுத்து, திருத்தங்கள் செய்து, ஒரு புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, பெரியவர்களுக்கு குடுத்தால் படிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இதைச் செய்துள்ளேன். இணைப்பு இங்கே நாராயண கருணாமய ஶரணம் கரவாணி தாவகௌ சரணௌ Have created a Tamizh book from the past few posts, so that […]
மஹாபெரியவா, வீழிநாதன் மாமா கிட்ட ஒரு தடவை, “நாம சூரியனை நோக்கி போயிண்டு இருந்தா நிழல், நம்மைத் தொடர்ந்து வரும். அந்த மாதிரி சாஸ்த்ரத்துல இருக்கிற ஒரு லக்ஷியத்தை வெச்சுண்டு, நாம அதை நோக்கிப் போயிண்டே இருந்தோம்னா, பணம், புகழ், பதவி எல்லாம், தானா நம்ம பின்னாடி வரும்.” அப்டீன்னு சொல்லியிருக்கா. இதை வந்து வீழிநாதன் மாமா, “நான் பல பிரசங்கங்கள்ல இதைச் சொல்லிடறது. ஒரு வாட்டி, கொல்லா சத்திரத்துல, பெரியவாளும் இருந்தா, வித்வான்களும் இருந்தா. அங்க […]
எங்கள் சத்குருநாதர் ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய ஆராதனை வைபவம் பழுவூர் கிராமத்துல, ரொம்ப ‘அமோகமா’ நடந்தது. அதுல கலந்துக்கிற பாக்கியம் எனக்கு கிடைச்சது. இந்த வைபவம் ‘அமோகமா’ நடந்ததுங்கிற வார்த்தையை ரொம்ப specific ஆ நான் உபயோகப்படுத்தறேன். ஸ்வாமிகள் ஸந்யாசம் வாங்கிக்கணும், அப்டீன்னு ஆசைப்பட்டார். சிவன் சார்கிட்ட உத்தரவு கேட்டார். சிவன் சார், ‘வாங்கிக்க சொல்லுங்கோ, அமோகமா இருப்பார்’, அப்டீன்னு சொன்னார். அந்த வார்த்தையோட பலத்தை இன்னிக்கும் நாங்கள் அதை கண்கூடாகப் பாக்கறோம். இந்த ஒரு […]