ஸங்க்ஷேப ராமாயணம் ஒலிப்பதிவு (Audio of the first 100 slokams of Balakandam in Valmiki Ramayana)

ஸீதா ராம குணக்ராம புன்யாரண்ய விஹாரிணௌ (18 min audio in tamil)
वागर्थाविव संपृक्तौ वागर्थप्रतिपत्तये । जगतः पितरौ वन्दे
पार्वतीपरमेश्वरौ ।।
வாகர்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த-ப்ரதி பத்தயே |
ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ-பரமேச்வரௌ ||
ततश्च द्वादशे मासे चैत्रे नावमिके तिथौ।।1.18.8।।
नक्षत्रेऽदितिदैवत्ये स्वोच्चसंस्थेषु पञ्चसु।
ग्रहेषु कर्कटे लग्ने वाक्पताविन्दुना सह।।1.18.9।।
प्रोद्यमाने जगन्नाथं सर्वलोकनमस्कृतम्।
कौसल्याऽजनयद्रामं सर्वलक्षणसंयुतम्।।1.18.10।।
विष्णोरर्धं महाभागं पुत्रमैक्ष्वाकुवर्धनम्।
कौसल्या शुशुभे तेन पुत्रेणामिततेजसा।।1.18.11।।
ஹனுமத் பிரபாவம்

இன்னிக்கு மூல நக்ஷத்ரம், ஹனுமாருடைய பிரபாவத்தைப் பற்றி பேசுவோம். ஹனுமார், சீதா தேவியை பார்த்து, அவளுக்கு ஆறுதல் சொல்லி, ஸ்ரீ ராமருடைய அங்குலீயகத்தை (மோதிரம்) காண்பித்து, நம்பிக்கை ஏற்படுத்தி, “ஸ்ரீ ராமர் வந்துவிடுவார், தங்களின் கஷ்டம் தீர்ந்தது, தாங்கள் இனிமேல் அழவேண்டாம்” என்று கூறுகிறார். முதலில் பார்த்தவுடன், “ஏனம்மா அழுகிறாய்?” என்று கேட்டார், இப்போ கிளம்பும்போது “இனி நீங்கள் அழவேண்டாம், தங்களின் கஷ்டங்கள் தீர்ந்தது” என்று கூறிவிட்டு, சீதாவிடம் ஏதாவது அடையாளம் தரச் சொல்லி கேட்டு, அவள் சூடாமணி தர, அதனை பெற்றுக் கொண்டு கிளம்புகிறார்.
அது போல, பகவான் ஒருவர் தான், ஏன் அழுகிறாய் என்று கேட்டு, இனிமேல் அழவேண்டாம், உன் கஷ்டம் தீர்ந்தது என்று கூறுவார். அதனால், நம்முடைய கஷ்டத்தினை பகவான் ஒருவரிடம் தான் கூற வேண்டும், வருவோர்கள் போவோர்கர்ளிடம் கூறினால், ஒரு சிலர் சந்தோஷமும் படுவார்கள், பலர் அதனை பொருட்படுத்த மாட்டார்கள். அவாளால என்ன செய்ய முடியும், உலத்தில் உழலும் மனிதர்களினால் நம்முடைய கஷ்டத்தினை போக்க முடியாது. போக்கு கூடிய பகவானிடம்தான் நாம் கூறவேண்டும், என்று ஸ்வாமிகள் சொல்வார்.

अर्थसिद्ध्यै हरिश्रेष्ठ गच्छ सौम्य यथासुखम्। समानयस्व वैदेहीं राघवेण महात्मना।।
அர்த்தசித்யை ஹரிஸ்ரேஷ்ட கச்ச சௌம்ய யதாஸுகம் |
ஸமானயஸ்வ வைதேஹீம் ராகவேன மஹாத்மனா ||

சுந்தர காண்டத்துல, இருபத்தி நாலாவது சர்க்கத்துல, ஒரு ஸ்லோகம்
दीनो वा राज्यहीनो वा यो मे भर्ता स मे गुरुः। तं नित्यमनुरक्तास्मि यथा सूर्यं सुवर्चला ।।

सर्वान् लोकान् सुसंहृत्य सभूतान् सचराचरान्।
पुनरेव तथा स्रष्टुं शक्तो रामो महायशाः।।
ஸர்வான் லோகான் ஸுஸம்ஹ்ருத்ய ஸபூதான் ஸசராசரான் |
புனரேவ ததா ஸ்ரஷ்டும் ஷக்தோ ராமோ மஹாயஷா: ||



